Monday, February 4, 2013

இராமாயணம் - எல்லாம் விளையாட்டு


இராமாயணம் - எல்லாம் விளையாட்டு 


நாம் எதற்காக வேலைக்குப் போகிறோம் ?

பணம் சம்பாதிக்க, புகழுக்காக, மன திருப்திக்காக, சேவை செய்ய என்று பல காரணங்கள் இருக்கலாம்.

கடவுள் ஏன் இந்த உலகையும், நம்மையும் படைத்தார் ?

அவர் இந்த வேலையயை செய்ய வேண்டிய காரணம் என்ன ? சும்மா இருக்க வேண்டியது தானே ? இதை செய்து அவருக்கு ஆக வேண்டியது என்ன ? பணமா ? புகழா ? நல்ல பெயரா ? ஒண்ணும்  இல்லை.

பின்ன எதுக்கு படைத்து, காத்து, அழித்து ... இவர் இதை எல்லாம் செய்யவில்லை என்றால் யாரவது கேட்கப் போகிறார்களா ? இல்லையே ? 

எதுக்காக வீணா இந்த வேலைய இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யணும் ?

கம்பன் சொல்கிறான் - அது அவனுக்கு விளையாட்டு . வட  மொழியில் லீலை என்று சொல்வார்கள். 

இந்த உலகமே ஒரு விளையாட்டு தான். இறைவனின் விளையாட்டு. குழந்தை எப்படி பொம்மைகளுடன் விளையாடுமோ அப்படி அவன் விளையாடுகிறான் 

குழந்தை ஏன் விளையாடுகிறது என்று யாராவது கேட்பார்களா ? அது பாட்டுக்கு விளையாடும். விளையாடுவது விளையாட்டுக்கவே. வேறு ஒரு குறிக்கோளும் கிடையாது 

விளையாட்டை யாராவது ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வார்களா ? விளையாட்டு என்பதே ஒரு மகிழ்ச்சிக்காக. 

விளையாட்டுக்ச் சொன்னேன் அதை போய்  இப்படி சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளலாமா என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா. ? 

இந்த உலகமே ஒரு விளையாட்டு. நீங்களும் நானும், நம்மை சுற்றி நடப்பது எல்லாமும் இறைவனின் விளையாட்டு. 

இதை போய்  ஏன் இவ்வளவு சீரியஸ் ஆக எடுத்துக் கொள்கிறீர்கள். 

இந்த விளையாட்டில் சில சமயம் நீங்கள் விளையாடுகிறீர்கள், சில சமயம் நடுவராக இருக்கிறீர்கள் சில சமயம் பந்து பொருக்கி போடுகிறீர்கள் சில சமயம் பார்வையாளராக இருக்கிறீர்கள்....எல்லாம் விளையாட்டு தான்....

எப்போதும்  சிரித்துக் கொண்டே இருங்கள், சந்தோஷமாக இருங்கள்...

இந்த வாழ்கையே விளையாட்டு தான்.....

பாடல் 


உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.


பொருள் 

உலகம் யாவையும் = இந்த உலகங்கள் அனைத்தையும். உங்களையும் என்னையும் சேர்த்துதான் 

தாம் = அவரே 

உளவாக்கலும் = உண்டாகியும் 
.
நிலைபெறுத்தலும் = அவற்றை நிலை பெறுமாறு செய்தும் 

நீக்கலும் = பின் அவற்றை நீக்கியும் 


 நீங்கலா = எப்போதும் இவற்றை விட்டு நீங்காமல் 

அலகு இலா = அலகு  என்றால் அளவு, ஒரு யூனிட். அப்படி எதுவும் ஒரு அளவு கிடையாது. அவர் பாட்டுக்கு விளையாடுவார் 

விளையாட்டு உடையார் =  விளையாட்டு உடையவர். காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி என்பார் மணிவாசகர். முழுப் பாடலும் கீழே. 

 அவர் = அவர் 

தலைவர் = தலைவர் 

அன்னவர்க்கே சரண் நாங்களே = அவரிடம் நாங்கள் சரண் அடைகிறோம். 


((ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.))

3 comments:

  1. இந்த உலகமும், வாழ்க்கையும், எல்லாமே விளையாட்டா?! அப்படியானால், நூறாயிரம் பேர் போர்களில் இறப்பதும், வறுமையும், நோயும், எல்லாமே விளையாட்டா?? அபத்தம்!!

    ReplyDelete
    Replies
    1. There is no evil.
      It is either good or preparation for good.

      ~Aurobindo

      Delete
    2. அரபிந்தோ சொல்வதும் அபத்தமே!

      Delete