Showing posts with label NDP. Show all posts
Showing posts with label NDP. Show all posts

Thursday, July 19, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் ஜாக்கிரதை


நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் ஜாக்கிரதை


வீட்டில் காவலுக்கு நாய் வைத்து இருப்பவர்கள் "நாய் ஜாக்கிரதை" என்று போர்டு மாட்டி இருப்பார்கள்.

"இங்கு காவலுக்கு நாய் இருக்கிறது. பார்த்து வாருங்கள். ஜாக்கிரதையாய் இருங்கள்" என்று வருபவர்களை எச்சரிக்கை விடுவார்கள்.

பேருந்து நிலையம், புகை வண்டி நிலையம் போன்ற பொது இடங்களில் "பிக் பாக்கெட் ஜாக்கிரதை" என்று எழுதி வைத்து இருப்பார்கள். 

நம்மாழ்வார் அது மாதிரி "பெருமாள் ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை விடுகிறார்.

இந்த பெருமாள் இருக்கிறாரே அவரிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்.

உங்கள் மனதையும், உயிரையும் நீங்கள் அறியாமலே அவன் எடுத்துக் கொள்வான், சரியான கள்வன்.

மனதை திருடுவது மட்டும் அல்ல, திருடிய பின், அந்த இடத்தில் தன்னை இட்டு நிரப்பி விடுவான்.

உங்களுக்கு நீங்கள் இழந்தது கூட உங்களுக்குத் தெரியக் கூட தெரியாது....எனவே அவனிடம் ஜாக்கிரதையாய் இருங்கள். என்று அன்பாக எச்சரிக்கார்...

அந்தப் பாசுரம் 

Tuesday, July 10, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனதினால் நினைக்கலாமே


நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனதினால் நினைக்கலாமே


நம் வாழ்க்கை பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது.

நிற்கவோ, யோசிக்கவோ எதற்குமே நேரம் இல்லை.

இதில், கோவிலுக்குப் போக எங்கே நேரம் இருக்கப் போகிறது. அதிலும் ஸ்ரீரங்கம் போன்ற சிறந்த புண்ணிய தலங்களுக்குப் போக நேரம் இருக்கவே இருக்காது.

நேரம் இல்லை என்ற சாக்கு இன்று நேற்று அல்ல, தொண்டரடிப் பொடியாழ்வார் காலத்தில் இருந்தே இருந்திருக்கிறது.

கோவிலுக்குப் போக நேரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இறைவனை மனதினால் நினைக்கலாமே ? அதற்க்குக் கூடவா நேரம் இருக்காது என்று கேட்கிறார்.

பாசுரம்


Tuesday, April 3, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - குலசேகரப் படி

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
------------------------------------------------------------------------------------------------
செடியாய வல்வினைகள் = செடி என்றால் பாவம் என்று ஒரு பொருள் உண்டு. செடி போன்ற, சிக்கல் நிறைந்த, ஒன்றிலிருந்து ஒன்று பிறக்கும் படியான வல் வினைகள்.

தீர்க்கும் திருமாலே = அந்த கொடிய வினைகளை தீர்க்கும் திருமாலே

நெடியானே! = உயர்ந்தவனே. உலகளந்த பெருமாள் அல்லவா அவன்.

வேங்கடவா! = திரு வேங்கட மலையின் மேல் உறைபவனே

நின்கோயி லின்வாசல் = உன்னுடைய கோயில் வாசலில்

அடியாரும் = அடியவர்களும்

வானவரு மரம்பையரும் = வானவரும், அரம்பையரும்

கிடந்தியங்கும் = கிடந்து இயங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே= படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே

இன்றும் கூட பெருமாள் கோயில் படிகளை "குலசேகரப் படி " என்று கூறும் வழக்கம் உள்ளது.