Sunday, July 8, 2012

கம்ப இராமாயணம் - காமம் ஏன் சுடுகிறது ?


கம்ப இராமாயணம் - காமம் ஏன் சுடுகிறது ?


சுடுவதற்கு நெருப்பு வேண்டும்.

நெருப்பு வேண்டும் என்றால், விறகு போன்ற எரிபொருள் வேண்டும்.

காமத்தில் ஏது எரிபொருள் ?

கம்பன் சொல்கிறான் எது எரிபொருள் என்று....காமன் வீசும் அம்புகள் விறகாக காமத் தீ கொளுந்து விட்டு எரிகிறதாம்.

இராமனை உப்பரிகையில் இருந்து பார்த்த பின், சீதை விரக தாபத்தில் வேகிறாள்.

நோம்; உறும் நோய் நிலை நுவலகிற்றிலள்;
ஊமரின். மனத்திடை உன்னி. விம்முவாள்;
காமனும். ஒரு சரம் கருத்தின் எய்தனன்-
வேம் எரிஅதனிடை விறகு இட்டென்னவே.

நோம்; = நோவாள்

உறும் நோய் = தான் உறுகின்ற நோய்

நிலை = நிலையையை

நுவலகிற்றிலள் = சொல்ல முடியாமல் தவித்தாள் (நுவலுதல் = சொல்லுதல்)

ஊமரின். மனத்திடை = ஊமையையை போல மனதிற்குள்ளேயே

உன்னி. விம்முவாள்; = எண்ணி விம்முவாள்

காமனும். = மன்மதனும்

ஒரு சரம் = ஒரு அம்பை

கருத்தின் எய்தனன்- = சரியாக எய்தான்

வேம் எரிஅதனிடை = வேகும் நெருப்பில்

விறகு இட்டென்னவே. = விறகை இட்டது போல

இப்போ தெரிகிறதா, ஏன் காமம் சுடுகிறது என்று ....


No comments:

Post a Comment