Wednesday, June 18, 2014

கலிங்கத்துப் பரணி - போர்களத்தில் யானைகள்

கலிங்கத்துப் பரணி - போர்களத்தில் யானைகள் 


கடலில் கப்பல் போவதை பார்த்து இருக்கிறீர்களா ?

ஒன்றன் பின் ஒன்றாகப் போகும். பெரிய பெரிய கப்பல்கள், நீரில் மிதந்து போகும்.

கலிங்கத்துப் போரில் இரத்த வெள்ளம்.

அந்த வெள்ளம் தேங்கியது மட்டும் அல்ல, போர்களம் நிறைந்து வெளியில் போகிறது.

அந்த வெள்ளத்தில் இறந்த யானைகள் அடித்துச் செல்லப் படுகின்றன.

அப்படி அந்த இரத்த வெள்ளத்தில் யானைகள் மிதந்து போவது கடலில் கப்பல்கள் மிதந்து போவதைப் போல இருக்கிறதாம்.

பாடல்

உடலின்மேல் பலகாயஞ் சொரிந்து பின்கால்
      உடன்பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை
கடலின்மேல் கலந்தொடரப் பின்னே செல்லுங்
     கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்.

பொருள்

உடலின்மேல் = (யானைகள் தங்கள் ) உடலின் மேல்

பலகாயஞ் = பல காயங்களை கொண்டு

சொரிந்து = (இரத்தம்) கொட்ட

பின்கால் = பின்னால்

உடன்பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை = உடல் பதித்து உதிரம் ஒழுகி யானைகள்

கடலின்மேல் = கடலின் மேல்

கலந்தொடரப் = கப்பல்கள் , தொடர

பின்னே செல்லுங் = ஒன்றன் பின் ஒன்று செல்லும்

கலம்போன்று  = கப்பல்கள் போல

தோன்றுவன = தோன்றின

காண்மின் காண்மின்.= காணுங்கள் , காணுங்கள்



No comments:

Post a Comment