கணவனோ காதலனோ போரில் அடிபட்டு கிடக்கிறான்.
அவனை தேடி அந்தப் பெண் போகிறாள்.
நேரமோ
இரவு நேரம்
அவன் அடிபட்டு கிடப்பதை பார்க்கிறாள்.
இறக்கவில்லை. ஆனால் அவனால்
எழுந்து நடக்க முடியாது.
அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு துக்கம் பொங்கி பொங்கி
வருகிறது. வாய் விட்டு அழ வேண்டும் போல இருக்கிறது. அழுதால் அந்த சத்தம் கேட்டு
பக்கத்து காட்டில் இருந்து புலி ஏதும் வந்து விடுமோ
என்று பயப் படுகிறாள். அவனிடம்
சொல்கிறாள் "உன்னை தூக்கி செல்லலாம் என்றாள் நீயோ கனமான ஆளாய் இருக்கிறாய்.
என்னால் உன்னை தூக்க முடியாது. என் வளையல் அணிந்த கையை பிடித்துக் கொள், மெல்ல நடந்து அந்த மலை அடிவாரம் போய் விடலாம்" என்கிறாள்.
காதலும் வீரமும் ததும்பும் அந்தப்
பாடல்