Monday, February 24, 2014

பட்டினத்தார் பாடல் - அல்லல் அற்று என்று இருப்பேன் ?

பட்டினத்தார் பாடல் - அல்லல் அற்று என்று இருப்பேன் ?


வேலைக்குப் போனால் மேலதிகாரி சொல்வதை கேட்டு தலை ஆட்ட வேண்டும். பல்லைக் காட்ட வேண்டும். அவர் சொல்வது சரியோ, கேட்டுக் கொள்ள வேண்டும்.

தொழில் செய்யலாம் என்றால் வாடிக்கையாளர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதர்க்கெல்லாம் தலை ஆட்ட வேண்டும்.

அரசாங்க அதிகாரிகளின் கெடு பிடி...

இப்படி நாளும் பலரின் நெருக்கடிகள். நிம்மதியாக எங்கே இருக்க முடிகிறது.

இந்த தொல்லைகள், பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லாமல் என்று இருப்பேன் என்று அங்கலாய்கிறார் பட்டினத்தார்.....

பாடல்

செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசித், தினந்தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமானந்தத்தின்
எல்லையிற் புக்கிட வேகாந்தமாய் எனக்காம் இடத்தே
அல்லல் அற்று என்றிருப் பேனத்தனே, கயிலாயத்தனே

பொருள்

செல்வரைப் = செல்வந்தர்களை

பின்சென்று = பின்னால் சென்று

சங்கடம் பேசித் = மனதுக்கு பிடிக்காததை கடமைக்கு பேசி

தினந்தினமும் = தினமும்

பல்லினைக் காட்டிப் = பல்லினைக் காட்டி

பரிதவியாமற் = பறிதவிக்காமல்

பரமானந்தத்தின் = மிகப் பெரிய ஆனந்தத்தின்

எல்லையிற் புக்கிட = எல்லையில் புகுந்திட

வேகாந்தமாய் = ஏகாந்தமாய்

எனக்காம் இடத்தே = எனக்கு ஆகும் இடத்தில்


அல்லல் அற்று = துன்பங்கள் அற்று

என்றிருப் பேனத்தனே = என்று இருப்பேன் அத்தனே

 கயிலாயத்தனே = கைலாய மலையில் இருப்பவனே


No comments:

Post a Comment