Saturday, March 31, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவரங்கம்

திருவரங்கம் என்ற ஸ்ரீரங்கம்.

இந்த திரு தலத்தை திருமழிசை பிரான் பதினான்கு பாடல்களால் மங்களாசாசனம் செய்து
இருக்கிறார்.
இப்போ அந்த ஊர் ரொம்ப congested ஆகி விட்டது. ஊருக்குள் வண்டி நுழைய முடியாத
அளவுக்கு நெருக்கடி. திருமழிசை இருந்த காலத்தில் இந்த இடம் மிக ஒரு அருமையான இடமாய்
இருந்து இருக்கும்.

--------------------------------------------------------------------------------------------------
வெண்திரை கருங்கடல் சிவந்து வேவ முன் ஒரு நாள்
திண் திறர் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர்
எண் திசை கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே
----------------------------------------------------------------------------------------------------

பொருள்:

வெண்திரை = வெண்மையான நுரை கொண்ட

கருங்கடல் = கரிய கடலானது

சிவந்து வேவ = அரக்கர்கள் மற்றும் வானரங்கள் சண்டை இட்டபோது அவர்களின் இரத்தம்
கடலில் கலந்ததால் அந்த கடல் சிவந்து போக
முன் ஒரு நாள் = முன்பு ஒரு நாள்

திண் = திண்மையான, வலுவான

திறர் = திறமையான (வலு மட்டும் இருந்தால் மட்டும் போதாது, திறமையும் வேண்டும்)

சிலைக்கை = வில் கையில் கொண்டு (சிலை = வில் )

வாளி = அம்பு

விட்ட வீரர் = அம்பு விட்ட வீர்கள் (இராமனும் லக்ஷ்மணனும்)

சேரும் ஊர் =அவர்கள் வந்து சேரும் ஊர்

எண் திசை கணங்களும் = எட்டு திசையில் உள்ள பூத கணங்களும்

இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் = வேண்டி தீர்த்தம் ஆடும் ஊர்

வண்டு இரைத்த சோலை = வண்டுகள் ரீங்காரமிடும் சோலை

வேலி மன்னு = வயல்கள் நிறைந்த

சீர் அரங்கமே = திரு அரங்கம்

No comments:

Post a Comment