Wednesday, August 12, 2015

இராமாயணம் - பரதன் பிறந்த போது

இராமாயணம் - பரதன் பிறந்த போது 


இராமன், இலக்குவன் , பரதன் மற்றும் சத்ருகன் பிறந்த போது அவர்களுக்கு பெயர் வைத்தவன் வசிட்டன்.

மற்றவர்களுக்கு அவன் பெயர்  வைத்ததை விட்டு விடுவோம்.

பரதனுக்கு அவன் பெயர்  இட்டதை பாப்போம்.

பாடல்

கரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன். உதித்திடு மற்றைய ஒளியை.
‘பரதன்’ எனப் பெயர் பன்னினன் அன்றே.

பொருள் 

கரதலம் உற்று = கரம் என்ற தலத்தில் (கையில்) உள்ள

ஒளிர் நெல்லி கடுப்ப = நெல்லிக் கனியைப் போல

விரத = விரதம் பூண்டு

மறைப் பொருள் = வேதங்களின் பொருள்

மெய்ந்நெறி = உண்மையான வழியை

கண்ட = கண்ட

வரதன் = வரதன் (வசிட்டன்)

உதித்திடு மற்றைய ஒளியை. = தோன்றிய இன்னொரு ஒளியை. முதல் ஒளி இராமன். இன்னொரு ஒளி பரதன்.

‘பரதன்’ எனப் பெயர் பன்னினன் அன்றே = பரதன் என்று பெயர் தந்தான்.

இது பரதன் பிறந்த போது உள்ள நிலை. எல்லா குழந்தைகளுக்கும் பெயர் தந்தாயிற்று.

இனி, பரதன் எப்படி உயர்கிறான் என்று பார்ப்போம்.


No comments:

Post a Comment