Showing posts with label நீரும் மோரும். Show all posts
Showing posts with label நீரும் மோரும். Show all posts

Sunday, June 3, 2012

இலக்கியத்தில் நகைச்சுவை - நீரும் மோரும்


இலக்கியத்தில் நகைச்சுவை - நீரும் மோரும்


தமிழ் இல்லக்கியத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை. நகைச்சுவை, கிண்டல், நையாண்டி, நக்கல் என்று எல்லாம் நிறைந்து கிடக்கிறது.

நகைச்சுவையில் காளமேகம் முதல் இடம் வகிக்கிறார். சிலேடை, கிண்டல் எல்லாம் அவருக்கு கைவந்த கலை.

ஒரு முறை அவர் ஒரு ஆயர் பெண்ணிடம் மோர் கேட்டார். அந்த மோரில், மோரை விட தண்ணீர் அதிகம் இருந்தது. அந்தக் காலத்திலேயே கலப்படம் அவ்வளவு இருந்திருக்கிறது !

அந்த மோரை பார்த்து பாடுகிறார்...

"வானத்தில் இருக்கும் போது மேகம் என்று பெயர் பெற்றாய்,
மண்ணில் வந்த பின் நீர் என்று பேர் பெற்றாய்,
ஆய்ச்சியர் கையில் வந்த பின், மோர் என்று பெயர் பெற்றாய்
இப்படி மூன்று பெயர் உனக்கு"

என்று தண்ணியான அந்த மோரை பற்றிப் பாடுகிறார்.