Showing posts with label இராமாயணம். Show all posts
Showing posts with label இராமாயணம். Show all posts

Monday, November 11, 2013

இராமாயணம் - காலம் என்று ஒரு வலை

இராமாயணம் - காலம் என்று  ஒரு வலை 




“சீலமும் தருமமும் சிதைவு இல் செய்கையாய்!
சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும்
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? “

நல்ல ஒழுக்கமும், தர்மமும் சிதைவு இல்லாமல் செயல்களை செய்பவனே (இராமனே) சிவனுக்கும், திருமாலுக்கும், பிரம தேவனுக்கும் உதவி செய்த மூலப் பொருளே ஆயினும் காலம் என்ற வலையை கடக்க முடியாது.

தசரதன் இறந்த செய்தி கேட்டு கலங்கிய இராமனுக்கு வசிட்டன் ஆறுதல் கூறுகிறான்.

காலம் என்ற ஒன்றை யாராலும் கடக்க முடியாது. இறக்கும் காலம் வந்தால் அது நிகழ்ந்தே  தீரும்.அதை அந்த கடவுளாலும்  முடியாது. அப்படியென்றால் சாதரண மனிதர்கள் எம்மாத்திரம்.

பொருள்


“சீலமும் = நல் ஒழுக்கமும்

 தருமமும் = அறமும்

 சிதைவு இல் செய்கையாய் = சிதைவு இல்லாத செய்கை கொண்டவனே

சூலமும் = சூலத்தை கொண்ட சிவனும்

திகிரியும் = சக்கரத்தை கொண்ட மாலும்

சொல்லும் = வேதத்தை கொண்ட பிரமனும்

தாங்கிய  = அப்படி அந்த மூவரையும் தாங்கிய

மூலம் = மூலப் பொருளான அந்த பரம் பொருள்

வந்து உதவிய = வந்து உதவிய  

மூவர்க்கு ஆயினும் = அந்த மூவர்கள் ஆயினும்

காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? = காலம் என்ற வலையை கடக்க முடியுமா ? முடியாது.

மூவர்க்கும் மேலான ஒரு பரம் பொருள் பற்றி கம்பர் இங்கு கூறுகிறார்.

அது பற்றி பின்னொரு நாள் பார்ப்போம்.



Friday, July 26, 2013

இராமாயணம் - கண்ணின் மாலை

இராமாயணம் - கண்ணின் மாலை 


முதலிலேயே பாடலை சொல்லி விடுகிறேன். படியுங்கள். படித்து இன்புறுங்கள்.  நான் என்னதான் விளக்கம் எழுதினாலும் கம்பனின் பாடலுக்கு உறை போடக் காணாது என் உரை.


பாடல்

புன மயில் சாயல்தன் எழிலில், பூ நறைச்
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் -
இனம் எனக் களித்துளது என்பது என்? அவன்
மனம் எனக் களித்தது, கண்ணின் மாலையே

மயில் போல் இருக்கும் சீதையை காண்கிறான் இராவணன். அவன் கண்கள் அவள் அழகை இரசிக்கின்றன. நம்மை மாதிரி இரண்டு கண் அல்ல அவனுக்கு. இருபது கண்கள். இருபது கண்களும் கொள்ளாத அழகு.

அவன் கண்களுக்கு ஒரு மகிழ்ச்சி.

அவளை அங்கே பார்க்கிறான், இங்கே பார்க்கிறான், மேலே பார்க்கிறான், கீழே பார்க்கிறான்.

அந்த சந்தோஷத்தை வர்ணிக்க ஒரு உதாரணம் தேடினான் கம்பன்.

பெரிய சுனை. அதில் நிறைய பூக்கள். அந்த பூக்களில் நிறைய தேன் இருக்கிறது. அவற்றை கண்டால் தேனீக்களுக்கு எப்படி சந்தோஷம் இருக்குமோ அப்படி  அவன் கண்கள் சந்தோஷப் பட்டன என்றான்.

பூ போன்ற ஜானகி. தேன் நிறைந்த பூ போன்ற ஜானகி.

அந்த பூக்களை கண்டு சந்தோஷத்தில் ரீங்காரமிடும் கரிய வேண்டுகள் போல இராவணின்  கண்கள். 20 கண்கள். வண்டுகள் போல அங்கும் இங்கும் அலைகின்றன.

ஒரு பூவை விட்டு இன்னொரு பூவுக்கு தாவுவது போல சீதையின் ஒரு அழகை விட்டு இன்னொரு   தாவுகிறது அவன் கண்கள்.

பார்த்தான் கம்பன், நல்ல உவமைதான், ஆனால் அவன் கண்களில் உள்ள சந்தோசத்தைப் பார்த்தால் அந்தத் தேன் கண்ட வண்டுகளை விட    அதிகமான அதிகமான  சந்தோஷம் உள்ளவை போல இருக்கிறதே  ? உலகிலேயே அதிக பட்ச  சந்தோஷம் உள்ளது எது, அதை அவனின் கண்களுக்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.

அட, இங்கேயே இருக்கே....இதை விட்டு விட்டு எங்கு எல்லாமோ எதுக்கு அலைய வேண்டும்......

சீதையின் அழகை கண்டு சந்தோஷப் பட்ட இராவணின் மனம் போல அவன் கண்கள் மகிழ்ச்சியில் துள்ளின  என்றான்.  அவன் மனதை விட மகிழ்ச்சியான ஒன்று இருக்க முடியாது.

அப்படி மகிழ்ச்சியில் அவள் மேனி எங்கும் ஓடிய அவன் கண்கள் அவளுக்கு கண்ணாலேயே மாலை அணிவித்தது   போல இருந்தது.

இருபது விழிகளால்  மாலை இட்டான்

மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்

புன மயில் சாயல்தன் எழிலில், பூ நறைச்
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் -
இனம் எனக் களித்துளது என்பது என்? அவன்
மனம் எனக் களித்தது, கண்ணின் மாலையே


பொருள் 

Saturday, April 7, 2012

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணன் இராமனை சந்திக்கும் தருணம்

கும்ப கர்ணன் ஒரு இனிமையான பாத்திரம். அவனுக்கு நண்பர்கள் இருந்து இருப்பார்களா ? அவனுக்கு மனைவி உண்டா ? பிள்ளைகள் உண்டா ? தெரியவில்லை. ஆனால், ரொம்ப நல்லவன் மாதிரிதான் தோன்றுகிறது.

இராவணனாவது மாற்றான் மனைவியை கவர்ந்தான். கும்பகர்ணன் அப்படி எந்த தவறும் செய்யவில்லை. இராவணனுக்கு நல்லது எடுத்துச் சொன்னான். இடித்து கூட சொன்னான் (பேசுவது மானம், இடை பேணுவது காமம், கூசுவது மானிடரை). இராவணன் கேட்கவில்லை. அதற்காக விபீஷணன் மாதிரி இராவணனை விட்டுவிட்டு செல்லவில்லை.

கடைசி வரை போராடி உயிர் கொடுக்கிறான். "நான் இறந்த பிறகாவது சீதையையை விட்டு விடு " என்று கெஞ்சுகிறான், இராவணனிடம்.

ரொம்ப அன்பு உள்ளவனாக அவனை காண்பிக்கிறான் கம்பன். தவறே செய்தால் கூட, அண்ணனுக்காக உயிர் கொடுக்கிறான். அவனை திருத்த நினைக்கிறான். விபீஷணன் மேல் அளவு கந்த காதல் வைத்து இருக்குகிறான்.
விபீஷணனை இராவணனிடம் இருந்து காப்பாற்றும்படி இராமனிடம் வேண்டுகிறான். விபீஷணன், கும்ப கர்ணனை பார்க்க வந்த போது "ஏன் தனியா வந்த, சீக்கிரம் போய் விடு, இராவணனால் உனக்கு ஏதாவது ஆபத்து வந்து விடும் என்று ஆதங்கப் படுகிறான்".



யுத்த களம். முதன் முதலாக கும்ப கர்ணன் இராமனை பார்க்கிறான்.
என்ன சொல்லி இருப்பான் ?
மூன்று விஷயங்கள் சொல்கிறான் இராமனிடம்.....
அடுத்து வரும் blog - ல் பார்க்கலாம்