Sunday, November 24, 2013

அற்புதத் திருவந்தாதி - அறிவானும் அறிவிப்பானும்


அற்புதத் திருவந்தாதி - அறிவானும் அறிவிப்பானும் 

கீதை சொல்கிறது - எல்லாவற்றிலும் தன்னை காண்பானும், தன்னை எல்லாவற்றிலும் காண்பானும் உயர்ந்த யோகி என்று. 

இந்த உலகம் நம்மால் உருவாக்கப் பட்டது. "பன்னிய  உலகினில் பயின்ற பாவத்தை நன்னின்று அறுப்பது நமச்சிவாயவே " என்பார் நாவுக்கரசர். 

இது பன்னிய உலகம். 

 அறிவதும், அறியப் படுவதும் , அறிகின்ற அறிவும் எல்லாம் தானே என்கிறார் காரைக்கால் அம்மையார். 

பாடல் 

அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.

பொருள் 

அறிவானுந் தானே = அறிபவனும் தானே 
அறிவிப்பான் தானே = அறிவை  தருகின்றவனும் தானே 
அறிவாய் அறிகின்றான் தானே = அந்த அறிவாய் தன்னை அறிபவனும் தானே 

 அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே = அறிந்து கொள்ளும் மெய் பொருளும் தானே 

 விரிசுடர் பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன் = ஞாயிறு, ஆகாயம், என்று எல்லா பொருள்களும் அவன். 

அறியும் பொருள் 
அறிபவன் 
அறியும் அறிவு 
அறிவு 

எல்லாம் ஒன்றே. ஒன்றில் இருந்து ஒன்று வேறல்ல. 

இது ஒரு பார்வைக் கோணம் (point of view ). அது எப்படி என்று யோசித்துப் பார்ப்போமே. 




No comments:

Post a Comment