Friday, August 26, 2016

இராமாயணம் - வாலி வதம் - எண்ணுற்றாய்! என் செய்தாய்?

இராமாயணம் - வாலி வதம்  - எண்ணுற்றாய்! என் செய்தாய்?


இராமனின் அம்பால் அடிபட்டு விழுந்த வாலி, தூரத்தில் இராமன் தன்னை நோக்கி வருவதைக்  கண்டான்.

முதலில் இராமனைப் பற்றி கேள்விப் பட்டான், பின் அவன் நாமத்தை அம்பினில் கண்டான், பின் இராமனே நேரில் வரக் காண்கிறான்.

வானில் உள்ள கார் மேகம், மழை பொழிந்ததால், தரையில் விழுந்து, பல தாமரை மலர்களை மலரச் செய்து, அந்த மேகமே மண்ணில் இறங்கி வந்து கையில் வில் ஏந்தி வந்ததைப் போல வந்த திருமாலைக் கண்டான். தன் உடலில் இருந்து இரத்தம் வழிய, கண்ணில் தீப் பொறி பறக்க, என்ன நினைத்து என்ன செய்தாய் என்று சொல்லத தொடங்குகிறான்.

பாடல்


கண்ணுற்றான் வாலி, நீலக் கார்
      முகில் கமலம் பூத்து,
மண் உற்று, வரி வில்
      ஏந்தி, வருவதே போலும் மாலை;
புண் உற்றது அனையசோரி
      பொறியொடும் பொடிப்ப, நோக்கி,
'எண்ணுற்றாய்! என் செய்தாய்!'
      என்று ஏசுவான் இயம்பலுற்றான்:


பொருள்

கண்ணுற்றான் = கண்டான்

வாலி = வாலி

நீலக் = நீல நிறமும்

கார் முகில் = கரிய நிறமும் கொண்ட மேகம்

கமலம் பூத்து = தாமரை மலர்களை மலரச் செய்து

மண் உற்று = பின் தரை இறங்கி வந்து

வரி வில் ஏந்தி,  = வலிய வில்லை ஏந்தி

வருவதே போலும் = வந்ததைப் போல இருந்த

மாலை; = திருமாலை

புண் உற்றது = புண் உள்ள உடலில் இருந்து

அனையசோரி = இரத்தம் வழிய

பொறியொடும் = கண்ணில் தீ பொறி பறக்கும் படி

பொடிப்ப, நோக்கி = கோபத்தோடு நோக்கி

'எண்ணுற்றாய்! என் செய்தாய்!' = என்ன நினைத்து , என்ன செய்தாய்

என்று ஏசுவான் இயம்பலுற்றான் = என்று ஏசுவான் , இயம்பல் உற்றான்


என்ன பொருள்...

மேகம் வானில் இருந்தே மழை பொழிந்து தாமரைக்கு நீர் வார்க்க முடியும்.  இருந்தும் அது இறங்கி வருகிறது.

அவதாரம் என்றால் அருளினால் , மேலிருந்து கீழிறங்கி வருவது என்று அர்த்தம்.

திருமால் நினைத்திருந்தால் , வைகுந்தத்தில் இருந்தே இராவணனை கொன்று  இருக்க முடியும். இராவணனை கொல்வது மட்டும் நோக்கம்  அல்ல. இன்னும் பலப் பல இராவணன்கள் வராமல் இருக்க, இந்த உலகுக்கு வழி காட்ட , மானிடம் வடிவம் தாங்கி இரங்கி , இறங்கி வந்தான்.

கார்மேகம் , தரை மேல் வந்தது போல.

கம்பன் அதில் ஒரு நுட்பம் வைக்கிறான்.

வாலியை பார்க்க வந்தது, அவனுக்கும் அருள் செய்யவே என்பதை சொல்லாமல் சொல்கிறான்.

தாமரைக்கு நீர் வார்த்த மேகம் தரை மேல் வந்தது மாதிரி இராமன் வந்தான்  என்றான் கம்பன்.

கடைசியில் "ஏசுவான் இயம்பல் உற்றான்"  என்கிறான் கம்பன்.

ஏசுவது, இயம்புவது இரண்டும் ஒன்று தானே. எதற்கு இரண்டு வார்த்தைகள்.

ஏசுதல் என்றால் திட்டுதல், வைதல் .

இயம்புதல் என்றால் போற்றுதல், துதித்தல். ஞானக்கொடிதனை... இயம்புவோமே என்பது குற்றாலக் குறவஞ்சி.

வெளியில் இருந்து பார்த்தால் திட்டுவது மாதிரி இருக்கும். அத்தனையும் புகழாரம்.

அம்பு எய்திய இராமன் அப்படியே போய் இருக்கலாம்.

போகவில்லை. ஏன் ?

வாலி தன்னை திட்டுவான் என்று இராமனுக்குத் தெரியாதா ? தெரியும்.

தெரிந்தும் வந்தான்.

ஏன் ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_26.html





1 comment:

  1. காவியத்தின் அழகையும் கருத்து பொதிந்து உள்ள வார்த்தைகளின் ப்ரயோகத்தையும் அழகாக கொணர்ந்துஉள்ளீர்கள்

    ReplyDelete