Tuesday, June 17, 2014

கலிங்கத்துப் பரணி - அறிவுடையவரும் நிலை தளரும்

கலிங்கத்துப் பரணி - அறிவுடையவரும் நிலை தளரும் 


எவ்வளவு படிச்சவரு...அவரு போய் இந்த பொண்ணு விஷயத்தில இப்படி நடந்துகிட்டாரே...என்று சில பேரை பற்றி செய்தித்தாளில் படிக்கும் போது நாம் வியந்திருக்கிறோம்.

பெண்ணின் மேல் உள்ள ஈர்ப்பு படித்தவன் படிக்காதவன் என்றெல்லாம் பார்ப்பது இல்லை. உலகு அறிந்த அறிவுடையவர்களும் நிலை தளரும் இடம் அது என்கிறார் ஜெயங்கொண்டார்.

பாடல்

புடைபட இளமுலை வளர்தொறும்
     பொறைஅறி வுடையரும் நிலைதளர்ந்து 
இடைபடு வதுபட அருளுவீர் 
   இடுகதவு உயர்கடை திறமினோ.

பொருள்

சீரை பல விதங்களில் பிரித்தும் சேர்த்தும் இரசிக்க வேண்டிய பாடல்


புடைபட = பக்கங்கள் திரண்டு வளர்ந்த

இளமுலை = இளமையான மார்புகள்

வளர்தொறும் = நாளும் வளரும் போது

பொறைஅறி வுடையரும் = பொறுமையும், அறிவும் உள்ளவர்களும்

நிலைதளர்ந்து = தங்கள் நிலை தளர்ந்து

இடை படுவது பட = பெண்களே , உங்கள் இடை எந்த பாடு படுமோ அந்த அளவு அவர்களும் பட. மார்புகள் நாளும் வளர்வதால் இடை பாரம் தாங்காமல்  வருந்தும்.அது போல பொறை உடை அறிவுடையவர்களும் வருந்தாவர்கள்.

இன்பமும் இல்லாமல், துன்பமும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் கிடந்து தவிப்பது - பட. பட என்றால் பட்டுப் போக. விலகிப் போக.

இடையை நோக்கிய துன்பங்கள் பட்டுப் போக...என்று பலப் பல அர்த்தங்கள் சொல்லிக் கொண்டே  போகலாம்.

அருளுவீர் = அந்த துன்பங்கள் எல்லாம் அற்றுப் போக அருள் தருவீர்

இடுகதவு = உங்களுக்கும் எனக்கும் இடையில் உள்ள கதவு

 உயர்கடை திறமினோ.= உயர்ந்த வாசலில் உள்ளது, அதைத் திறவுங்கள்.

சொல்லுக்கும் ஜொள்ளுக்கும் ஒரு அளவு வேண்டாமா ?

சட்டை எல்லாம் நனைகிறது.....


2 comments:

  1. சுவாரஸ்யமான பாடல்! பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  2. "இடை படுவது பட" என்பதன் அர்த்தங்கள் அமோகம்! ஜொள்ளு வழியும் பாடல்!

    ReplyDelete