Sunday, October 20, 2013

இராமாயணம் - வாழ்க்கைப் பாடம் - ஒரு முன்னோட்டம்

இராமாயணம் - வாழ்க்கைப் பாடம் - ஒரு முன்னோட்டம் 


இராமாயணம் போன்ற காப்பியங்களை படிக்கும் போது , கதை, அதன் போக்கு, கதை சொல்லும் பாங்கு, பாத்திர படைப்பு என்று இரசிக்கும் போது, அவற்றில் இருந்து சில பாடங்களும் கற்றுக் கொள்ளலாம். 

காப்பியங்கள் சம்பவங்களை சற்று மிகைப் படுத்தி கூறினாலும், அது நம் மனதில் படியா வைக்க கையாளும் ஒரு யுக்தி என்று கொள்ள வேண்டும். 

நமக்கு ஒரு சிக்கல் வந்தால், இந்த சூழ்நிலையில் இராமன் இருந்தால் என்ன செய்திருப்பான், சீதை இருந்திருந்தால் எனன் செய்திருப்பாள் என்று சிந்திக்கும்போது அந்த சிந்தனைகள் நமக்கு வழி காட்டியாக அமையலாம். 

வீட்டில், சில சமயம் சிக்கல்கள் வரலாம். வரும். 

அந்த மாதிரி சமயங்களில் குடும்பத்தில் உள்ளவர்கள் சிக்கலில் உள்ளவர்களை திட்டுவதோ, பயப் படுத்துவதோ கூடாது. அது அந்த சிக்கல்களை மேலும் அதிகப் படுத்திவிடும். 

சில வீடுகளில் , பிரசாய் என்று வந்து விட்டால் , அதை விவாதிக்கிறேன் பேர்வழி என்று கணவனும் மனைவியும் மேலும் சண்டை போட்டு அந்த பிரச்சனையோடு கணவன் மனைவி பிரச்சனையும் சேர்த்த்து விடுவார்கள். 

பிரச்சனையை எப்படி அணுகுவது, எப்படி விவாதிப்பது, எப்படி தீர்வு காண்பது என்று கம்பன் நமக்கு பாடம் எடுக்கிறான். 

இராமன், முடி புனைவது மாறிப் போகிறது. காட்டிற்கு போக வேண்டும். 

இது பிரச்னை. 

இதில் மிகவும் பாதிக்கப்பட போபவர்கள் யார் யார் ?

கோசலை (தாய்), சீதை (மனைவி), இலக்குவன் (தம்பி)...

இயவர்களிடம் இராமன் இந்த பிர்ச்சனையை எப்படி எடுத்துச் சொல்லி சமாளிக்கிறான் என்று பார்ப்போம். 

அதற்கு முன்னால் சற்று யோசித்துப் பாருங்கள் 

கோசலை வருந்துவாள், தயரதனிடம் அவள் சண்டை பிடிக்கலாம்....

சீதை இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லலாம்....

இலக்குவன் சண்டை போடலாம். 

கதை எப்படி போனது என்று நமக்குத் தெரியும்....கதை வேறு மாதிரியும் போய் இருக்கலாம்...அப்படி போகாமல் இராமன் எப்படி மாற்றினான் என்று பார்ப்போம். 

அதற்கு அவனுக்கு மற்றவர்கள் எப்படி துணை செய்தார்கள், அல்லது அவனுக்கு தடையாக இருந்தார்கள்...என்றெல்லாம் நாம் பார்க்கப் போகிறோம்...

No comments:

Post a Comment