Saturday, May 10, 2014

இராமாயணம் - இறந்த பின்னும் மறக்காத மனம்

இராமாயணம் - இறந்த பின்னும் மறக்காத மனம் 



இருக்கும் போது காதலிப்பவர்களை கேட்டு  இருக்கிறோம்.இறந்த பின்னும் காதலிப்பவர்களை கேட்டு இருக்கிறோமா ?


இராவணன் போரில் இறந்து கிடக்கிறான். அவன் மேல் அரக்கியர்கள் எல்லாம் விழுந்து அழுகிறார்கள்.

அவர்களுக்குத் தெரியும் இராவணன், சீதை மேல் கொண்ட காதல்.

அறம் தொலைந்து போக மனத்தில் சீதையை மனத்தில் அடைத்து வைத்தாய். அவளை இன்னுமா மறக்கவில்லை. அவளை மறக்காததால் எங்களோடு பேச மாட்டேன் என்கிறாய். எங்களை கண் திறந்தும் பார்க்க மாட்டேன் என்கிறாய். எங்களுக்கு அருளும் செய்ய மாட்டேன் என்கிறாய். ஒரு வேளை நீ இறந்து விட்டாயோ என்று ஏங்கி அழுதனர்.


பாடல்

அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை
மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர் 
திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை; 
இறந்தனையோ?' என இரங்கி, ஏங்கினார். 

பொருள்

அறம் தொலைவுற = அறம் தொலைந்து போக

மனத்து அடைத்த சீதையை = மனதில் அடைத்து வைத்த சீதையை

மறந்திலையோ, இனும்? = இன்னுமா மறக்காமல் இருக்கிறாய் ?

எமக்கு = எங்களுக்கு

உன் வாய்மலர் திறந்திலை = உன் வாய் என்ற மலரை திறந்து ஒரு வார்த்தை பேச மாட்டேன் என்கிறாய்

 விழித்திலை; = எங்களை பார்க்கவும் மாட்டேன் என்கிறாய்

அருளும் செய்கிலை = எங்களுக்கு அருளும் செய்யவில்லை

இறந்தனையோ?' = ஒருவேளை இறந்து விட்டாயோ

என இரங்கி, ஏங்கினார் = என வருத்தப் பட்டு ஏங்கி அழுதனர்

சீதையின் நினைவாகவே இருந்ததால் பார்கவோ , பேசவோ இல்லையோ என்று அவர்கள்  நினைத்தார்கள். அது இராவணனின் காதலின் ஆழம்.



No comments:

Post a Comment