Monday, February 23, 2015

திருவாசகம் - திருச் சதகம் - கண்டு கொள்ளே

திருவாசகம் - திருச் சதகம் - கண்டு கொள்ளே 


திருச் சதகம் என்பது 100 பாடல்களை கொண்டது. பத்து தொகுதிகளாக உள்ளது.

மணி வாசகர் உருகி உருகி எழுதி இருக்கிறார்.

முடிந்தால் அனைத்தையும் எழுத ஆசை.

முதல் பாடல்.

என் உடலில் வியர்வை அரும்பி, உடல் விதிர் விதிர்த்து, என் தலைமேல் கைவைத்து உன் திருவடிகளை , கண்ணீர் ததும்ப, வெதும்ப, உள்ளத்தில் பொய்யை விட்டு, உன்னை போற்றி, ஒழுக்கத்தை கை விட மாட்டேன்....என்னை கொஞ்சம் கண்டு கொள்ளேன் " என்று உள்ளம் உருகுகிறார்.


பாடல்

மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என்
கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம்
பொய் தான் தவிர்ந்து, உன்னை, `போற்றி, சய, சய, போற்றி!' என்னும்
கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.

பொருள்

மெய் தான் அரும்பி = உடலில் வியர்வை அரும்பி

விதிர்விதிர்த்து = நடு நடுங்கி

உன் = உன்னுடைய

விரை ஆர் = மனம் பொருந்திய

கழற்கு = திருவடிகளுக்கு

என் = என்னுடைய

கை தான் தலை வைத்து =  கையை தலைமேல் வைத்து

கண்ணீர் ததும்பி = கண்ணீர் ததும்பி

வெதும்பி = வெதும்பி

உள்ளம் = உள்ளமானது

பொய் தான் தவிர்ந்து = பொய்யை விடுத்து

உன்னை = உன்னை

`போற்றி, சய, சய, போற்றி!' = போற்றி,  சய சய போற்றி

என்னும் = என்ற

கை தான் நெகிழவிடேன் = கை என்றால் ஒழுக்கம். ஒழுக்கத்தை கை விட மாட்டேன்

உடையாய்! = உடையவனே

என்னைக் கண்டுகொள்ளே = என்னை கண்டு பின் (ஆட் ) கொள்வாய் 

வழிபாடு எப்படி இருக்க வேண்டும் ?

உடலால், மொழியால், உள்ளத்தால்

"மெய் தான் அரும்பி, 
விதிர்விதிர்த்து, 
என் கை தான் தலை வைத்து, 
கண்ணீர் ததும்பி"

இது எல்லாம் உடல் மூலம் பக்தி செலுத்துவது.

"உள்ளத்தில் பொய்யை விட்டு"

இது மனதால் பக்தி செய்வது

"போற்றி, சய, சய, போற்றி!" 

இது வாக்கால் பக்தி செய்வது

மூன்று கரணங்களாலும் வழி படுவது என்றால் இதுதான்.

இன்னொன்று,

வழிபடும்போது கையை தலைக்கு மேல் உயர்த்தி வழிபட வேண்டும்.

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
 

என்பார் அடிகள் திருவாசகத்தில்

தலைக்கு மேல் கையை உயர்த்தி ஏன் வழிபட வேண்டும் ?



2 comments:

  1. அருமை .....நன்றி

    ReplyDelete
  2. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, இருப்பதாக நம்பி உருகிய மாணிக்கவாசகரின் உணர்ச்சிகள் அற்புதம். நன்றி.

    ReplyDelete