Tuesday, April 3, 2012

கம்ப ராமாயணம் - லக்ஷ்மண சேவை

லக்ஷ்மணன், எப்படி இராமனுக்கும் சீதைக்கும் பணிவிடை செய்தான் என்பதை கம்பர் சொல்வதை படிக்கும் போது நம் கண்கள் பணிக்கும்.
-----------------------------------------------------------------------------------------
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும், வெய்து உயிர்ப்போடும், வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!- கண்கள் நீர் சொரிய, கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்; இமைப்பிலன் நயனம்’ என்றான்
----------------------------------------------------------------------------------------

பொருள்:

அல்லை = இருளை

ஆண்டு அமைந்த மேனி அழகனும் = விஞ்சும் கருமை நிறம் கொண்ட அழகனான இராமனும்

அவளும் = அவளும். இராமனுக்கு மட்டும் பெரிய அடை மொழி. சீதைக்கு ஒரே ஒரு வார்த்தை மட்டும் தான். அதுதான் மரியாதை. சொல்பவன் குகன். கேட்டவன் பரதன். இராமனின் மனைவியை மூன்றாம் மனிதனான குகன், பரதனிடம் சொல்லும் போது மிக சுருக்கமாக "அவள்" என்று முடித்துக் கொள்கிறான்.

துஞ்ச = தூங்க

வில்லை ஊன்றிய கையோடும் = வில்லை ஊன்றிய கையோடு காவல் காத்தான் என்பது ஒரு பொருள். நாட்கணக்கில், மாத கணக்கில் நின்றதால், சோர்ந்து விழாமல் இருக்கு "வில்லை ஊன்றி" நின்றான் என்பது மற்றொரு பொருள்.

வெய்து உயிர்ப்போடும் = சூடான மூச்சோடும்

வீரன் = வீரனான லக்ஷ்மணன்

கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்! = மலையை விட உயர்ந்த தோள்களை கொண்டவன்

கண்கள் நீர் சொரிய, = இரு கண்களிலும் நீர் வழிய (ஏன் நீர் வழிந்தது என்று அடுத்த வரியில் சொல்கிறான்)

கங்குல் = இரவின்

எல்லை காண்பு அளவும் நின்றான் = எல்லை காணும் அளவும் நின்றான். இருட்டில் ஒண்ணும் தெரியாது. இருட்டில் ஏதாவது ஆபத்து வருகிறதா என்று பார்ப்பது அந்த இருட்டின் எல்லை எங்கே இருக்கிறது என்று தேடுவதை போல இருக்கிறதாம்.

என்ன ஒரு கற்பனை.

இமைப்பிலன் நயனம்’ என்றான் = இமைக்காத விழிகளை கொண்டவன்.

கண் இமைக்காமல் இருந்தால் நீர் வரும் தானே ?

அது மட்டும் அல்ல, இந்த "இமைப்பில் நாயனத்தை" பின்னால் ஒரு இடத்தில் கம்பன் மறக்காமல் கொண்டு வருகிறான். அது எங்க தெரியுமா ?...

5 comments:

  1. What a character!!!!Enna pasam Raman mel..Is there any character like Lakshman in Tamil Literature?

    SRU

    ReplyDelete
  2. RS,
    Blog Archives section groups your blog on a time scale. If there is a way to, also provide grouping based on topics like Kambaramayanam, Thirukkural etc that will be awesome. Not sure whether that is supported. You may like to check
    Anbudan
    Balaji

    ReplyDelete
    Replies
    1. Actually tried. It is available. It can archieve based on time line only - month or day....:(

      RS

      Delete
  3. Have you not tagged your blogs according to topic? How can readers access blogs according to the tags?

    ReplyDelete