Tuesday, April 3, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - குலசேகரப் படி

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
------------------------------------------------------------------------------------------------
செடியாய வல்வினைகள் = செடி என்றால் பாவம் என்று ஒரு பொருள் உண்டு. செடி போன்ற, சிக்கல் நிறைந்த, ஒன்றிலிருந்து ஒன்று பிறக்கும் படியான வல் வினைகள்.

தீர்க்கும் திருமாலே = அந்த கொடிய வினைகளை தீர்க்கும் திருமாலே

நெடியானே! = உயர்ந்தவனே. உலகளந்த பெருமாள் அல்லவா அவன்.

வேங்கடவா! = திரு வேங்கட மலையின் மேல் உறைபவனே

நின்கோயி லின்வாசல் = உன்னுடைய கோயில் வாசலில்

அடியாரும் = அடியவர்களும்

வானவரு மரம்பையரும் = வானவரும், அரம்பையரும்

கிடந்தியங்கும் = கிடந்து இயங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே= படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே

இன்றும் கூட பெருமாள் கோயில் படிகளை "குலசேகரப் படி " என்று கூறும் வழக்கம் உள்ளது.

2 comments:

  1. Great poem.Pl.write written by which Alvazhar and some information about that Alvazhvar.Thanks for ur time.

    SRU

    ReplyDelete
  2. குலசேகர ஆழ்வார்

    ReplyDelete