Wednesday, February 20, 2013

திருக்குறள் - உறக்கமும் விழிப்பும்


திருக்குறள் - உறக்கமும் விழிப்பும் 


உலகிலேயே மிகவும் எளிமையான வேலை எது என்று கேட்டால் தூங்குவது என்று சட்டென்று சொல்லி விடுவீர்கள் 

தூங்குவது போலவே இன்னொரு காரியமும் இருக்கிறது.

அது தான் இறப்பது. 

தூங்குவது போலும் சாக்காடு.

இறப்பது என்பது தூங்குவதைப் போல என்கிறார் வள்ளுவர் 

அது எப்படி ? தூங்குனா காலைல முழிச்சுகுவோம்ல...செத்து போய்டா எப்படி முழிப்போம் ? என்று நீங்க கேட்பது வள்ளுவருக்கு கேட்டிருக்கிறது.

தூங்கி விழிப்பது போலும் பிறப்பு 

அப்படினுட்டார்....

நீங்க பிறந்தது தூங்கி   முழிச்ச மாதிரி. 

தூங்கினது வேற ஆளு, முழிச்சது வேற ஆளுன்னு நீங்க சொல்றீங்க.

வள்ளுவர் அப்படி நினைக்கலியே. தூங்கியதும், விழித்ததும் ஒரே ஆள் தான், வேற வேற உடல். ஆள் ஒண்ணு தான் என்கிறார். 

தூங்குவதும் விழிப்பதும் உடலுக்கு எப்படி தினம் நடக்கும் சர்வ சாதாரணமான ஒரு நிகழ்ச்சியோ அது போல இறப்பதும் பிறப்பதும் உயிருக்கு சாதாரணமான நிகழ்ச்சி. 

இறப்பதும், பிறப்பதும் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும் ஒரு சுழற்சியான நிகழ்ச்சி. 

இதுக்கு போய்  அலட்டிக்கலாமா ?

உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (339)

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு 



 

No comments:

Post a Comment