Thursday, April 4, 2013

கந்தர் அலங்காரம் - கை வரும் தொண்டு - 1


கந்தர் அலங்காரம் - கை வரும் தொண்டு 


ஒரு வேலை செய்தால், அதற்கு உடனே பலன் கிடைத்தால் நல்லதா அல்லது ரொம்ப நாள் கழிச்சு பலன் கிடைத்தால் நல்லதா ? என்று கேட்டால் உடனே கிடைத்தால் நல்லது என்று தயங்காமல் பதில் சொல்லி விடுவீர்கள். 

ஆனால் இறைவனை வணங்கி வழி பட்டால் பலன் உடனே கிடைக்கிறதா ? இறந்த பிறகு, பலன் கிடைக்கும் (சொர்க்கத்தில்) அல்லது இறந்த பின் அடுத்த பிறவியில் கிடைக்கும் என்று சொன்னால் அது எப்படி ? இறைவனை இன்று வழிபட்டேன், எனக்கு இன்றே பலன் கிடைக்க வேண்டும் என்று யாரும் ஏன் கேட்பது இல்லை. இந்த மருந்தை சாப்பிடு, ஒரு நாப்பது அல்லது ஐம்பது வருடத்தில் உன் நோய் குணமாகிவிடும்...அப்படி குணமாகா விட்டால் அடுத்த பிறவியில் கட்டாயம் குணம் ஆகும் என்று ஒரு வைத்தியர் சொன்னால் அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள் ?  ஆனால் உங்கள் மதம் அப்படி சொன்னால் கேட்டுக் கொள்வீர்கள் தானே  ?

அருணகிரி நாதர் சொல்கிறார்....அப்படி எல்லாம் இல்லை ...இறைவனை வழி பட்டால் பலன் கை மேல் கிடைக்கும் என்று சொல்கிறார்....பிறவி கணக்கு அல்ல, வருட கணக்கு அல்ல, வார கணக்கு அல்ல, நாள் கணக்கு கூட அல்ல....உடனே கை மேல் பலன் என்று உறுதியாக கூறுகிறார்....

அவருக்கு கிடைத்ததாம்....

அப்படி அவர் என்ன பெரிதாக செய்து விட்டார் ? பசி அடக்கி, மூச்சு அடக்கி, முள் மேல் நின்று, தீக்கு நடுவில் தவம் செய்து இருப்பாரோ ?

பார்ப்போம் 

No comments:

Post a Comment