Thursday, April 18, 2013

சித்தர் பாடல் - அறம் செய்ய


சித்தர் பாடல் - அறம் செய்ய 


அறம் செய்வது, பசித்தவருக்கு அன்னம் இடுவது, ஏற்பவருக்கு இடுவது என்பது தமிழ் இலக்கியத்தில் எங்கும் பரவிக் கிடக்கிறது.

எங்காயினும் வரும் ஏற்பவருக்கு இட்டது என்பார் அருணைகிரி

பொருள் கொடுக்க முடியாவிட்டால் நாலு நல்ல சொல்லாவது தாருங்கள் என்பார் திருமூலர்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் பற்றி வள்ளுவரும் கூறுகிறார்

நாம் ஏன் தானம் செய்வது இல்லை ? அல்லது தான தர்மம் செய்வது ஏன் கடினமாக இருக்கிறது ?

இந்த பொருள் எல்லாம் என்னுடையது, நான் சம்பாதித்தது என்ற எண்ணம் இருக்கும் போது கொடுக்கும் மனம் வராது.

இவை எனக்கு என்னை விட ஒரு பெரிய சக்தியால் தரப் பட்டது என்று நினைத்தால் கொடுப்பது எளிதாகும்.

இருந்த சொத்தை எல்லாம் ஒரே இரவில் தானம் செய்த பட்டினத்தார் சொல்கிறார் ....

பாடல்


பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை  பிறந்துமண்மேல் 
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில் 
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது 
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.

சீர் பிரித்த பின்

பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை பிறந்து மண் மேல் 
இறக்கும் போது கொண்டு போவது இல்லை இடை நடுவில் 
குறிக்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்க அறியாது 
இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே 

(குலாமர்  = உலோபி, கஞ்சன்)



2 comments:

  1. பணம் இருப்பது கொடுப்பதற்கே என்கிறார். ஆனால், செய்வதற்கு மிகவும் ஞானம் வேண்டுமே, என்ன செய்வது!

    ReplyDelete
  2. கச்சி ஏகம்பனே ithu kanchipuram vaaz ekambram sivan thaanay,

    ReplyDelete