Tuesday, April 3, 2012

திரு வாசகம் - திருச் சாழல்

கோவிலுக்குப் போகிறோம்.
கூட்ட நெரிசல் ஒரு புறம்.
பணம் பிடுங்கும் கூட்டம் மறுபுறம்.
வீடு நினைப்பு, வேலை, பிள்ளைகள், என்று ஆயிரம் கவலை.
இதில் பக்தி எங்கே வரும்.

ஏதோ பக்தி உள்ளவர்கள் போல நாமும் போகிறோம்.

இது நமக்கு மட்டும் அல்ல, மாணிக்க வாசகருக்கும் தான்..

-------------------------------------------------------------------------------
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்
ஆடகசீர் மணிக் குன்றே இடையறா அன்பு உனக்கு என்
ஊடகத்தே நின்று உருகத் தந்து அருள் எம் உடையானே
--------------------------------------------------------------------------------


நானும் உன் அடியார் போல நடித்து அவங்களுக்கு நடுவே நானும் சொர்க்கம் (வீடு )
புக எண்ணி ரொம்ப வேகமா வருகிறேன். உன் மேல் இடைவிடாத
அன்பு என் உள் இருக்க அருள் புரியேன் என்று வேண்டு கிறார்.

மணி வாசகருக்கே இந்தப் பாடு என்றால் நாம் எல்லாம் எம் மாத்திரம் ?

திருச் சாழல் என்ற திருவாசகத்தில் உள்ளது மேல் சொன்ன பாடல்.

1 comment:

  1. நா.நவராஜ்September 22, 2021 at 12:05 PM

    இப்பாடல் திருச்சாழலில் அல்ல, திருச்சதகத்தில் உள்ளது. ஐயா. உங்கள் எழுத்துக்கள் நன்றாக உள்ளது.

    ReplyDelete