Tuesday, March 26, 2013

கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 3


கந்தர் அலங்காரம் - ஆனந்தத் தேன் - பகுதி 3



அருணகிரி நாதர் அருளிச் செய்தது கந்தர் அலங்காரம்.

அதில்   ஒரு பாடல்

ஒளியில் விளைந்த உ யர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பியவா, முகமாறுடைத் தேசிகனே.

சந்தக் கவியான அருணகிரியின் பாடல்களை சீர் பிரிக்காமல் உணர்ந்து கொள்வது கடினம்

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்தின் உச்சியின் மேல் 
அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேனை அனாதியிலே 
வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை 
தெளிய விளம்பியவா, முகம் ஆறு உடை தேசிகனே 

முதல் இரண்டு அடிகளுக்கும் அர்த்தம் சென்ற இரண்டு ப்ளாகுகளில் பார்த்தோம்.

இன்று மூன்றாவது அடி


வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை

அந்த ஆனந்தத்தேன் எங்கு விளைந்தது தெரியுமா ?

தனிமையில் விளைந்தது.....

எப்படிப்பட்ட தனிமை 

வெறும் தனிமை...

அது என்ன வெறும் தனிமை...?

தனிமைக்கும் , வெறும் தனிமைக்கும் என்ன வித்தியாசம் ? 

நீங்க உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கு ஒரு விடுமுறை தினத்தன்று போகிறீர்கள் என்று  வைத்துக் கொள்வோம் ? அங்க யார் இருப்பா ? யாரும் இருக்க மாட்டார்கள். வாசலில் ஒரு காவல் காரன் மட்டும் தனியா இருப்பான்.

அவன் தனியாகவா இருக்கிறான் ? பள்ளிக் கூட கட்டிடம் , அங்கு உள்ள மரம் செடி கோடி எல்லாம் இருக்கிறதே ...எப்படி தனியாக இருப்பான் ?  

தனி என்றால் வேறு மனிதர்கள் யாரும் இல்லாமல் என்று குறிப்பு. அதாவது தன்  இனம் இல்லாதது தனிமை.  அந்த புகை வண்டி நிலையத்திற்கு சென்றேன்..ஒரே ஒரு என்ஜின் மட்டும் தனியா நின்று கொண்டிருந்தது என்று சொல்லுவோமே அத போல. 

இனம் இல்லாதது தனிமை. மற்ற பொருள்களும் இல்லை என்றால் ? ஏதுமற்ற தனிமை? 

பள்ளிக்கூட கட்டிடம் இல்லை, மரம் செடி கொடிகள் இல்லை, தரை இல்லை, காற்று இல்லை, வெளிச்சம் இல்லை அந்த காவல் காரன் மட்டும் இருந்தான் என்றால் அது வெறும் தனி 


அந்த வெறும் தனிமையில் விழைந்தது பாழ்... பாழ் என்றால் ஒன்றும் இல்லாதது....

அதோ தெரிகிறதே அது ஒரு பாழடைந்த கட்டிடம், அது ஒரு பாழ் நிலம் (பாலை நிலம்) என்று கூறுவது போல. 

பாழ் நிலம், என்றால் அதை அடுத்து வேறு எதாவது இருக்கும். 

அருணகிரி சொல்லுகிறார் ...

வெறும் பாழ் 

அப்படி என்றால் அந்த பாழை தாண்டி ஒன்று இல்லை.

வெறும் பாழ் பெற்ற வெறும் தனிமை.....


அந்த வெட்ட வெளியில் விளைந்த பாழில் இருந்து விளைந்த ஆனந்தத் தேன் 


என்னய்யா இது பாழ், தனிமை, தேன் அது இதுனு போட்டு ஒரே குழப்பமா இருக்கே..இது எல்ல்லாம் யாரு சொன்னா ? இதை எல்லாம் எப்படி நம்புறது ? 

அதையும் சொல்கிறார் அருணகிரிநாதர் 











No comments:

Post a Comment