Wednesday, June 26, 2013

திருக்குறள் - பொறுத்தல் வேண்டும்

திருக்குறள் - பொறுத்தல் வேண்டும் 



அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னை தோண்டுபவர்களையும் தாங்கும் நிலத்தை போல ஒருவரை இகழ்பவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல் தலை சிறந்தது.

அம்புடுதான்.

இதைசொல்ல வள்ளுவர் வேண்டுமா ? யார் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். வள்ளுவர் ஆழமில்லாமல் எதையும் சொல்ல மாட்டாரே....இந்த குறளில் அப்படி ஒன்றும் ஆழம் இருப்பது மாதிரி தெரியவில்லையே. ரொம்ப சாதரமான குறள் மாதிரிதானே இருக்கு ?

கொஞ்சம் ஆராய்வோம்.

அகழ்வாரை தாங்கும் நிலம்....நிலம் தன்னை புண் படுத்தி கடப்பாரை, மண் வெட்டி போன்ற கூறிய ஆயுதங்களால் தோண்டுபவர்களை பதிலுக்கு தண்டிப்பது இல்லை.

அது மட்டும் அல்ல...அப்படி தோண்டுபவர்களுக்கு நல்லதும் செய்கிறது நிலம். கொஞ்சம் தோண்டி  விதை நட்டால் செடியும் மரமும் தழைத்து அதில் இருந்து நிழலும் காயும் கனியும்   கிடைக்கச் செய்கிறது.

மேலும் தோண்டினால் சுவையான நிலத்தடி நீர் தந்து தாகம் தீர்கிறது. உயிர் காக்கிறது.

இன்னும் தோண்டினால் தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தருகிறது.

வள்ளுவர் காலத்தில் பெட்ரோல் டீசல் இது எல்லாம் கிடையாது. இப்போது அதுவும் கிடைக்கிறது.

தனக்கு கெடுதல் செய்பவர்களை பொறுப்பது மட்டும் அல்ல, நிலம் அவர்களுக்கு நல்லதும் செய்கிறது.

அது போல, உங்களுக்கு தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.

சரி, வள்ளுவர் "இகழ்வார்" என்று தானே சொல்லி இருக்கிறார். இகழ்தல் என்றால்   தரக் குறைவாக பேசுதல், திட்டுதல், வைதல்...எனவே நம்மை பற்று இகழ்வாக பேசுபவர்களை  மட்டும் பொறுத்தால் போதும்...நமக்கு உடல் ரீதியாகவோ, உள்ள ரீதியாகவோ தீமை செய்பவர்களை பொறுக்கும் படி வள்ளுவர் சொல்லவில்லையே  என்று வாதிக்கலாம்.

அதற்குத் தான் "அகழ்வாராய் தாங்கும் நிலம்" என்ற உதாரணம். நம்மை திட்டுபவர்கள் மட்டும் அல்ல, மற்ற செயல்களால் துன்பம் தந்தவர்களையும் பொறுக்க  வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

மேலும் சொல்லுகிறார்....





1 comment: