Friday, June 6, 2014

திருமந்திரம் - சீர்காழி வாருங்கள்

திருமந்திரம் - சீர்காழி வாருங்கள்


 வயது ஆகும். மூப்பு வரும். காலும் கையும் தளரும். ஆசையின் பின்னால் ஓடி ஓடி உடல் களைக்கும் , சலிக்கும்.

அன்போடு நம்மை கவனித்த மனைவி கூட நம்மை வெறுப்பாள். "கிழத்துக்கு வேற வேலை இல்லை...கொல்லு கொல்லு  என்று இருமிக் கொண்டு உயிரை வாங்குகிறது " என்று அவளும் சலிக்கும் நாள் வரும். மனைவின் அன்பு நிரந்தரம் அல்ல. மூப்பு வரும்போது வெறுப்பும் கூடவே வரும்.

மனைவியே அப்படி என்றால் பிள்ளைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்....

அந்த நாள் வரும் முன்னம் சீர்காழி வந்து சேருங்கள்...என்று வரவேற்கிறார்  திருமூலர்.

பாடல்

காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால்
ஏலவார் குழலினா ரிகழ்ந்துரைப்ப தன்முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.


பொருள்

காலினோடு =    கால்களோடு

கைகளும் =  கைகளும்

தளர்ந்து = தளர்ந்து

காம நோய்தனால் =  காம நோயினால்

ஏல = ஏலம் மணம் வீசும்

வார் = அழகாக வாரிய

குழலினார் = குழலினை உடைய பெண்கள் (மனைவி )

இகழ்ந்து = கேவலமாக திட்டி

உரைப்ப தன் முனம் = சொல்லவதற்கு முன்

மாலினோடு = திருமாலோடு

 நான்முகன் = பிரமனும்

மதித்தவர்கள் =  மதித்து அவர்கள்

காண்கிலா = காண முடியாத

நீலமேவு கண்டனார் = கழுத்தில் நீலம் கொண்ட அவர் (சிவன்)

நிகழ்ந்த = வாழும் , இருக்கும்

காழி = சீர்காழி

சேர்மினே = சேருங்கள்

உடல் அழகும், வனப்பும், வலிவும் நிரந்தரம் இல்லை.

மனைவி மக்கள் அன்பும் நிரந்தரம் இல்லை.

இவை எல்லாம் என்றும் இருக்கும் என்று நினைக்காதே என்று சொல்லி வைக்கிறார் திருமூலர்

No comments:

Post a Comment