Wednesday, May 9, 2018

பட்டினத்தார் பாடல் - காதற்ற ஊசியும் வாராது காண்

பட்டினத்தார் பாடல் -  காதற்ற ஊசியும் வாராது காண் 


வாது  உற்ற திண் புயர் அண்ணாமலையார் மலர்ப் பதத்தைப்
போது உற்ற போதும்  புகலும் நெஞ்சே இந்தப் பூதலத்தில்
தீது உற்ற செல்வம் என்? தேடிப் புதைத்த திரவியம் என்?
காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே.

இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லத் தேவை இல்லை. அவ்வளவு எளிய பாடல்.

காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடை வழிக்கே

நாம் இறந்த பிறகு, ஒரு உடைந்த ஊசி கூட நம்மோடு வராது. பெரிய தத்துவம் இல்லை. எல்லோருக்கும் தெரிந்தது தான்.

இந்த ஒரு வரியை படித்தவுடன், இருந்த சொத்தை எல்லாம் ஊராருக்கு அள்ளி கொடுத்துவிட்டு , பட்டினத்தார் ஒரு கோவணத் துணியுடன் வீதியில் இறங்கி விட்டார்.

அறிவின் உச்சம்.

நாமாக இருந்தால் என்ன செய்வோம் ?

"ஹா...இதெல்லாம் கேக்க நல்லா இருக்கு. நடை முறை வாழ்க்கைக்கு ஒத்து வருமா " என்று தோளை குலுக்கி விட்டு வேறு வேலையை பார்க்கப் போய் விடுவோம்.

இருக்கிற செல்வத்தை எல்லாம் ஊருக்கு கொடுத்துவிட்டு வீதியில் நம்மால் நடக்க முடியுமா ? நடக்கிற காரியமா ?

பட்டினத்தார் நடந்தார்.

படித்தால், அது பாதிக்க வேண்டும். நம் வாழ்க்கை மாற வேண்டும்.  இல்லை என்றால்  படித்துக் கொண்டே இருக்கலாம். ஒரு பயனும் இருக்காது.

வேதம், உபநிஷதம், புராணம், கீதை, தேவாரம், பிரபந்தம், என்று ஒன்றும் படிக்கவில்லை.

ஒரே ஒரு வரி.

கிளம்பி விட்டார்.

அறிவுள்ளவுனுக்கு ஒரு வரி போதும்.

அறிவில்லாதவன் எத்தனை ஆயிரம் வரிகள் படித்தாலும்,  இன்னும் என்ன இருக்கிறது  என்று அலைவானே தவிர, படித்தது எதையும் வாழ்வில் நடை முறை படுத்த மாட்டான்.

கழுதை தின்ற கீதை புத்தகம் மாதிரி.  கழுதையின் வயிற்றுக்குள் போனது கீதை. சிலரின் மண்டைக்குள் போகிறது. பாதிப்பு ஒன்றும் இல்லை.

எதற்குப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் ?

ஒரு வரி போதாதா ?

ஒண்ணும் கூட வராது என்றால், அதை ஏன் நாம் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்று  கிளம்பி விட்டார்.

அவருக்கு மனைவி இருந்தாள் . அழகான பிள்ளை இருந்தான். அரசனுக்கு கடன் தரும் அளவு செல்வம் இருந்தது.

அத்தனையையும் அந்த ஒரு ஒரு வரி மாற்றிப் போட்டு விட்டது.

நாம் இந்தப் பாடலைப் படித்தால், "ஆஹா என்ன அழகான பாடல் " என்று இரசிப்போம் .

ஆனால், பட்டினத்தாரோ, என்னோடு வராத செல்வத்தை நான் ஏன் வாழ் நாள் எல்லாம்  தேடிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவையும் சேர்த்து வைத்து என்ன  செய்ய ? கொண்டு போக முடியாது. அனுபவிக்கவும் முடியாது. பின் எதற்கு என்று நினைத்தார்.

வீதியில் இறங்கி விட்டார்.

ஒரு வரி போதும், ஞானம் பெற.

எது உங்கள் வரி ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_9.html

10 comments:

  1. Could you please share your thoughts about how you got interested in tamil. please share your booklist which you are reading so thattit will be inspiration for youngsters like us

    ReplyDelete
    Replies
    1. என்ன அருமையான சிந்தனை. உண்மையாக உணர்பவர்களுக்கு பெறிய தாக்கத்தை ஏற்படுத்தும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

      Delete
  2. Tye person who writes this page , and its explanation is the No.1 fool, and doesn't have a common sense.

    ReplyDelete
  3. அன்மவை தேடவேண்டும்

    ReplyDelete
  4. Your article makes the reader to realize the truth hidden in this single line

    ReplyDelete
  5. வருமான வரி

    ReplyDelete
  6. எது உங்கள் வரி ? En vari "The fittest species will survive. All you unfit to live will be long gone..!

    ReplyDelete

  7. கழுதை தின்ற கீதை புத்தகம் மாதிரி

    ReplyDelete
  8. இந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும் ?

    ReplyDelete
  9. எல்லாம் இறைவன்

    ReplyDelete