கம்ப இராமாயணம் - இனி துன்பம் இல்லை
இரவெல்லாம் இருள் கவிழ்ந்திருக்கிறது.
சூரியன் வந்த பின், இருள் இருந்த இடம் தெரிவதில்லை.
அது போல
இராமா,
இதுவரை எப்படியோ தெரியாது,
ஆனால் நீ வந்த பின், இந்த உலகில் துன்பம் என்று ஒன்று இருக்க முடியாது என்கிறான் விஸ்வாமித்திரன்.
எங்கே ?
இராமன் பாதத் துளி பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்ற இடத்தில்.
மிக மிக அருமையான பாடல், ஆழமான பாடலும் கூட....