Saturday, January 18, 2014

திருவாசகம் - பொருள் உணர்ந்து சொல்வார்

திருவாசகம் - பொருள் உணர்ந்து சொல்வார் 


சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

பல பாடல்களுக்கு அர்த்தம் தெரியும். ஆனால் அதன் பொருளை "உணர" முடியுமா ? அறிதல் வேறு உணர்தல் வேறு.  ஒரு அகராதி (dictionary ) இருந்தால் யாரும் பொருளை அறிந்து கொள்ள முடியம்.

"கவி உள்ளம் காண்கிலர்" என்பார் பாரதியார்.

திருவாசகம் பற்றி எழுத ஆசை.

எங்கிருந்து தொடங்குவது ?

திருவாசகத்தின் முதல் பகுதி - சிவ புராணம்.

சிவ புராணத்தின் கடைசிப் பகுதி மேலே உள்ள பாடல்.

பாடலின் பொருளை பார்பதற்கு முன்னால், மணி வாசகர் சொல்லும் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.

"பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்கிறார்.

பொருள் அறிந்து சொல்லுவார் என்று சொல்லவில்லை. பொருள் உணர்ந்து சொல்லுவார் என்கிறார். பொருளை உணர வேண்டும்.

பொருள்

சொல்லற்கு அரியானைச் = சொல்லுவதற்கு அரியவன்.  அவனை முழுவதும் விளக்கிச் சொல்ல முடியாது. கடினம். 

சொல்லி = சொல்லாமலும் இருக்க முடியாது. எனவே "சொல்லி"

திருவடிக் கீழ்ச் = அவனுடைய திருவடியின் கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் = சொல்ல அரியவனைப் பற்றி சொல்லியாகி விட்டது. எப்படிப் பார்த்தாலும் அது முழுமையக இருக்காது. எவ்வளவு சொன்னாலும் அதை முழுமையாக சொல்லி விட முடியாது. எனவே, சொல்லிய பாட்டின் பொருள் "உணர்து" சொல்லுவார்.

செல்வர் = செல்வார்கள். அப்படி பொருள் உணர்ந்து சொல்பவர்கள் ஒரு இடத்திற்கு செல்வார்கள். அது எந்த இடம் ?

சிவபுரத்தின் = சிவன் இருக்கும் இடம் சிவபுரம். அங்கு செல்வார்கள். 

உள்ளார் = சென்று அங்கு இருப்பார்கள்.

சிவன் அடிக் கீழ் = அவனுடைய திருவடியின் கீழ்

பல்லோரும் ஏத்தப் பணிந்து = எல்லோரும் பணிந்து புகழும் படி அங்கு இருப்பார்கள்.

முக்கியாமாக வேண்டியது என்ன என்றால் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும்.

இனி வரும் ப்ளாகுகளில் - முயற்சி செய்வோம்

No comments:

Post a Comment