Tuesday, March 12, 2013

திருக்குறள் - நோயற்ற வாழ்வு

திருக்குறள் - நோயற்ற வாழ்வு

நவீன மருத்துவம், நோய்க்குக் காரணம் நுண்  கிருமிகள் என்று கண்டு சொல்கிறது. பக்டீரியா, வைரஸ், அமீபா என்ற நுண் கிருமிகள்தான் உடலில் நோயை உண்டு பண்ணுகின்றன என்று கூறுவதும் மட்டும் அல்ல, அவற்றை குணமாக்கவும் மருந்துகளை தருகின்றன.

ஆனால், வள்ளுவர் அப்படி சொல்லவில்லை.

மழையில் நனைந்தால் ஒருவனுக்கு சளி பிடிக்கிறது, இன்னொருவனுக்கு ஒன்றும் ஆவது இல்லை. கிருமிகள் தான் காரணம் என்றால் இருவருக்கும் சளி பிடிக்க வேண்டுமே ? ஏன் நிகழ்வது இல்லை ?

ஒரு சாலையோர உணவு விடுதியில் இருவர் உணவு உண்கிறார்கள். ஒருவனுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது, இன்னொருவனுக்கு ஒன்றும் ஆவதில்லை. ஏன் ?

தகாத உறவு கொண்டால் எய்ட்ஸ் என்ற நோய் வரும் என்கிறார்கள். சிலருக்கு வருகிறது . சிலருக்கு வருவதில்லை ஏன் ?

நோய் எதிர்ப்பு தன்மை (Immunity ) இருந்தால் கிருமிகள் ஒன்றும் செய்யாது. நோய் எதிர்ப்பு தன்மை குறைந்தால் கிருமிகள் தாக்கி நோய் வரும்.

இப்போது சொல்லுங்கள் நோய்க்குக் காரணம் கிருமிகளா ? நமது நோய் எதிர்ப்பு தன்மையில் உள்ள குறைபாடா ?

வள்ளுவர் நோய் எதிர்ப்பு தன்மை பற்றி கூட சொல்லவில்லை. நோய்க்கு அடிப்படை காரணம் மூன்று விஷயங்கள். அவை கூடினாலோ குறைந்தாலோ நோய் வரும். இப்படி யோசிப்போம், அவை கூடினாலோ, குறைந்தாலோ, நமது நோய் எதிர்ப்பு தன்மை குறையும், அப்படி நோய் எதிர்ப்பு தன்மை குறைந்தால், கிருமிகள் தாக்கி நோய் வரும்.

நவீன மருத்துவம் கண்டுகொண்டதை விட இரண்டு படி மேலே போகிறார் வள்ளுவர்.

கிருமி தாண்டா நோய்க்கு காரணம். கிருமி உன்னை தாக்கக் காரணம் உன் நோய் எதிர்ப்பு தன்மையில் உள்ள குறைபாடு. அந்த குறைபாட்டுக் காரணம் மூன்று விஷயங்கள்....

அது என்ன தெரியுமா ? சொல்கிறேன் கேள் என்று ஆரம்பிக்கிறார் வள்ளுவர்....

கேட்போமே ....






No comments:

Post a Comment