Tuesday, October 28, 2014

திருவிளையாடல் புராணம் - அடங்காத பசியினர் போல

திருவிளையாடல் புராணம் - அடங்காத பசியினர் போல 


வாழ்கை ஒரு விளையாட்டு.

இதை ரொம்ப serious ஆக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. என்ன ஆகப் போகிறது ? சந்தோஷமாக, விளையாட்டாக வாழ்க்கையை எடுத்துச் செல்ல வேண்டும்.

குழந்தை மனம் கொண்டவர்கள் தான் என் இராஜியத்தை அடைய முடியும் என்றார் இயேசு பிரான்.

திருவிளையாடல் என்றால் ஆண்டவன் ஆடிய விளையாடல். உலகிலேயே இறைவனை இவ்வளவு எளிமையானவனாக காட்டியது இந்து மதம் ஒன்றுதான். மற்ற மதங்களில் உள்ள கடவுள்கள் மிகவும் serious ஆக இருப்பார்கள். கோபக்காரர்கள். பழி வாங்கும் குணம் உடையவர்கள்.

இந்துக் கடவுள்கள் விளையாட்டுக் குணம் மிக்கவர்கள்.

காரணம், நம் முன்னோர்கள் நமக்குச் சொன்ன பாடம் - வாழ்கை ஒரு விளையாட்டு மாதிரி. லீலை என்று கூறுவார்கள்.

நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும், இன்பமும் நடக்கும், துன்பமும் வரும்...எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லவே இந்த திருவிளையாடல்.

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். எல்லாம் விளையாட்டுதான்.

வைகை ஆற்றின் கரையை உயர்த்தி, வெள்ளத்தை தடுக்க, வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்ப வேண்டும் என்று பாண்டிய மன்னன் உத்தரவு போட்டு விட்டான்.

வந்தி என்ற பிட்டு விற்கும் கிழவிக்கு ஆள் யாரும் இல்லை. இறைவனை நினைத்து வருந்தி வேண்டினாள் .

அப்போது சிவ பெருமான் அழுக்கான துணியை அணிந்து கொண்டு புறப்பட்டார்.

எப்படி புறப்பட்டார் ?


அறவோர் வேள்வியில் தரும் அவிர் பாகம் என்று அமுதும், இடப் பாகம் குடி கொண்ட உமா தேவி தரும் இதழ் அமுதும் உண்ட பின் மேலும் பசி தாங்காமல், தாயின் பாலுக்கு ஆவலோடு செல்லும் குழந்தை போல அவ்வளவு ஆவலோடு புறப்பட்டுச்  சென்றார்.

பாடல்


திடம் காதல் கொண்ட அறவோர் திரு வேள்வி தரும் 
                                                      அமுதும் 
இடம் காவல் கொண்டு உறைவாள் அருத்த அமுதும் 
                                                      இனிது உண்டும் 
அடங்காத பசியினர் போல் அன்னை முலைப் பால் 
                                                      அருந்த 
அடங்காத பெரு வேட்கை மகவு போல் புறப்பட்டார்.

பொருள்

திருவிளையாடல் புராணம் - அடங்காத பசியினர் போல

வாழ்கை ஒரு விளையாட்டு.

இதை ரொம்ப serious ஆக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. என்ன ஆகப் போகிறது ? சந்தோஷமாக, விளையாட்டாக வாழ்க்கையை எடுத்துச் செல்ல வேண்டும்.

குழந்தை மனம் கொண்டவர்கள் தான் என் இராஜியத்தை அடைய முடியும் என்றார் இயேசு பிரான்.

திருவிளையாடல் என்றால் ஆண்டவன் ஆடிய விளையாடல். உலகிலேயே இறைவனை இவ்வளவு எளிமையானவனாக காட்டியது இந்து மதம் ஒன்றுதான். மற்ற மதங்களில் உள்ள கடவுள்கள் மிகவும் serious ஆக இருப்பார்கள். கோபக்காரர்கள். பழி வாங்கும் குணம் உடையவர்கள்.

இந்துக் கடவுள்கள் விளையாட்டுக் குணம் மிக்கவர்கள்.

காரணம், நம் முன்னோர்கள் நமக்குச் சொன்ன பாடம் - வாழ்கை ஒரு விளையாட்டு மாதிரி. லீலை என்று கூறுவார்கள்.

நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும், இன்பமும் நடக்கும், துன்பமும் வரும்...எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லவே இந்த திருவிளையாடல்.

இடுக்கண் வருங்கால்



திடம் காதல் கொண்ட = உறுதியான காதல் கொண்ட

அறவோர் = அறவோர்

திரு வேள்வி = சிறந்த வேள்வி

 தரும் = தரும்

அமுதும் = அவிர் பாகம் என்ற அமுதும்

இடம் = இடப் பக்கம்

காவல் கொண்டு = காவல் கொண்டு

உறைவாள் = உறையும் பார்வதி

அருத்த அமுதும் = அருந்தத் தரும் அமுதும்

இனிது உண்டும் = இனிமையாக உண்டும்

அடங்காத பசியினர் போல் = பசி அடங்காதவர் போல

அன்னை முலைப் பால் = தாயின் முலைப் பாலை

அருந்த = அருந்த

அடங்காத பெரு வேட்கை மகவு போல் புறப்பட்டார் = அடக்க முடியாத பெரிய ஆவலுடன்  செல்லும் குழந்தை போல புறப்பட்டார்.

ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு வேலைக்குப் போவது என்றால் ஆர்வத்தோடு செல்ல வேண்டும். கடனே என்று செல்லக்  கூடாது. பசி கொண்டவன் உணவைக் கண்டதும் எப்படி ஆர்வத்தோடு செல்வானோ அது போல வேலை செய்யக் கிளம்ப வேண்டும். அப்போதுதான் வேலையும் நன்றாக நடக்கும், வேலை செய்வதன் பலனும் நமக்கு கிடைக்கும்.

மனைவி தரும் சுகத்தை விட வேலை அதிகம் இன்பம் தரும் என்று சொல்லாமல்  சொல்லும் பாடல் இது.

நம் வேலையில் நமக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது ?

பள்ளி செல்வதாக இருக்கட்டும், படிப்பதாக இருக்கட்டும், அலுவலகம் செல்வதாக இருக்கட்டும் , வீட்டு வேலை செய்வதாக இருக்கட்டும்...நமக்கு எவ்வளவு  ஆர்வம் இருக்கிறது ?

சிந்திப்போம்.

No comments:

Post a Comment