கலிங்கத்துப் பரணி - விடுறா, ஆனா விடாதடா
கலிங்கத்துப் பரணி என்ற நூல் ஜெயங்கொண்டார் என்ற புலவரால் எழுதப் பட்டது.
எழுதிய காலம் கி.பி. 1112 என்று சொல்கிறார்கள்.
ஆயிரம் வருஷம் முந்தியது.
குலோத்துங்க மன்னன் கலிங்கத்தை வென்றதை பாராட்டி எழுதிய பாடல்.
பரணிக்கு ஒரு புலவன் ஜெயங்கொண்டார் என்று சிறப்பு பெற்றவர்.
காதல், வீரம், அந்த கால வாழ்கை முறை, என்று பல விஷயங்களை சேர்த்து எழுதி இருக்கிறார்.
அதில் கடை திறப்பு என்று ஒரு பகுதி.
ஜொள்ளர்களுக்கு பெரிய விருந்து.
வள்ளுவரின் காமத்துப் பாலோடு போட்டியிடும் பாடல்கள்.
படித்து முடித்தவுடன், உதட்டோரம் ஒரு மெல்லிய புன்னகையையை வரவழைக்கும் பாடல்கள்.
கடை (வாசல்) திறப்பு என்ற பகுதியில், வீரர்கள் போர் முடிந்து வீட்டிற்கு வருகிறார்கள்.
அவர்களின் மனைவியோ, காதலியோ அவர்கள் மேல் ஊடல் கொண்டு கதவை திறக்காமல் முரண்டு பண்ணுகிறார்கள்.
அவர்களை சமாதனம் பண்ணி கதவை திறக்க சொல்லும் பாடல்களின் தொகுப்பு.
romance இன் உச்ச கட்டம் !