Tuesday, October 22, 2013

கம்ப இராமாயணம் - இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு

கம்ப இராமாயணம் -  இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு


கோசலை அரண்மனையின் மேலிருந்து பார்க்கிறாள். தூரத்தில் இராமன் வருகிறான். இந்நேரம் முடி சூட்டி இருக்க வேண்டும். தலையில் கிரீடம் இல்லை. இன்னும் கொஞ்சம் கிட்டத்தில் வருகிறான். அவன் முடி புனித நீரால் நனையவில்லை என்பது தெரிகிறது. இராமன் இன்னும் கொஞ்சம் கிட்ட வருகிறான். வந்தவன் கோசலையை வணங்குகிறான். அப்படியே அன்பால் குழைந்து வாழ்த்துகிறாள். பின் கேட்கிறாள் முடி புனைவதற்கு ஏதேனும் தடை உண்டோ என்று கேட்டாள்.

பாடல் 

புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?' என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி
'நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள்


பொருள் 

புனைந்திலன் மௌலி = மணி மகுடம் சூடவில்லை 
குஞ்சி = தலை முடி 
மஞ்சனப் புனித நீரால் = மஞ்சள் நிறம் கொண்ட புனித நீரால் 

நனைந்திலன்; = நனையவில்லை 
என்கொல்?' = என்ன ஆகி இருக்கும் 
என்னும் ஐயத்தால் = என்ற சந்தேகத்த்தால் 
நளினம் பாதம் = அவளுடைய நளினமான பாதத்ததை 
வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும் = பொன்னாலான கழலை அணிந்த இராமன் வணங்கைய போது 
குழைந்து வாழ்த்தி = மனம் நெகிழ்ந்து வாழ்த்தி 
'நினைந்தது என்? = நினைத்தது என்ன 
இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள் = மணிமுடி சூட இடையூறு உண்டோ என்று கேட்டாள் 

இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா ?


1 comment: