Friday, March 22, 2013

இராமாயணம் - செம்மை சேர் நாமம்


இராமாயணம் - செம்மை சேர் நாமம் 


வாலியின் உடலில் இராமனின் அம்பு பாய்ந்தது. தன்  மேல் அம்பு எய்தது யார் என்று அறிய வாலி அந்த பாணத்தை தன் வாலினால் தடுத்து நிறுத்துகிறான். அம்பில் "இராம" என்று எழுதி இருந்தது.  

இராமன் மறைந்து இருந்து அம்பு எய்தான். வாலி ஆயிரம் கேள்விகள் கேட்கப் போகிறான்.

அதன் தொடக்கத்திலேயே கம்பன் எய்தது யார் சொல்கிறான்....வாலியின் பார்வையில் இருந்து.....


மும்மை சால் உலகுக்கு எலாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை ராம என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கன்டான்.


இந்த பாடலை இந்த ப்ளாகில் முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன்.

கடைசி வரியை மட்டும் எடுத்துக் கொள்வோம்


செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கன்டான்.

அது என்ன செம்மை சேர் நாமம் ?

அம்பு வாலியின் உடலில் புகுந்தது ? அவன் அதை இழுத்தான்...அதில் வாலியின் இரத்தம் இருந்தது...எனவே அந்த அம்பு சிவப்பாக இருந்தது...

அதனால் செம்மை சேர், சிவப்பு சேர்ந்த என்று பொருள் கூறுவார் உள்ளர்.




வாயினால் உண்மை சொல்வது வாய்மை எனப்படும்
மெய்யால் உண்மையை செய்வது மெய்மை எனப்படும்
உள்ளத்தால் உண்மையை நினைப்பதும் சொல்வதும்  உண்மை எனப்படும் 

மனம் வாக்கு காயம் மூன்றும் சேர்ந்து உண்மையை சொல்வது செம்மை.

அந்த செம்மை சேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்.

மனதாலும் வாக்காலும் மெய்யாலும் தவறு செய்யாதவன் இராமன் என்பதை முதலிலேயே  சொல்லாமல் சொல்லி விடுகிறான் கம்பன்.

செம்மை சேர் நாமம்


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சும்மா தவறு செய்யாதவன் என்று சொன்னால் போதாது. இராமன் மறைந்திருந்து அம்பு எய்ததைக் கம்பர் எப்படி சரிப்படுத்துகிறார்?

    ReplyDelete