Showing posts with label சிறு பஞ்ச மூலம். Show all posts
Showing posts with label சிறு பஞ்ச மூலம். Show all posts

Tuesday, August 13, 2019

சிறுபஞ்ச மூலம் - பெண்டிர் சிறப்பு

சிறுபஞ்ச மூலம் - பெண்டிர் சிறப்பு 


ஒரு குடும்பத்தில், பெண்ணின் பங்களிப்பு மிக அதிகம்.  ஒரு குடும்பத்தை நடத்திச் செல்வதே பெண்ணின் பெருமை   என்று தமிழ் பேசுகிறது.

"நாங்கள் ஏன் குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டும். எங்களுக்கு வேற வேலை இல்லையா ? எது எக்கேடு கெட்டு போனால் எங்களுக்கு என்ன. எங்களுக்கு சுதந்திரம் வேண்டும். வீட்டைப்  பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. வேண்டுமானால் ஆண்கள் பார்த்துக் கொள்ளட்டும் "

என்று சில பெண்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அது சரியா தவறா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  இந்த வாதத்தை திருமணம் முடிவதற்கு முன் அவர்கள் பிள்ளை வீட்டாரிடம் சொல்லிவிட்டால் பின் பிரச்சனை இல்லை. இந்தப் பெண் இப்படித்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். அதில் ஒரு நேர்மை இருக்கும்.

அது ஒரு புறம்  இருக்கட்டும். எத்தனையோ சீரழிவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பெண்ணின் சிறப்பாக சிறுபஞ்ச மூலம் என்ற நூல் சிலவற்றை சொல்லுகிறது.

முதலாவது, வீட்டின் வரவு செலவு கணக்கை பராமரிப்பது பெண்ணின்  பெருமை என்று அது சொல்கிறது. ஆணுக்கு சம்பாதிக்கத் தெரியும். அதை எப்படி சரியான வழியில் செலவு செய்வது என்பது பென்ன்க்குத்தான் தெரியும் என்கிறது.

இரண்டாவது, செலவு மட்டும் செய்தால் போதாது, கொஞ்சம் மிச்சம் பிடித்து அதை சரியான வழியில் முதலீடு செய்து அந்த செல்வத்தை பெருக்குவதும் பெண்ணின் பெருமை என்று பேசுகிறது.

மூன்றாவது, உறவினர்கள் பயந்து ஓடும்படி பேசக் கூடாது என்கிறது.  விருந்தை உபசரிப்பது பெண்ணின் பெருமை.

நான்காவது, தெய்வத்தை தான் மட்டும் வழிபட்டால் போதாது, வீட்டில் உள்ள மற்றவர்களையும் தொழச் செய்ய வேண்டும். எல்லாரையும் எழுப்பி, குளிக்க வைத்து, சாமி முன்னால் நின்று கும்பிடப் பண்ண வேண்டியது பெண்ணின் பெருமை.



பாடல்

வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்
வெருவாமை வீழ்ந்துவிருந் தோம்பித்-திருவாக்குந்
தெய்வதையு மெஞ்ஞான்றுந் தேற்ற வழிபாடு
செய்வதே பெண்டிர் சிறப்பு.


பொருள்

வருவாய்க்குத் = வீட்டின் வருமானத்துக்கு

 தக்க = தக்கபடி

வழக்கறிந்து = வழக்கம் அறிந்து, வழங்குதலை அறிந்து

சுற்றம் = உறவினர்கள்

வெருவாமை = பயப்படாமல் (அப்பா, அவளா, இராட்சசி )

வீழ்ந்து = வணங்கி

விருந் தோம்பித் = விருந்தை உபசரித்து

திருவாக்குந் = நல்ல நூல்களில் சொன்னவற்றையும்

தெய்வதையு = தெய்வத்தையும்

மெஞ்ஞான்றுந் = எப்போதும் (எஞ்ஞான்றும்)

தேற்ற = தெளிவாக

வழிபாடு = வழிபாடு

செய்வதே =செய்வதே

 பெண்டிர் சிறப்பு. = பெண்ணின் சிறப்பு

பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை நிலை நிறுத்துவது பெண் தான் என்று அது பேசுகிறது.

பெண்ணுக்கு பெரிய பொறுப்பை தமிழ் தந்திருக்கிறது. காரணம், அவளின் தகுதி கருதி.

எங்களுக்கு தகுதியும் இல்லை, எங்களுக்கு பொறுப்பும் வேண்டாம் என்று சொல்லித் திரியும் விட்டேறிகளை நாம் தள்ளி வைப்போம்.

சிறு வயதில் ஒரு பெண் பிள்ளை இவற்றை அறியும் போது, அவளுக்குள் ஒரு நிர்வாகத் திறமை வளரும்.

நான் ஒரு வீட்டை நிர்வாகம் பண்ணப் போகிறேன் என்று அவள் நினைக்கத் தலைப் படும்போது, தானே அவள் அதை கற்றுக் கொள்வாள்.

அப்படி இருந்த நாம், இன்று இப்படி ஆகிக் கொண்டிருக்கிறோம்.

சரியா தவறா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_13.html

Saturday, June 23, 2012

சிறு பஞ்ச மூலம் - ஒரு அறிமுகம்


சிறு பஞ்ச மூலம் - ஒரு அறிமுகம்


பஞ்சம் என்றால் ஐந்து.
சிறு என்றால் சின்னது
ஐந்து சிறிய வேர்களை (மூலம்) கொண்டு உருவாக்கிய மருந்து எப்படி உடலுக்கு நன்மை செய்கிறதோ, அது போல், இந்த சிறு பஞ்ச மூலம் பாடல்கள் நம் வாழ்க்கைக்கு நன்மை செய்யும்.
அதில் இருந்து எனக்குப் பிடித்த சில பாடல்களை தருகிறேன்.