Friday, February 22, 2013

திருக்குறள் - அடக்கம்

திருக்குறள் - அடக்கம்



காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனிநூஉங் கில்லை உயிர்க்கு



நம்மிடம் யாரவது வந்து உங்களிடம் என்னென்ன சொத்துக்கள் (உடமைகள்) இருக்கிறது  கேட்டால் நாம என்ன சொல்லுவோம்...

...கொஞ்சம் பணம், நகை, நட்டு, வீடு, பிளாட்டு, பங்கு பத்திரம், வங்கி கணக்கு அப்படின்னு ஒரு பெரிய பட்டியல் தருவோம்.

வள்ளுவர் இன்னொரு பட்டியல் வைத்து இருக்கிறார் ...எது எல்லாம் ஒருவனுக்கு உடமைகளாக இருக்க வேண்டும் என்று....

- அறிவுடைமை
- அருளுடைமை
- ஒழுக்கமுடைமை
- ஆள்வினை உடைமை (personality )
-  பண்புடைமை
- நாணம் உடைமை
- பொறை உடைமை

இது எல்லாம் இல்லாமல் மத்த உடமைகளால் என்ன பயன் ?

இதனுடன் சேர்த்து அடக்கமுடைமை என்று அடக்கத்தையும் ஒரு உடமையாக, ஒரு சொத்தாக வள்ளுவர் கூறுகிறார்.

அடக்கம் என்றால் எதுவோ எதிலோ அடங்குவது.

அது தானே அடக்கம்.

அடக்கம் ஒரு உடமை என்றால் அது ஒரு சொத்து போல. ஒரு பொருள் போல.

பொருள் என்றால் அது சிறந்த பொருளா இல்லை வேண்டாத ஒரு பொருளா என்ற கேள்வி எழும் அல்லவா.

வள்ளுவர் சொல்கிறார், அடக்கம் என்பது ஒரு நல்ல, விலை மதிக்க முடியாத பொருள்.

அது காக்க பட வேண்டிய ஒரு பொருள். அலட்சியமாக தூக்கி எரிந்து விடக் கூடிய பொருள் அல்ல.

காக்க பொருளா அடக்கத்தை என்கிறார் வள்ளுவர். ஒரு பொருளை போல அடக்கத்தை காக்க வேண்டும்.

சரி அப்படி அடக்கத்தை காத்தால் நமக்கு என்ன கிடைக்கும் ?

ஆக்கம் அதனிநூஉங் கில்லை உயிர்க்கு

அப்படி காப்பாற்றினால் உயிர்க்கு அதை விட சிறந்த ஆக்கம் இல்லை.

எதை அடக்க வேண்டும் ?

புலன்களை, மனதை அடக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நாக்கை.

யாகாவாராயினும் நா காக்க என்றார் வள்ளுவர்.

எல்லா புலன்களையும் காக்க வேண்டும். ஒரு வேளை  எல்லாவற்றையும் காக்க முடியா விட்டால், நாக்கை மட்டுமாவது காக்க வேண்டும்.

கண்டதையும் சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவும்
கண்டதை பேசி நம்மையும் பிறரையும் சங்கடத்தில் வைக்காமல் இருக்கவும் குறைந்த பட்சம்  நாக்கையாவது அடக்க வேண்டும்.

அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில் ,ஒரு குறளுக்குள் இவ்வளவு விஷயம். மொத்தம் 1330 குறள் இருக்கு.

அவ்வளவு தான் நான் சொல்வேன். 

3 comments:

  1. WOW!அடக்கம் - Good interpretation.

    ReplyDelete
  2. அடக்கமாக இருப்பது சரி, ஆனால் "குடத்தில் இட்ட விளக்காக" இருப்பது சரியா? இதைப் பற்றி வள்ளுவர் ஏதாவது சொல்லியிருக்கிறார?

    ReplyDelete
  3. அடக்கமாக இரு என்றால் என்ன?

    ReplyDelete