Wednesday, May 21, 2014

நள வெண்பா - பெண்மை அரசு

நள வெண்பா - பெண்மை அரசு 



எல்லா பெண்களும் அரசிகள்தான்.

அவர்கள் எந்த நாட்டுக்கு அரசிகள் ? அவர்களின் படைகள் என்ன, அவர்களின் வெண் கொற்ற குடை எது ?

நள வெண்பா பாடிய புகழேந்திப் புலவர் கூறுகிறார்....

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு வித குணங்களே நான்கு விதமான படைகள் (இரதப் படை, யானைப் படை, குதிரைப்படை , காலாட்படை) , ஐந்து புலன்களும் அவர்களை வழி நடத்தும் அமைச்சர்களாக, இரண்டு கண்களும் வில்  படையும்,வேல் படியுமாக, அவர்களின் அழகிய முகமே வெண்கொற்றக் குடியாக பெண்மை அரசு செய்கிறது....


பாடல்

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு.

பொருள்

நாற்குணமும் = நான்கு குணங்களும்

நாற்படையா = நான்கு படைகளாக

ஐம்புலனும் = ஐந்து புலன்களும்

நல்லமைச்சா = நல்ல அமைச்சர்களாக

ஆர்க்கும் சிலம்பே = ஒலி எழுப்பும் சிலம்பே

அணிமுரசா = அழகிய முரசாக

வேற்படையும் = வேல் படையும்

வாளுமே = வாள்  படையும்

கண்ணா = கண்களாக

வதன = முகம்

மதிக் =  நிலவு

குடைக்கீழ் = குடையின் கீழ்

ஆளுமே = ஆட்சி செய்யுமே

பெண்மை அரசு = பெண் என்ற அரசு

அவர் சொன்னது தமயந்திக்குத் தான் என்றாலும், எல்லா பெண்களுக்கும் இது பொருந்தும்.

படுத்துராளுக !



1 comment:

  1. நள வெண்பா ஒரு புறம் இருக்கட்டும். உன் கடைசிச் சொல் சூப்பர்!!!!

    ReplyDelete