Thursday, August 21, 2014

நந்திக் கலம்பகம் - உடையும், வளையும் என்னதே

நந்திக் கலம்பகம் - உடையும், வளையும் என்னதே 


தலைவி சொல்கிறாள்.

இந்த உடையும், இந்த வளையல்களும் என்னுடையதாகத்தான் இருக்கும்..எப்போது என்றால் நந்தி வர்மன் எதிரிகளின் மேல் படை எடுத்துப் சென்றிருக்கும் பொழுது.

அப்படி அவன்  சண்டைக்குச் செல்ல வில்லை என்றால், என் அருகில் இருப்பான். அப்போது இந்த உடையும், இந்த வளையலும் என்னிடம் இருக்காது என்று சொல்லாமல் சொல்கிறாள்.

நந்தியின் வீரத்துக்கும் காதலுக்கும் கட்டியம் கூறும் பாடல்....

பாடல்

எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினஏறு செந்தனிக்கோல் நந்தி - இனவேழம்
கோமறுகில் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகில் போகாப் பொழுது  

பொருள்

எனதே = என்னுடையதே

கலை = துகில், ஆடை

வளையும் = வளையலும்

என்னதே = என்னுடையதே

மன்னர் = மன்னனான

சினஏறு = சினம் கொண்ட காளை  அல்லது சிங்கம்

செந்தனிக்கோல் நந்தி = சிறப்பான செங்கோல் செலுத்தும் நந்தி

இனவேழம் = யானை போல

கோமறுகில்= கோபம் கொண்டு

சீறிக் = சீறி

குருக்கோட்டை = குருக்கோட்டை என்ற ஊரின் மேல்

வென்றாடும் = வெற்றிக் கொள்ள படை எடுத்துச் செல்ல

பூமறுகில் = பூமறுகில் (இந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியவில்லை )

போகாப் பொழுது = போன போது (செய்யா என்ற வாய்பாட்டு வினை. பெய்யா கொடுக்கும் மழை போல, கொய்யா பழம் போல )



1 comment:

  1. சொல்லாமல் சொல்லுவதில் ஒரு அருமையான சுகம் இருக்கிறது! உடையும் வளையும் எடுத்துவிட்டு என்ன செய்வாள்?!

    ReplyDelete