Sunday, July 27, 2014

திருக்குறள் - கற்க கசடற

திருக்குறள் - கற்க கசடற 


எல்லோருக்கும் தெரிந்த குறள்தான் .


கற்க கசடற கற்பவை கற்றபின் 
நிற்க அதற்கு தக 

கற்க வேண்டியவற்றை பிழையின்றி கற்று, கற்ற பின் அதற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.

நல்ல அர்த்தம் உள்ள குறள்  தான்.

சிந்திக்க சிந்திக்க புதுப் புது அர்த்தங்களை தரும் குறள் .

எதை கற்க வேண்டும் ? கற்பவை கற்க வேண்டும். எது கற்பவை ?

கற்க கசடற = கசடு என்றால் ஒரு திரவத்தை வடி கட்டும் போது, வடி கட்டியில் கொஞ்சம் தங்கி விடும். அதற்கு கசடு என்று பெயர்.  அதே போல் படிக்கும் போது சில விஷயங்கள் புரியாமல் இருக்கும். அந்த மாதிரி புரியாதது ஒன்றும் இல்லாமல், அனைத்தும் புரியும் படி கற்க வேண்டும்.

இன்னொரு பொருள்,

கற்பது, மனதில் உள்ள கசடுகளை போக்க வேண்டும். உயர்ந்த நூல்களை படித்த பின்னும் மன மாசுகள் போக வில்லை என்றால் கற்றதனால் என்ன பயன்.

மனம் மட்டும் அல்ல மனம், வாக்கு, செயல் என்ற மூன்றிலும் உள்ள கசடுகளை போக்க வேண்டும்.

வாக்கில் இனிமை வேண்டும்.

செயல் சிறந்ததாக இருக்க வேண்டும்.

மனம் தூயதாக இருக்க வேண்டும்.

நம் மனம், மொழி, மெய்யை கசடு இல்லாமல் ஆக்கும் விஷயங்களை கற்க வேண்டும்.

சரி, யார் கற்க வேண்டும் ?

தன் உயிரையும் பிற உயிரையும் காக்கும் பொறுப்பில் உள்ள அரசன் அல்லது தலைவன் இப்படி கற்க வேண்டும் என்று கூறுவது போல இந்த குரல் அரசியல் அதிகாரத்தில் வருகிறது.





3 comments:



  1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.

    "அதற்குத் தக" என்பதில் "த்" விடுபட்டு உள்ளது.
    அருமையான விளக்கம்.

    ReplyDelete