Showing posts with label saambal. Show all posts
Showing posts with label saambal. Show all posts

Saturday, June 2, 2012

பட்டினத்தார் - பிடி சாம்பாலகும் வாழ்க்கை


பட்டினத்தார் - பிடி சாம்பாலகும் வாழ்க்கை


பட்டினத்தார், இருந்த செல்வத்தையெல்லாம் ஒரே நாளில் உதறித் தள்ளி விட்டு உண்மையையை தேடி திரிந்தார்.

அவர் கண்ட உண்மைதான் என்ன?

எதுவும் நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் அவரை மிகவும் பாத்திருக்கிறது. 

நிரந்தரமான ஏதோ ஒன்றை தேடி அவர் அலைந்திருக்கிறார்.
செல்வம், பெண்கள், பிள்ளைகள், உறவுகள் ஏன் நமது உடம்பே கூட நிரந்திரம் அல்ல என்று அறிந்த அவர் சாஸ்வதமான ஒன்றை தேடி அலைந்திருக்கிறார்.

கிடைத்ததா இல்லையா என்று அவருக்குத்தான் தெரியும்.
[
அவருடைய பாடல்கள் எளிமையானா பாடல்கள்.

நிலையாமையை பற்றி அவர் போல் யாரும் அவ்வளவு ஆழமாக சொல்லி இருகிறார்களா என்று தெரியவில்லை.