Friday, May 30, 2014

திருக்குறள் - நினைக்கும் உயிர் காதல் மனம்

திருக்குறள் - நினைக்கும் உயிர் காதல் மனம் 


அவனும் அவளும் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலித்தார்கள். திருமணமும் செய்து  கொண்டார்கள். அல்லது காதலிக்காமலேயே திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்து கொண்ட கொஞ்ச நாள் வாழ்க்கை மிக இனிமையாக  இருந்தது.

நாள் ஆக நாள் ஆக, இனிமை குறையத் தொடங்கியது.

இது எல்லார் வீட்டிலும் நடப்பதுதான்.

காரணம் என்ன ?

வள்ளுவர் ஆராய்கிறார்....

நாள் ஆக நாள் ஆக ...ஒருவர் மற்றவரின் குறைகளை காண ஆரம்பித்து விடுகிறார்கள். அதுதான் காரணம்.

மனைவி கணவனின் குறையை கண்டு அதை அவனிடம் சொல்கிறாள்.

அவனுக்கு கோபம் வருகிறது.

நீ மட்டும் என்ன உயர்வா என்று அவன் அவளின் குறைகளை கண்டு சொல்கிறான்.

அவளுக்கு கோபம் வருகிறது.

 இதுதான் காதல் குறையக் காரணம்.

காதல் குறையாமல் இருக்க வேண்டும் என்றால் ஒருவர் மற்றவரின் குறைகளை காணாமல் அவர்களின் நல்ல திறமைகளை கண்டு பாராட்ட வேண்டும்.


பாடல்

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு”   


பொருள்

எள்ளின் = தவறு கண்டு சிரித்தால்

இளிவாம் = கீழ்மை

என்று எண்ணி = என்று நினைத்து

அவர் = அவருடைய

திறம் = திறமைகளை

உள்ளும் = நினைக்கும்

உயிர்க்காதல் நெஞ்சு = உயிர் போல காதல் கொண்ட மனம்

 
உங்கள் துணைவியோ, துணைவனோ - அவர்களின் நல்ல பண்புகளை, திறமைகளை  பட்டியல் போடுங்கள். அவற்றைப் பற்றி அவர்களிடம் சமயம் வரும்போதெல்லாம் உயர்வாகப்   பேசுங்கள்.

காதல் வராமல் எங்கே போகும் !

No comments:

Post a Comment