Sunday, August 12, 2012

நள வெண்பா - எரியம் இரவு


நள வெண்பா - எரியம் இரவு


அவள் தனித்து இருக்கிறாள். இரவு சுடுகிறது.

ஏன் என்று யோசிக்கிறாள்.

பகல் எல்லாம் இந்த சூரியன் இருக்கிறது. இராத்திரி எங்கே போகிறது ? இந்த இரவு சூரியனை விழுங்கி இருக்குமோ ? அதுனால தான் இப்படி இந்த இரவு கொதிக்கிறதோ?

இல்லைனா, என் மார்பில் இருந்து கிளம்பிய சூடு காரணமாய் இருக்குமோ ? 

ஒரு வேளை, இந்த நிலவு குளிர்ச்சிக்கு பதில் வெப்பத்தை தர ஆரம்பித்து விட்டதோ?

ஏன்னே தெரியலையே..இந்த இரவு இப்படி எரிகிறதே....



வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை அனலில் கொளுந்தியோ - திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா


வெங்கதிரோன் = வெம்மையான கதிரவன்

தன்னை விழுங்கிப் = தன்னை விழுங்கி

புழுங்கியோ = சூடு ஆனதோ ?

கொங்கை அனலில் = என் மார்பில் இருந்து வரும் சூட்டில்

கொளுந்தியோ = கொளுத்தப்பட்டோ

திங்கள் = நிலவில் 

விரிகின்ற வெண்ணிலவால் =  இருந்து வரும் வெண்ணிற கதிராலா ?

வேகின்ற தேயோ = வேகின்றதே

எரிகின்ற தென்னோ இரா = எரிகின்றதே இந்த இரவு


No comments:

Post a Comment