Tuesday, June 19, 2012

தேவாரம் - சொர்க்கம் இருப்பது இங்கே


தேவாரம் - சொர்க்கம் இருப்பது இங்கே


சொர்க்கம் எங்கே இருக்கிறது ? மேலே எங்கேயோ இருக்கிறதா ? அது வேறு உலகமா ?

ஒரு சமயம் நாவுக்கரசர் கைலாய மலைக்கு செல்ல விரும்பினார்.

நடந்தே சென்றார். வயதான காலத்தில் அவரால் முடியவில்லை.

சோர்ந்து விழுந்து விட்டார்.

அப்போது, ஒரு அடியவர் அவரிடம் "ஐயா, நீங்க ஏன் இப்படி கஷ்டப் படுகிறீர்கள்...இதோ இந்த குளத்தில் நீராடி வாருங்கள், உங்களுக்கு கைலாயத்தை நான் காட்டுகிறேன் என்றார்.

நாவுக்கரசரும் அந்த குளத்தில் மூழ்கி எழுந்தார். மூழ்கியது வட நாட்டில் ஏதோ ஒரு இடம்.

எழுந்தது திருவையாறு என்ற இடத்தில்.

நாவுக்கரசருக்கு மிகுந்த ஆச்சரியம்.

எப்படி ஒரு சுவடும் இல்லாமல் இங்கு வந்தோம் என்று.

குளத்தை விட்டு வெளியே வந்து பார்க்கிறார்.

அங்கே எல்லா உயிர்களும் ஆணும் பெண்ணுமாய் வருவதை பார்த்தார். 

அவருக்குள் ஏதோ நிகழ்ந்தது.

அனைத்தும் இறைவனும் இறைவியும் போல அவருக்கு தோன்றியது. 

இதுவரை காணாத ஒன்றை கண்டதாக அவரே கூறுகிறார்.

தேவாரத்தில், இந்த பத்து பாடல்கள் மிக முக்கியமான பாடல்களாக கருதப்படுகிறது. 

அதில் இருந்து ஒரு பாடல்

மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.


மாதர்பிறை = அழகிய பிறை போன்ற

கண்ணியானை = தலையில் அணியும் ஒரு அணிகலன் (அர்த்தநாரீஸ்வரர்)

மலையான் மகளொடும் = பார்வதியோடு

பாடி = பாடி

போதொடு= மலர்களோடு

நீர்சுமந்தேத்தி, = அபிஷேக நீரினை சுமந்து செல்லும் பக்தர்கள்

புகுவார் = செல்வார்கள்

அவர்பின் புகுவேன் = அவர்கள் பின்னே நானும் செல்வேன்

யாதும் சுவடு = எந்த வித சுவடும்

படாமல் = இல்லாமல்

ஐயாறு அடைகின்றபோது = திருவையாறு அடைகின்ற போது (கைலாய 
மலை அருகில் இருந்து)

காதல் மடப்பிடியோடு = காதல் கொண்ட பெண் யானையுடன்

களிறு வருவன கண்டேன். = ஆண் யானை வருவதை கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் = கண்டேன், அவரின் பாதம்

கண்டறியாதன கண்டேன். = இதுவரை கண்டு அறியாத ஒன்றை கண்டேன்


2 comments:

  1. I think sorgam is not a place. It is a concept. As appar said we can feel கண்டறியாதன கண்டேன் anywhere. I don't know whether I am right. What is your point of view?

    ReplyDelete
    Replies
    1. You are absolutely right.

      The question is what prevents us from seeing it NOW ?

      Delete