Monday, November 25, 2013

வில்லிபாரதம் - முன் நின்ற நெடுமாலே

வில்லிபாரதம் - முன் நின்ற நெடுமாலே 


துரியோதனனிடம் தூது போவதற்கு முன்னால் பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் கண்ணன் அவர்களின் எண்ணத்தை கேட்டு அறிகிறான்.

கடைசியில் பாஞ்சாலியிடம் வருகிறான்.....

"கண்ணா, இரணியன் தன் மகனான பிரகலாதனை வெகுண்டு தூணை போது அதில் இருந்து வெளிப்பட்டு பிரகலாதனை காத்தாய், வாய் பேச முடியாத யானை "ஆதி மூலமே " என்று அழைத்த போது வந்து காத்தவனே " என் மேல் கருணை இல்லையா என்று கேட்கிறாள் ...

பாடல்

சாலக் கனகன் தனி மைந்தனை முனிந்த 
காலத்து, அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்! 
மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு 
நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே!

பொருள்

சாலக் = சிறந்த

கனகன் = பொன்னிறமான நிறம் கொண்ட இரணியன்

தனி மைந்தனை முனிந்த = தனித்துவமான மகனான பிரகலாதனை கோபித்த போது


காலத்து = அந்த நேரத்தில்

 அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்! = அவன் அறைந்த கல் தூணில் இருந்து வெளி வந்தாய்

மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு = ஆதி மூலமே என்று யானை உன்னை அழைத்த போது

நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே! = நீல மலை போல் முன் நின்ற நெடுமாலே


அவளுக்கு கண்ணன் என்ன சொன்னான் தெரியுமா ?

No comments:

Post a Comment