Wednesday, February 25, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 3

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 3


பாரதியார், அந்த குள்ளச் சாமியின் கையைப் பிடித்துக் கொண்டு "நீ யார்" என்று கேட்கிறார்.

பாடல்

யாவன்நீ? நினக்குள்ள திறமை யென்னே?
யாதுணர்வாய்? கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே?சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் புத்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,எனக்குணர்ந்த வேண்டும் ” என்றேன்.

பொருள்

நீ யார். உனக்கு உள்ள திறமை என்ன ? நீ என்ன உணர்வாய் ? ஏன் கந்தை சுற்றி திரிகிறாய் ? தேவனைப் போல ஏன் விழிக்கிறாய் ? சின்ன பையன்களோடும் நாய்களோடும்  ஏன் விளையாடிக் கொண்டு இருக்கிறாய் ? புத்தனைப் போல இருக்கிறாயே நீ யார் ? பரம சிவன் போல இருக்கிறாய் ....ஆவலோடு நிற்கிறாய் ....நீ அறிந்தது எல்லாம் எனக்கு உணரத்த வேண்டும்

என்று பாரதியார் அவனை வேண்டுகிறார்.

நாம் அறிவை சேர்ப்பது பொருள் தேட, சுகம் தேட, மேலும் அறிவைத் தேட.

நம் அறிவை நாம் எதற்கு உபயோகப் படுத்துகிறோம் ?

யாருக்கோ பயன் படுத்துகிறோம்.  அவர் நமக்கு சம்பளம் தருகிறார். நாம் படித்தது  அத்தனையும் பொருள் தேடவே சென்று விடுகிறது. பொருள் தேடுவதைத் தவிர   வேறு ஏதாவது நாம் செய்கிறோமா நம் அறிவை வைத்து.

குள்ளச் சாமி, பெரிய ஞானி. பாரதி குரு என்று ஏற்றுக் கொண்ட ஞானி. அவர் கந்தை  கட்டி அலைகிறார்.

பெரிய ஆட்களோடு சகவாசம் இல்லை....சின்னப் பையன்களோடும், நாய்களோடும்  விளையாடுகிறார்.

ஞானத்தின் வெளிப்பாடு ! பொருள் மேல் பற்று இல்லை. அறிவின் மேல் பற்று இல்லை.  உறவுகளின் மேல் பற்று இல்லை. ஒரே விளையாட்டு தான்...


No comments:

Post a Comment