Thursday, August 7, 2014

சிவ புராணம் - ஈசன் அடி போற்றி - பாகம் 1

சிவ புராணம் - ஈசன் அடி போற்றி - பாகம் 1 

பாடல்

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி 
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 

பொருள்

ஈசன் அடிபோற்றி = ஈசனின் திருவடிகள் போற்றி

எந்தை அடிபோற்றி = என் தந்தையின் அடிகள் போற்றி

தேசன் அடிபோற்றி = ஒளி வடிவானவனின் அடி போற்றி

 சிவன் சேவடி போற்றி = சிவனின் சிறந்த அடிகள் போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி = அன்பில் நின்ற தூயவனின் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி =  பிறப்பு என்ற மாயத்தை அறுக்கும் மன்னவனின் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி = சிறந்த திருப் பெருந்துரையுள் உள்ள நம்முடைய தேவனின் அடி போற்றி

சிவனைப் போற்றி  பாடுகிறார். இதில் வேறு என்ன இருக்கிறது. மேலே செல்வோம்  என்று அவசரப் படக் கூடாது. 

மணிவாசகரின் தமிழ் அவ்வளவு எளிய தமிழ். கவிதை நாவில்   கற்கண்டாய் கரையும்.  எப்போது வாயில் போட்டோம், எப்போது கரைந்தது , எப்போது உள்ளே  சென்றது என்று தெரியாது.

வாசித்துக் கொண்டே மேலே சென்று விடுவோம், அதன் ஆழ்ந்த அர்த்தங்களை  அறியாமலேயே.

இதைப் பற்றி மேலும் சிந்திப்போம்.


1 comment:

  1. இதில என்னப்பா இருக்கு? மண்டை கைய வைக்கிறாய்?

    ReplyDelete