Friday, October 10, 2014

வில்லி பாரதம் - அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?

வில்லி பாரதம் - அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?



துரியோதனன் மற்றும் துச்சாதனன் என்ற இருவரையும் போரில் வென்று, அவர்களின் குருதி வழிய , வெற்றி முரசு கொட்டும் நாளில் தான் என் விரித்த குழலை முடிவேன் என்று சபதம் செய்து விட்டால் பாஞ்சாலி


அரசவையில் எனை ஏற்றி, அஞ்சாமல் துகில் தீண்டி, 
                 அளகம் தீண்டி, 
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர், 
                 தகாதனவே விளம்புவோரை, 
பொரு சமரில் முடி துணித்து, புலால் நாறு வெங் 
                 குருதி பொழிய, 
வெற்றி முரசு அறையும் பொழுதல்லால், விரித்த குழல் இனி 
                 எடுத்து முடியேன்!' என்றாள்.

ஆண்டு பதிமூன்று ஆகி விட்டது. தர்மன் சமாதன தூது விடுகிறான் துரியோதனனிடம்.

பாஞ்சாலி தவிக்கிறாள்.

விரித்த தன் கூந்தலை என்று  முடிவது,தான் ஏற்ற சபதம் என்ன ஆகுமோ என்று தவிக்கிறாள்.

கண்ணன் எல்லோரிடமும் அவர்கள் எண்ணத்தை கேட்டு அறிந்த பின், கடைசியில்  திரௌபதியிடம் , அவளின் எண்ணத்தையும் கேட்க்கிறான்.

"என் குழலைப் பிடித்து , அந்த கண் இல்லாதவன் பெற்ற மகன் துச்சாதனன், என் உடையை களைய நின்ற போது , பஞ்ச பாண்டவர்களும் பார்த்து இருந்தார்கள், வெற்றி கொள்ளும் சக்கரத்தை கொண்ட கோவிந்தா , அன்றும் என் மானத்தை வேறு யார் காத்தார்கள்  (உனையன்றி ) "

பாடல்

கற்றைக் குழல் பிடித்து, கண் இலான் பெற்று எடுத்தோன் 
பற்றித் துகில் உரிய, பாண்டவரும் பார்த்திருந்தார்; 
கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா! நீ அன்றி, 
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?

பாடல்

கற்றைக் = அடர்ந்த

குழல் = முடியையைப்

பிடித்து = பிடித்து

கண் இலான் = திருதராஷ்டிரன்

பெற்று எடுத்தோன் = பெற்ற பிள்ளை (துச்சாதனன்)

பற்றித் துகில் உரிய = என் சேலையை பற்றி இழுக்க

பாண்டவரும் பார்த்திருந்தார் = பாண்டவர்களும் பார்த்து இருந்தார்கள்

கொற்றத் = வெற்றியடையும்

தனித் = தனித்துவமான

திகிரிக் = சக்ராயுதம்

கோவிந்தா! = கோவிந்தா

 நீ அன்றி,= நீ அன்றி
 
அற்றைக்கும் = அன்றும் ("ம்" )

என் மானம் ஆர் வேறு காத்தாரே? = என் மானத்தை யார் காத்தார்கள் ?

இன்றும் என் மானம் நீ காக்க வேண்டும் என்று வேண்டுகிறாள்.




No comments:

Post a Comment