Tuesday, July 31, 2012

கம்ப இராமாயணம் - இராமன் இன்னொரு பெண்ணை தீண்டினானா ?


கம்ப இராமாயணம் - இராமன்  இன்னொரு பெண்ணை தீண்டினானா  ?


இராமன் ஏக பத்தினி விரதம் பூண்டவன். 

'இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்" என்ற விரதம் பூண்டவன். 

அவன் இன்னொரு பெண்ணை தீண்டி இருப்பானா ? அதுவும் காலால் ?

அகலிகை சாப விமோசனம் பெற்றது இராமன் திருவடி தீண்டியதால் என்று வால்மீகி குறிப்பிடுகிறார். 

ஆனால், கம்பன் அப்படி சொல்லவில்லை. இராமனின் கால் இன்னொரு பெண்ணின் மேல் படுவதை அவனால் ஒப்பு கொள்ள முடியவில்லை. 

அவன் காலில் இருந்த ஒரு துகள் (தூசு) பட்டதால் அகலிகை சாப விமோசனம் பெற்றாள் என்று கூறுகிறான். 

கௌதமன் சாப விமோசனம் பெற அகலிகைக்கு சொன்ன பாடல் ...

Monday, July 30, 2012

கம்ப இராமாயணம் - பிறவிப் பெருங்கடலை தாண்ட


கம்ப இராமாயணம் - பிறவிப் பெருங்கடலை தாண்ட


சீதை அனுமனை கேட்கிறாள் "நீ எப்படி இந்த கடலை தாண்டினாய்"

அனுமன்: "அம்மா, உன் துணைவனின் (இராமனின்) திருவடிகளை ஒரு மனத்தோடு சிந்திப்பவர்கள், முடிவே இல்லாத மாயா என்ற கடலையே கடந்து விடுவார்கள். அது போல, அந்த திருவடியை மனத்தில் நினைத்துக் கொண்டு இந்த கடலை தாண்டினேன்

பிறவிப் பெருங்கடலையே தாண்டும் போது, இந்த கருங் கடல் எம்மாத்திரம் 

Sunday, July 29, 2012

கம்ப இராமாயணம் - கண்ணீர் கடல்


கம்ப இராமாயணம் - கண்ணீர் கடல் 


அசோக வனத்தில் சீதை சோகமே உருவாக இருக்கிறாள்.

அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருக்கிறது. 

அந்த கண்ணீர் கடல் போல் தேங்கி கிடக்கிறது.

அந்த கண்ணீர் கடலில், நீர் சுழல் வருகிறது. அந்த சுழலில் கிடந்து சுழன்று கரை காண முடியாமல் தவிக்கிறாள்.

அப்போது, அவளை அனுமன் சந்திக்கிறான். 

அனுமனுக்கும் சீதைக்கும் நடக்கும் உரையாடல் மிக மிக அருமையான இடம் கம்ப இராமாயணத்தில். 

அனுமனும் சீதையும் அதற்கு முன்னால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது கிடையாது.

இருவர் மனத்திலும் சந்தேகம் இழையோடுகிறது...அது சீதை தானா என்று அனுமன் மனத்திலும், இவன் இராமனின் தூதுவந்தானா என்று சீதையின் மனத்திலும் சந்தேகம் இல்லாமல் இல்லை.

அதே சமயம், அது சீதையாக இருக்க வேண்டும் என்று அனுமனும், இவன் இராம தூதுவனாக இருக்க வேண்டும் என்று சீதையின் மனத்திலும் ஒரு ஆதங்கமும் இருக்கிறது.

இப்படி சந்தேகத்திருக்கும் நம்பிக்கைக்கும் இடையே அவர்கள் உரையாடல் தொடர்கிறது.
படித்து இரசிக்க வேண்டிய இடம்.....

சீதை கேட்கிறாள், "இந்த கடல் ரொம்ப பெரியதாயிற்றே, நீ எப்படி அதை தாண்டி வந்தாய்" என்று.....

Friday, July 27, 2012

நந்திக் கலம்பகம் - தழுவாத போது....


நந்திக் கலம்பகம் - தழுவாத போது....


அவளை விட்டு நீங்கினால் சுடுகிறது, அவ கிட்ட போனால் குளிர்கிறது..இந்த வினோத தீயை இவள் எங்கு பெற்றாள் என்று வியக்கிறார் வள்ளுவர்.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் 
தீயாண்டுப் பெற்றாள் இவள்?

கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் என்னை விட்டு தனியே கானகம் போகிறேன் என்று சொல்கிறாயே, அந்த ஊழிக் கால தீ கூட உன் பிரிவை விட அதிகமாக சுடாது, "நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?" என்று பிரிவினால் வரும் சூட்டினை சொல்கிறார் கம்பர்.

பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்."

நந்திக் கலம்பகத்தில் காதலனை பிரிந்த காதலி, பிரிவின் வெம்மையால் தவிக்கிறாள். அவள் தோழிகள் அவள் மேல் கொஞ்சம் குளிர்ந்த சந்தனத்தை எடுத்து பூசுகிறார்கள். அது என்னவோ அவளுக்கு தீயை அள்ளி பூசிய மாதிரி இருக்கிறதாம்.....

அந்த இனிய பாடல், உங்களுக்காக...

Thursday, July 26, 2012

நந்தி கலம்பகம் - ஓடும் மேகங்களே


நந்தி கலம்பகம் - ஓடும் மேகங்களே


அவன் போர் முடிந்து அவன் காதலியை தேடி வருகிறான்.

அவன் உயிர் எல்லாம், மனம் எல்லாம் அவளிடம் ஏற்கனவே சென்று அடைந்து விட்டது.

அவன் தேர் எவ்வளவு வேகமாக சென்றாலும், அவனுக்கு என்னவோ அது ஓடாமல் ஒரே இடத்தில் நிற்பது மாதிரியே தெரிகிறது.

அவ்வளவு அவசரம்.

மேலே பார்க்கிறான். மேகங்கள் வேகமாக செல்வது போல் தெரிகிறது.

நமக்கு முன்னால் இந்த மேகங்கள் சென்று விடும் போல் இருக்கிறது, இந்த மேகங்களிடம் நாம் வரும் சேதியையை சொல்லி அனுப்பலாம் என்று அவைகளிடம் சொல்கிறான் 

"ஏய், மேகங்களே, ஓடாத தேரில் , ஒரு உயிர் இல்லாத வெறும் உடம்பு மட்டும் வருகிறது என்று என் காதலியிடம் சொல்லுங்கள்" .

அப்புறம் யோசிக்கிறான்.

இந்த மேகங்கள் எங்கே அவளை கண்டு பிடிக்கப் போகின்றன. அதுகளுக்கு ஆயிரம் வேலை, நம்ம வேலயத்தானா செய்யப் போகின்றன என்று ஒரு சந்தேகம் ..."அவளைப் பார்த்தால் சொல்லுங்கள்" என்று முடிக்கிறான். 

அந்த இனிமையான பாடல்....

Wednesday, July 25, 2012

கம்ப இராமயாணம் - ஆறாய் ஓடிய பூ அழுத கண்ணீர்


கம்ப இராமயாணம் - ஆறாய் ஓடிய பூ அழுத கண்ணீர்


கோதாவரி ஆற்றை "சான்றோர் கவி என கிடந்த கோதாவரி" என்று கூறிய கம்பன், அதில் எப்படி இவ்வளவு நீர் வந்தது என்றும் கூறுகிறான். 

இராம இலக்குவர்கள் கானகம் வந்த சோகத்தில், அந்த ஆற்றின் கரை ஓரம் உள்ள நீல மலர்கள் அழுத கண்ணீர் ஆறாய் ஓடியது என்கிறார் கம்பர்.

Monday, July 23, 2012

பழமொழி - அதுக்கு என்ன, செஞ்சுட்டா போச்சு !


பழமொழி - அதுக்கு என்ன, செஞ்சுட்டா போச்சு !


சில சமயம், நம் நண்பர்கள் நம்மிடம் உதவி கேட்கும் போது, நம்மால் முடியாவிட்டால் கூட "அதுக்கென்ன, செஞ்சுட்டா போச்சு" என்று நம்மால் முடியாத விஷயங்களில் கூட நாம் செய்து தருவதாய் உறுதி கூறி விடுவோம்.

அது போல், இல்லாத பொருளை கூட இருப்பதை போல சொல்லி தர்ம சங்கடத்தில் மாட்டி கொள்வது உண்டு.

"எனக்க அவனை தெரியும், இவனை தெரியும்...ஒரு போன் போட்டா போதும், காரியம் உடனே நடந்து விடும்..." என்று கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே சொல்லுவது உண்டு.

நாம் நினைப்போம் அப்படி சொல்வது நம் மதிப்பையும், செல்வாக்கையும் உயர்த்தும் என்று நினைப்போம்.

மாறாக, சொன்ன விஷயங்களை செய்ய முடியாமல் போகும் போது, அது நம் மதிப்பை குறைத்து விடும்.

ஆட்டு இடையன், ஆடு மாட்டிற்கு வேண்டும் என்று மரத்தில் இருந்து கொஞ்சம் இல்லை தழைகளை பறிப்பான். ஏதோ கொஞ்சம் தானே என்று இருக்கும். ஆனால் நாளடைவில், அது முழு மரத்தையும் மொட்டையாக்கி விடும்.

அதுபோல், அளவுக்கு அதிகமாய் உறுதி மொழி தருவது, நாளடைவில் நம் புகழ் மற்றும் செல்வாக்கு அனைத்தையும் அழித்து விடும்.

"இடையன் எறிந்த மரம்"


திணைமாலை நூற்றைம்பது - பூச் சூடிய எருமை


திணைமாலை நூற்றைம்பது - பூச் சூடிய எருமை

குழந்தைக்கு பூச் சூடி பார்க்கலாம்...

பெண்கள் பூ சூடி பார்த்து இருக்கிறோம்.

எருமை மாடு பூச் சூடி வந்தால் எப்படி இருக்கும் ?

ஒரு பெரிய கரிய எருமை. நீர் நிறைந்த குட்டையை பார்த்தது. அதுக்கு ஒரே குஷி. "ங்கா...." என்று கத்திக்கொண்டு தண்ணிக்குள் பாய்ந்தது.

சுகமாக தண்ணீரில் கிடந்து ஓய்வு எடுத்தது. மாலை நேரம் வந்தது. வீட்டுக்கு கிளம்பியது. அது வெளியே வரும்போது அதன் மேல் கொஞ்சம் சேறு ஒட்டிக் கொண்டது.
இருக்காதா பின்ன...நாள் எல்லாம் குட்டைல கிடந்தா ? 

அந்த சேற்றின் மேல் ஒரு சில மீன்கள் ஒட்டிக் கொண்டு வந்தன. 

அந்த எருமையின் மேல் ஒரு தவளை ஏறி உட்கார்ந்து கொண்டு வந்தது.

கூடவே சில குவளை மலர்களும் ஒட்டிக்கொண்டு வந்தன. 

அடடா...என்ன ஒரு கண் கொள்ளா காட்சி....!

Friday, July 20, 2012

முத்தொள்ளாயிரம் - விழியில் விழுந்து இதயம் நுழைந்து


முத்தொள்ளாயிரம் - விழியில் விழுந்து இதயம் நுழைந்து


தோழி: "சரி, என்ன வெட்கம்...கொஞ்சம் நிமிந்து பாரு என்ன...அடடா...ரொம்ப தான் வெட்கப்படுறா"
அவள்: ம்ம்ம்ம் 
தோழி: சரி கண்ணை திற ... வெட்கப் படுற உன் கண்ண நான் பாக்கட்டும்
அவள்: ம்ம்ம்ம்
தோழி: அட இது என்ன புது ஸ்டைல்...முகத்த கையால மறைச்சிகிட்டு...சினிமா கதாநயாகி மாதிரி...
அவள்: கைய எடுக்க மாட்டேன்...எடுத்தா கண் வழியா என் நெஞ்சுக்குள் போன அவன் அதே மாதிரி வெளிய போயிருவான்...
தோழி: சரி தான் ... ரொம்ப தான் முத்தி போச்சு காதல் பைத்தியம்...இன்னைக்கே உங்க அம்மா கிட்ட சொல்லிற வேண்டியது தான்......

பாடல்: 

Thursday, July 19, 2012

இராமாயணம் - கேட்ட வரமும் கேட்காத வரமும்


இராமாயணம் - கேட்ட வரமும் கேட்காத வரமும்


ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது; ‘ எனப் புகன்று நின்றாள்;
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.

அவள் கேட்டது இரண்டு வரங்கள்.

"என் மகன் அரசாள வேண்டும், சீதையின் துணைவன் வனம் ஆள்வது"

கேட்டது இரண்டு வரம். ஆனால் அவள் இராமனிடம் சொன்ன போது, இதில் இல்லாத மேலும் சிலவற்றை சேர்த்துக் கொள்கிறாள்....

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் ஜாக்கிரதை


நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் ஜாக்கிரதை


வீட்டில் காவலுக்கு நாய் வைத்து இருப்பவர்கள் "நாய் ஜாக்கிரதை" என்று போர்டு மாட்டி இருப்பார்கள்.

"இங்கு காவலுக்கு நாய் இருக்கிறது. பார்த்து வாருங்கள். ஜாக்கிரதையாய் இருங்கள்" என்று வருபவர்களை எச்சரிக்கை விடுவார்கள்.

பேருந்து நிலையம், புகை வண்டி நிலையம் போன்ற பொது இடங்களில் "பிக் பாக்கெட் ஜாக்கிரதை" என்று எழுதி வைத்து இருப்பார்கள். 

நம்மாழ்வார் அது மாதிரி "பெருமாள் ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை விடுகிறார்.

இந்த பெருமாள் இருக்கிறாரே அவரிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்.

உங்கள் மனதையும், உயிரையும் நீங்கள் அறியாமலே அவன் எடுத்துக் கொள்வான், சரியான கள்வன்.

மனதை திருடுவது மட்டும் அல்ல, திருடிய பின், அந்த இடத்தில் தன்னை இட்டு நிரப்பி விடுவான்.

உங்களுக்கு நீங்கள் இழந்தது கூட உங்களுக்குத் தெரியக் கூட தெரியாது....எனவே அவனிடம் ஜாக்கிரதையாய் இருங்கள். என்று அன்பாக எச்சரிக்கார்...

அந்தப் பாசுரம் 

இராமாயணம் - தசரதன் இராமனை காட்டுக்குப் போகச் சொல்லவில்லை


 இராமாயணம் - தசரதன் இராமனை காட்டுக்குப் போகச் சொல்லவில்லை


கைகேயி இரண்டு வரம் கேட்டாள். 

தசரதன் முதலில் இரண்டு வரத்தையும் தர மறுக்கிறான். 

கைகேயி பிடிவாதம் பிடிக்கிறாள். 

தசரதன் இறங்கி வருகிறான். "இரண்டாம் வரத்தை கேட்காதே, உன் மகன் பரதன் வேண்டுமானால் அரசாளட்டும், இராமன் காட்டுக்குப் போக வேண்டாம் " என்று கெஞ்சுகிறான்.

"மண்ணே கொள் நீ; மற்றையது ஒன்றும்
    மற ‘என்றான்."

கைகேயி மறுக்கிறாள். இரண்டு வரமும் வேண்டும் என்கிறாள்.

கடைசியில் தசரதன் "ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம்" என்கிறான். இவ்வரங்கள் என்று பன்மையில் சொல்லவில்லை. 

பின்னால், "என் சேய் காடாள" என்று சொல்கிறான். 

அதற்குப் பின் அவன் இறந்து போகிறான். அவன் இராமனை பார்க்கவே இல்லை.

கம்பனோ, வால்மீகியோ அந்த சந்திப்பை நடக்க விடவில்லை.

தசரதன் தன் வாயால் இராமனை கானகம் போகச் சொல்லவில்லை.

கைகேயிக்கும் தசரதனுக்கும் இடையே நடந்தது யாருக்கும் தெரியாது.

எனவே, தசரதன் இராமனை பார்த்து "நீ கானகம் போ" என்று சொல்லவில்லை.

தசரதன் அவன் மந்திரிகளிடமும் சொல்லவில்லை.

எனவே, இராமன் கானகம் போக வேண்டியது ஒரு அரசு ஆணை அல்ல.

கணவன் மனைவிக்கு இடையே நடந்த ஒரு உரையாடல்.

இராமனை, அவனிடமே, நேரடியாக,  கானகம் போகச் சொன்னது கைகேயிதான். தசரதன் அல்ல.

அதுவும் எப்படி சொல்கிறாள்...? ... வாங்கிய வரத்தோடு இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்கிறாள்...

அது என்ன ? வாங்கிய வரம் ? வாங்காத வரம் ?



Wednesday, July 18, 2012

பழமொழி - விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்கலாமா ?


பழமொழி - விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்கலாமா ?


நாம் பொருள் செலவழித்து நிறைய விஷயங்களை பெறுகிறோம் - படிப்பு, புத்தகங்கள், சினிமா, club , வெளி இடங்களை சுற்றிப் பார்த்தல், தொலைக்காட்சி,  இத்யாதி, இத்யாதி....

இவற்றால் நமக்கு என்ன பலன்  ? இவை நமக்கு நன்மை தருமா ? அல்லது இவற்றால் நமக்கு தீமையா ? தீமை என்றால் அதை விடுவது அல்லவா புத்திசாலித்தனம்?

பொருள் கொடுத்து இருள் வாங்குவதை பற்றிப் பேசுகிறது இந்த பாடல்...

Monday, July 16, 2012

பழமொழி - சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க


பழமொழி - சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க


பெரிய பலன்களை அடைய வேண்டுமானால் சில சிறிய தியாகங்களை செய்யத்தான் வேண்டும்.

ஒன்றை இழக்காமல் இன்னொன்றைப் பெற முடியாது.

எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு

அதைத்தான் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பது என்று சொல்லுவார்கள். 

இந்த பிறவியில் நல்லன செய்து, ஏற்பவர்க்கு இட்டு, அவன் தாள் வணங்குதல் போன்ற சிறய "வினைகளை" செய்தால், வீடு பேறு, மோட்சம் பேன்ற பெரிய பலன்கள் கிடைக்கும் என்கிறது இந்த பழமொழிப் பாடல்

பாடல்:

திருவாசகம் - பெண் இன்பமும் பேரின்பமும்


திருவாசகம் - பெண் இன்பமும் பேரின்பமும்


இறைவனுக்கு நம்மை போல் ஒரே ஒரு குணம் தான் இருக்குமா ? இல்லை, அந்த குணங்கள் மாறிக் கொண்டே இருக்குமா ?

இறைவன் இப்படி தான் இருப்பான் என்று சொல்லிவிட்டால், அவன் எப்படி
எல்லாம் இருக்க மாட்டான் என்பதும் அதில் அடங்கிவிடும்.

குணம் ஒன்று இல்லாதவனை எப்படி சுட்டிக் காட்டுவது?

மாணிக்க வாசகர் சொல்கிறார்....

அவனை உணர முடியும், அறிய முடியாது. உணர்வதும் எளிதல்ல. அவன்
சிற்றம்பலத்தில் இருப்பான்.

ஒவ்வொருமுறை அவனை உணரும் போதும் புது புது உணர்ச்சிகள் தோன்றுகிறது; அது எப்படி என்றால்,

என் மனைவியிடம் ஒவ்வொரு முறை பெறும் இன்பம் போல் புதிது புதியதாய் இருக்கிறது" என்கிறார்.

அதே மனைவி தான், அதே இன்பம் தான் என்றாலும், ஏதோ ஒன்று புதியதாய் இருப்பது போல், இறை அனுபவமும் புதிது புதியதாய் தோன்றும் என்கிறார்.

அந்தப் பாடல்:

Saturday, July 14, 2012

கம்ப இராமாயணம் - கற்பு என்றால் கல்வியா ?


கம்ப இராமாயணம் - கற்பு என்றால் கல்வியா ?


முந்திய Blog  இல் "கற்பழிக்க திருவுள்ளமே" என்ற திரு ஞானசம்பந்தரின் பாடல் வரிகளில் கற்பு என்பதற்கு கல்வி என்று ஒரு பொருளும் உண்டு என்று பார்த்தோம்.   

அந்த பொருளில் வேறு எங்காவது அதை உபயோகப் படுத்தி இருக்கிறார்களா ?

கம்ப இராமாயணத்தில் ஒரு இடம்.

இராமனும், இலக்குவனும் கிட்கிந்தா மலை மேல் வருகிறார்கள்.

தூரத்தில் இருந்து அனுமன் பார்க்கிறான்.

இவர்களைப் பார்த்தால்  போர் செய்வதை தொழிலாகக் கொண்டவர் போல் இருக்கிறது, ஆனால் அவர்கள் மேனியோ தவ புரியும் முனிவர்கள் போல் இருக்கிறது, கையிலோ வில் இருக்கிறது, என்று மனம் குழம்பி, மறைந்து நின்று, தன் அறிவால் ஆராய்ந்து பார்த்தான். 

இங்கு கற்பு என்பது "கல்வி", "அறிவு", "ஞானம்" என்ற பொருளில் வருகிறது.

பாடல்

திருவாசகம் - மாணிக்க வாசகரின் கவி நயம்


திருவாசகம் - மாணிக்க வாசகரின் கவி நயம்


இறைவா, நான் மோசமானவன் தான். ஆனால், அதற்காக நீ என்னை கைவிட்டு விட்டால், நான் உன்னை பற்றி எல்லா உண்மையும் சொல்லி விடுவேன்....நீ யார் தெரியுமா ?

எல்லோரும் அமுதினை உண்டபோது, நீ நஞ்சை உண்டாய்...இது புத்திசாலித்தனமா?

உடம்பு எல்லாம் அழகாக இருந்தாலும், உன் கழுத்து மட்டும் கருப்பா இருக்கே...இது ஒரு அழகா?

உனக்கு என்று ஒரு குணமும் கிடையாது...நீ ஒரு குணம் கெட்டவன்...

நீ ஒரு மானிடன்...

உன் தலையில் உள்ள நிலவோ தேய் பிறை

நீ ரொம்ப பழமையானவன்

என்று எல்லோரிடமும் உன்னை பற்றி பழி சொல்லுவேன்...

அப்படி எல்லாம் சொல்லாம இருக்கணும்னா, நீ என்னை கை விடாமல் காப்பாற்று"

என்று மணி வாசகர் கூறுகிறார். 


அந்த திருவாசகப் பாடல்....

Friday, July 13, 2012

குறுந்தொகை - கையளவு மனதில் கடலளவு காதல்


குறுந்தொகை - கையளவு மனதில் கடலளவு காதல்


இதயம் என்னவோ ஒரு கை அளவுதான்.

அதில் காதல்  கடலளவு வந்தால் எப்படி அது கொள்ளும்?

நெஞ்சம் கொள்ளாத ஆனந்தத் தவிப்பு.

கேட்கும் ஒலி எல்லாம் அவனாக.

பார்க்கும் ஒளி எல்லாம் அவனாக.

உடலோடு உரசும் உணர்வெல்லாம் அவனாக...

உண்ணும் வெற்றிலையும், பருகும் நீரும் கண்ணன் என்று ஆழ்வார்கள் சொன்னது மாதிரி...

பசி போகும்...பாடல் வரும்...

தூக்கம் போகும்...ஏக்கம் வரும்...

நாள் எது, தேதி என்று தெரியாது...

இத்தனை அவஸ்தையும் இந்த சின்ன மனதிற்குள்...தாங்க முடியுமா ?

அவள், தோட்டத்தில் உள்ள பலா மரத்தைப் பார்க்கிறாள்.

பெரிய பலாப் பழம் பழத்து தொங்குகிறது.

அதன் காம்போ மிக மிக சிறியது...

அவள் மனம் நினைக்கிறது...

"ம்ம்ம்...இந்த பலாப் பழம் போன்ற என் பெரிய இனிய காதலுக்கு, அதை தாங்கி நிற்கும் சின்ன காம்பு போல என் மனம்"...


Thursday, July 12, 2012

தனிப் பாடல் - அறம் பொருள் இன்பம்


தனிப் பாடல் - அறம் பொருள் இன்பம்


அறம் பொருள் இன்பம் இந்த மூன்றையும் மிக எளிய முறையில் ஔவையார் விளக்குகிறார்


தேவாரம் - ஞான சம்பந்தர் கற்பழிக்க சொன்னாரா?


தேவாரம் - ஞான சம்பந்தர் கற்பழிக்க சொன்னாரா?


தேவராத்திலும், நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் பிற மத மற்றும் சமய  துவேஷம் இல்லாமல் இல்லை. 

சைவ வைணவ சண்டை ஊர் அறிந்தது.

தேவாரம் பாடப்பட்ட காலத்தில் சைவ சமண உரசல்கள் உச்சத்தில் இருந்தது.

அரசனின் ஆதரவோடு ஒரு சமயத் தலைவர்கள் மற்ற சமயத் தலைவர்களை கண்டித்ததும் தண்டித்ததும் உண்டு.

இங்கு, சைவ சமயத்தை சேர்ந்த ஞான சம்பந்தர் சமண மதத்தவர்களை வென்ற பின், அம்மத பெண்களை கற்பழிக்க இறைவன் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்.....

என்ன...தூக்கி வாரி போடுகிறதா ? பால ஞானியான ஞான சம்பந்தர் பெண்களை கற்பழிக்க நினைப்பாரா ? அதற்க்கு இறைவனின்  அருளை நாடுவாரா ?

குழப்பமாய் இருக்கிறதா ?

கற்பு என்பதற்கு "கல்வி" என்று ஒரு பொருளும் உண்டு. அவர்களின் தவறான கல்வி அறிவை, அறியாமையை அழிக்க இறைவன் அருளை நாடினார் என்று பொருள் கொள்வாரும் உண்டு.

ஞான சம்பந்தர் போன்ற அருளாளர்கள் மக்களின் அறியாமையை போக்கி, அவர்களை நல்வழி படுத்தும் அருள் கொண்டவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம். 

படித்துப் பாருங்கள்.

பாடல்: 

Wednesday, July 11, 2012

மூவருலா - என்னையே நான் அறியேன்


மூவருலா - என்னையே நான் அறியேன்

காதலித்துப் பாருங்கள். மேலும் அழகாக ஆவீர்கள்.

கன்னம் மெருகேறும்.

கண்ணில் ஒளி தோன்றும். உதட்டோரம் ஓயாத புன்னகை மலரும்.

கலையும் முடிகள் காற்றோடு கதை பேசும்.

வானம் தேன் சிந்தும். தென்றல் கவரி வீசும்.

உங்களையே உங்களுக்கு அடையாளம் தெரியாமல் போகும்.

நானே நானா? யாரோ தானா என்று மெட்டு உதட்டோரம் மொட்டுவிடும்

மூவருலா என்ற இலக்கியத்தில், இங்கே ஒரு பெண், தன்னை தானே பார்த்து வியக்கிறாள்.


"ஐயோ, நான் எப்படி மாறிவிட்டேன்...எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லையே, என் காதலன் எப்படி என்னை அடையாளம் கண்டுகொள்வான்" என்று கவலைப் படுகிறாள்

காதலித்ததால் என்னவெல்லாம் கவலை...!

பாடல்


Tuesday, July 10, 2012

திரிகடுகம் - சொத்து அழியும் வழிகள்


திரிகடுகம் - சொத்து அழியும் வழிகள்


ஒருவனுடைய செல்வம் ஏன் அழிகிறது ?

தன்னை தானே புகழ்ந்து தற்பெருமை பேசுதல், எதற்க்கெடுத்தாலும் கோபப்படுதல், கண்ணில் கண்ட பொருளை எல்லாம் வாங்க வேண்டும் என்று ஆசைப் படுதல் இந்த மூன்றும் ஒருவனின் செல்வத்தை அழிக்கும் படைகளாகும்.

பாடல்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனதினால் நினைக்கலாமே


நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனதினால் நினைக்கலாமே


நம் வாழ்க்கை பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது.

நிற்கவோ, யோசிக்கவோ எதற்குமே நேரம் இல்லை.

இதில், கோவிலுக்குப் போக எங்கே நேரம் இருக்கப் போகிறது. அதிலும் ஸ்ரீரங்கம் போன்ற சிறந்த புண்ணிய தலங்களுக்குப் போக நேரம் இருக்கவே இருக்காது.

நேரம் இல்லை என்ற சாக்கு இன்று நேற்று அல்ல, தொண்டரடிப் பொடியாழ்வார் காலத்தில் இருந்தே இருந்திருக்கிறது.

கோவிலுக்குப் போக நேரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இறைவனை மனதினால் நினைக்கலாமே ? அதற்க்குக் கூடவா நேரம் இருக்காது என்று கேட்கிறார்.

பாசுரம்


Monday, July 9, 2012

ஆசாரக் கோவை - இறைவனை தொழுவது எப்படி ?


ஆசாரக் கோவை - இறைவனை தொழுவது எப்படி ?


அதி காலையில் பல் விளக்கி, முகம் கழுவி தெய்வத்தை அவரவர் சமய முறைப்படி தொழ வேண்டும்.

மாலையில் இறைவனை தொழும் போது, நின்று கொண்டே தொழக் கூடாது. தரையில் அமர்ந்து தொழ வேண்டும்.

பாடல்



கம்ப இராமாயணம் - எல்லாம் அவளே


கம்ப இராமாயணம் - எல்லாம் அவளே


காதல் விநோதமானது.

காதல் வயப்பட்டவர்களுக்கு பார்க்கும் பொருள் எல்லாம் அவர்களின் காதலனோ அல்லது காதலியாகவோ தான் தெரியும்.

"பார்க்கும் இடம் எல்லாம் நந்தலாலா உந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா" என்று பாரதி சொன்ன மாதிரி.

கம்ப இராமாயணத்தில், சீதையையை முதன் முதலாகப் பார்த்த பின், இராமன் அவள் நினைவாகவே வாடுகிறான்.

"அவளுக்கு என் மேல் கருணையே இல்லையா? இப்படி என்னை வாட்டுகிராளே...எனக்கு எல்லாம் ஒரே குழப்பமாய் இருக்கிறது. நிற்கும் பொருள், அசையும் பொருள் எல்லாம் அவளாகவே தெரிகிறது எனக்கு" என்று புலம்புகிறான்.

அந்தப் பாடல்


Sunday, July 8, 2012

திருவாசகம் - ஒண்ணுக்குள் ஒண்ணு


திருவாசகம் - ஒண்ணுக்குள் ஒண்ணு


சிவனுக்குள் சக்தி

சக்திக்குள் சிவம்.

சிவனும் சக்தியும் அடியாரின் மனதுக்குள்

அடியார் தொண்டர் கூட்டத்திற்குள்....

ஒண்ணுக்குள் ஒன்றாய் செல்லும் சைவ சித்தாந்த நெறியை மணி வாசகப் பெருந்தகை விளக்குகிறார்....


கம்ப இராமாயணம் - காமம் ஏன் சுடுகிறது ?


கம்ப இராமாயணம் - காமம் ஏன் சுடுகிறது ?


சுடுவதற்கு நெருப்பு வேண்டும்.

நெருப்பு வேண்டும் என்றால், விறகு போன்ற எரிபொருள் வேண்டும்.

காமத்தில் ஏது எரிபொருள் ?

கம்பன் சொல்கிறான் எது எரிபொருள் என்று....காமன் வீசும் அம்புகள் விறகாக காமத் தீ கொளுந்து விட்டு எரிகிறதாம்.

இராமனை உப்பரிகையில் இருந்து பார்த்த பின், சீதை விரக தாபத்தில் வேகிறாள்.

திருக்குறள் - நகைச்சுவை உணர்வு


திருக்குறள் - நகைச்சுவை உணர்வு


திருவள்ளுவர் ஏதோ ரொம்ப சீரியசானவர்  என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படியல்ல.
அவர் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவராய் இருக்கிறார். அது மட்டும் அல்ல, நம்மையும் சிரித்து வாழ சொல்கிறார்.

நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கு இந்த உலகம் பகலே இல்லாத நீண்ட இரவாய் இருக்கும் என்கிறார்.

நகைச்சுவை என்றால் எப்ப பார்த்தாலும் பல்லை காட்டிக் கொண்டு இருப்பது அல்ல. எப்ப சிரிக்க வேண்டும், எதற்கு சிரிக்க வேண்டும், எவ்வளவு சிரிக்க வேண்டும் என்று ஒரு கணக்கு வேண்டும்.

சிரிப்பிலும் ஒரு வல்லமை வேண்டும்.

Friday, July 6, 2012

நீதி நெறி விளக்கம் - ஆணியே பிடுங்க வேண்டாம்


நீதி நெறி விளக்கம் - ஆணியே பிடுங்க வேண்டாம்


சில விஷயங்கள் தோன்றுவதை விட தோன்றாமல் இருப்பதே மேல் என்று குமர குருபரர் நீதி நெறி விளக்கத்தில் கூறுகிறார்.

கம்ப இராமாயணம் - யாரும் மறக்க முடியாத பெயர்


கம்ப இராமாயணம் - யாரும் மறக்க முடியாத பெயர்


இராமன் என்று ஒருவன் இருந்தானா இல்லையா என்று ஒரு சந்தேகம் எழலாம்.

இராமாயணம் என்று ஒன்று நடந்ததா என்று கூட சந்தேகம் எழுப்பப் படலாம்.

ஆயிரம் சந்தேகம் இருந்தாலும், இராம நாமம் என்ற ஒன்று என்றென்றும் மக்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

அதை இன்றல்ல, கம்ப இராமாயணம் எழுதும்போதே கம்பர் சொல்கிறார் "யாராலும் மறக்கிலா நாமம்" என்று.

மும்மை சால் உலகுக்கெலாம் மூல மந்திரம் அது. 

இராமன் கானகம் போகிறான். 

"ஆ" அழுதன, அன்றலர்ந்த "பூ" அழுதன என்று ஊரே சோகத்தில் ஆழ்ந்த காட்சியை காட்ட வந்த கம்பன் சொல்லுவான்....

அயோத்தி அரண்மனையில் இருந்த யானைகளும், "இனி நாமும் இந்த மண்ணை விட்டு செல்வோம்" என்று கிளம்பின.

Thursday, July 5, 2012

கம்ப இராமாயணம் - சிறை இருந்த சீதை


கம்ப இராமாயணம் - சிறை இருந்த சீதை


அசோக வனத்தில் சீதை இருந்த நிலையை கம்பன் காட்டுகிறான்.

கல்லையும் கரைக்கும் கவிதைகள் அவை. 

படித்துப் பாருங்கள். நாம் பட்ட அல்லது படும் துன்பங்கள் தூசு என்று உணர்வீர்கள்.

நீதி நெறி விளக்கம் - கல்வியும் காமமும்


நீதி நெறி விளக்கம் - கல்வியும் காமமும் 


நீதி நெறி விளக்கம் என்ற நூல் குமர குருபரர் எழுதியது.

தமிழில் உள்ள அற நெறி நூல்களில் மிக மிக அருமையான நூல்.

கல்வி, ஆரம்பிக்கும் போது கஷ்டமாய் இருக்கும்.

இரவு பகலாய் கண் விழித்து படிக்க வேண்டும்.

மனப்பாடம் செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் பரீட்சை எழுத வேண்டும்.

முதலில் கடினமாய் இருந்தாலும், பின் நல்ல வேலை கிடைத்து, நிறைய பணம் சம்பாதிக்கும் போது, கல்வியால் புகழ் வரும் போது சந்தோஷமாய் இருக்கும். கல்வியின் தொடக்கம் கடினம், முடிவு இனிமை.

காமம், முதலில் இன்பம் தருவது போல் இருக்கும். ஆனால் போகப் போகப் அதனால் வரும் துன்பம் பெரிது. "நெடுங்காமம்" என்கிறார். இதற்கு இரண்டு பொருள் சொல்கிறார்கள்.

ஒன்று, வரம்பற்ற காமம். ஒரு வழிமுறை இல்லாத காமம். விதிகளை மீறிய காமம். முறையற்ற காமம்.

இன்னொன்று, காலங்கடந்து வரும் காமம்.

உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.


Wednesday, July 4, 2012

கம்ப இராமாயணம் - கம்பனின் அடக்கம்


கம்ப இராமாயணம் - கம்பனின் அடக்கம்


வால்மீகி எழுதிய இராமாயணம் 24000 பாடல்களை கொண்டது.

அதை கம்பர் தமிழில் எழுதினார். கம்ப இராமயாணம் 11000 பாடல்களை கொண்டது.

வால்மீகி எழுதியதை தான் தமிழில் எழுத முற்பட்டதை "எல்லோரும் வாய் அசைத்து பேசுகிறார்களே என்று ஊமையனும் பேச முற்பட்டது போல் வால்மீகி எழுதியதை நான் தமிழில் எழுத முற்படுகிறேன்" என்று அவை அடக்கத்துடன் சொல்கிறார் கம்பர். 

கம்பனே அப்படி சொல்கிறான் என்றால், வால்மீகி எப்படி பட்ட கவிஞராய் இருக்க வேண்டும். 

நாம் பெற்ற பேறு, இந்த மாதிரி மகான்கள் பிறந்த நாட்டில் நாமும் பிறந்து இருக்கிறோம்.
நாம் பெற்ற பேறு, அவர்கள் எழுதி வைத்ததில் ஒரு சில வரிகளையாவது நாம் வாசிக்கிறோம்.

கம்பனின் அந்த அவையடக்கப் பாடல்:

  

Tuesday, July 3, 2012

கந்தர் அநுபூதி - இழந்து பெற்ற இன்பம்


கந்தர் அநுபூதி - இழந்து பெற்ற இன்பம்


நமக்கு செல்வம், பொருள், உறவு இது எல்லாம் சேர சேர இன்பம் பெருகும்.
அல்லது, நாம் அப்படி நினைப்போம்.

ஆனால், அருணகிரி நாதரோ, எல்லாம் இழந்து, தன்னையும் இழந்தபின்னும் நலம் பெற்றதாய் கந்தர் அனுபூதியில் சொல்கிறார்.

இழப்பதில் ஒரு சுகமா ?

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

என்பார் வள்ளுவர். எதில் இருந்து எல்லாம் மனிதன் நீங்கி நிற்கிறானோ, அதனால் அவனுக்கு துன்பம் வராது என்கிறார்.

பற்று குறைய குறைய துன்பம் குறையும்.

துன்பம் குறைய குறைய இன்பம் நிறையும்.

எல்லாம் இழந்த பின் என்ன இருக்கும் ? "நான்" என்ற ஒன்று இருக்கும்.
அதையும் இழந்து விட்டால் ? எவ்வளவு இன்பம் இருக்கும் ?

கந்தர் அனுபூதியில் உள்ள மிகச் சிறந்த பாடல் என்று கீழ் வரும் பாடலை சொல்லுவார்கள்.


திருக்குறள் - நிலையாச் செல்வம்


திருக்குறள்- நிலையாச் செல்வம்




செல்வம் நிலையானது அல்ல. அது வரும், இருக்கும், போகும்.




அது பற்றி ரொம்பவும் கவலைப் படக் கூடாது.




மேலும், செல்வம் இருக்கும் போது அதை நல்ல வழிகளில் செலவிட வேண்டும்.




இதை கீழ் காணும் குறளில் சொல்கிறார் வள்ளுவர். மிக மிக ஆழமான, அருமையான குறள்.

திருவாசகம் - நினைத்தால் நெஞ்சம் உருகும்


திருவாசகம் - நினைத்தால் நெஞ்சம் உருகும்


நாம் யாரோடு உறவு / நட்பு வைத்துக் கொள்ள ஆசைப் படுவோம்?

நம்மை விட அழகில், படிப்பில், செல்வத்தில், பதவியில் உயர்ந்தவர்கள் அல்லது சமமானவர்களுடன் உறவோ நட்போ கொள்ள ஆசை படுவோம்.

நம்மை விட கீழே உள்ளவர்களிடம் நாம் உறவோ நட்போ பாராட்டுவோமா ?

இறைவன் நம்மை விட அனைத்து விதத்திலும் உயர்ந்தவன்.

அவன் நம்மிடம் அன்போ, அருளோ பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை.

நம்மால் அவனுக்கு ஆகவேண்டியது என்ன ? ஒன்றும் இல்லை.

"தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை,
யார் கொலோ சதுரர்"

என்பார் மணி வாசகர்.

அப்படிப் பட்ட இறைவன், நமக்காக தன் நிலையில் இருந்து இறங்கி வந்து நமக்கு உதவி செய்யும் அருளை நினைத்தால், நம் மனம் உருகும் என்கிறார் மணி வாசகர்.

யோசித்துப் பாருங்கள்.

அறுவை சிகிச்சை மூலம் நம் ஒரு காலை அகற்ற வேண்டும் என்றால் ஒரு இலட்சம் செலவு ஆகும்.

எடுப்பதற்கே ஒரு இலட்சம் என்றால் அந்த காலை நமக்கு இலவசமாய் தந்தவனுக்கு எத்தனை இலட்சம் தரலாம் ?

இறைவனின் அருளை நினைக்க நினைக்க நம் சிந்தனை உருகும்.

"நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக" என்பார் அருணகிரி நாதர்.

சிந்தனையையை உருக்கும் அந்த திருவாசகப் பாடல் இங்கே...


Monday, July 2, 2012

நாலடியார் - மாலை எனை வாட்டுது


நாலடியார் - மாலை எனை வாட்டுது


இந்த மாலை நேரம் தான் காதலர்களை என்ன பாடு படுத்துகிறது.

இன்று நேற்று அல்ல, நாலடியார் காலத்தில் இருந்தே இந்த பாடு தான்.

அது ஒரு சின்ன கிராமம். சில பல வீடுகள்.

இங்கே ஒரு இளம் பெண், அவளுடைய வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பூக்களை கொண்டு மாலை தொடுத்துக் கொண்டு இருக்கிறாள்.

நேரமோ மாலை.

சாலையில், வேலை முடிந்து மக்கள் எல்லாம் வீடு திரும்பி கொண்டு இருக்கிறார்கள்.

அவளுக்கு, அவளின் காதலன் நினைவு வருகிறது.

அவனுடன் இருந்த இனிய நாட்கள் மனதில் ஓடுகிறது.

பிரிவு சோகம் அவளை சோர்வுறச் செய்கிறது.

கையில் கட்டிகொண்டிருந்த மாலை நழுவி கீழே விழுகிறது.

"ஹ்ம்ம்...இந்த மாலையெல்லாம் கட்டி என்ன பிரயோஜனம்..அவன் இல்லையே என்று ஏங்குகிறாள்.."

பாடலைப் படித்துப் பாருங்கள்...மாலையில் அந்த மாலையில் வந்த காதல் புரியும்....


Sunday, July 1, 2012

நளவெண்பா - எதிர்மறையில் ஒரு நயம்


நளவெண்பா - எதிர்மறையில் ஒரு நயம்


நளன் ஆண்ட நகரை சிறப்பித்து கூற வருகிறார் புகழேந்தி.

பொதுவாக கவிஞர்கள் அது நன்றாக இருந்தது, இது நன்றாக இருந்தது என்று வர்ணித்து கூறுவார்கள்.

புகழேந்தி சற்று வித்தியாசமாய் சிந்திக்கிறார்.

இந்த நாட்டில் சில விஷயங்கள் கொஞ்சம் கோணலாய் இருக்கின்றன, சில சோர்ந்து போய் இருக்கின்றன, சில வாய் விட்டு அரட்டுகின்றன, சில கலங்குகின்றன, சில நேர் வழி விட்டு செல்கின்றன என்று சொல்கிறார்.
படிக்கும் நமக்கு, "அட, அப்படி என்ன இருக்கு...அதில் என்ன சிறப்பு" என்று சிந்திக்க தோன்றுகிறது அல்லவா ?

திருஅருட்பா - இறைவா இது உனக்கு சம்மதமா?


திருஅருட்பா - இறைவா இது உனக்கு சம்மதமா?


வள்ளலார் இறைவனிடம் சண்டை போடுகிறார். நீதி கேட்கிறார்.

"நீ எனக்கு அருள் புரியாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்" என்று முறையிடுகிறார்.