Showing posts with label thiruvempaavai. Show all posts
Showing posts with label thiruvempaavai. Show all posts

Friday, May 1, 2015

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை - பாகம் 2

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை - பாகம் 2


அவள் ஒரு அழகான இளம் பெண். அவளுடைய தோழிகளோடு பேசிக் கொண்டிருக்கிறாள்.

"டீ , நாளைக்கு காலைல நாம எல்லாம் கோவிலுக்குப் போவோமா "

தோழிகள்: அம்மாடி, நம்மால முடியாதுடி...மார்கழி குளிரு...எலும்பு வர எட்டி பாஞ்சு கடிக்கும்...நம்மால எழுந்திருக்க முடியாதுடி ..நீ வேண்ணா போயிட்டு வா தாயி...

அவள்: சரி, உங்களுக்கு என்ன பிரச்சனை...காலைல எழுந்திருக்கிறது தான...கவலைய விடுங்கடி...நான் வந்து உங்க எல்லாரையும் எழுப்புறேன்...போதுமா

என்று சொன்னவள் தூங்கிப் போனாள் ....அவளுடைய தோழிகள் எல்லோரும் அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள் அவளை எழுப்ப.

தோழிகள்: எங்கள வந்து எழுப்புறேன்னு சொல்லிட்டு, இங்க நல்லா தூங்குறதப் பாரு....எந்திரிடி

அவள்: சரிடி...ஏதோ தூங்கிட்டேன்...ரொம்பத்தான் ரேக்குரீங்களே ...கோவிச்சுகாதடி ...இதோ இப்போ வந்துர்றேன் என்று  குளியல் அறை நோக்கி ஓடினாள் ...

தோழிகள்: ஆமண்டி...உன் பேச்ச கேட்டு வந்தோம் பாரு...எங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....


பாடல்

`முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, "என்
அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்'.
`பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?'
`எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?'
`சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?'
`இத்தனையும் வேண்டும் எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்!



பொருள்

`முத்து அன்ன = முத்தைப் போன்ற

வெள் = வெண்மையான

நகையாய்! = புன்முறுவலைக் கொண்டவளே

முன் வந்து, = எங்கள் முன்னாள் வந்து

எதிர் எழுந்து, = எங்களுக்கு முன்னால் எழுந்து

"என் அத்தன் = என் தந்தை

ஆனந்தன் = என்  ஆனந்தம் ஆனவன்

அமுதன் = எனக்கு அமுதம் போன்றவன்

என்று = என்று

அள்ளூறித் = வாயில் எச்சில் ஊறி

தித்திக்கப் பேசுவாய் = இனிக்க இனிக்கப் பேசுவாய்

வந்து உன் கடை திறவாய் = வந்து உன் வாசல் கதவை திற

`பத்து உடையீர்! = இறைவன் மேல் பற்று உடையீர்

ஈசன் பழ அடியீர்! = ஈசனுக்கு ரொம்ப நாளாகவே அடியவர்களாக இருப்பவர்களே

பாங்கு உடையீர்! = நல்ல குணம் நலம் உள்ளவர்களே

புத்து அடியோம் = நான் புதிதாக வந்த அடியவள்

புன்மை தீர்த்து = என்னுடைய குறைகளை பொறுத்து

ஆட்கொண்டால், பொல்லாதோ? = என்னையும்  உங்களோடு சேர்த்துக் கொண்டால் பொல்லாதோ

`எத்தோ நின் அன்புடைமை? = "ஆஹா !, என்ன  உன்னுடைய அன்பு"

எல்லோம் அறியோமோ?' = எங்களுக்கு எல்லாம் தெரியும்டி

`சித்தம் அழகியார் , = நல்ல சிந்தனை உள்ளவர்கள்

 பாடாரோ நம் சிவனை?' = நம் சிவனைப் பாடுவார்கள்

`இத்தனையும் வேண்டும் = இத்தனயும் வேண்டும்

எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்! = எங்களுக்கு, என் பாவையே

மிக மிக இனிய பாடல்.

இதன் ஆழ்ந்த அர்த்தங்களை மேலும் சிந்திப்போம்.




================ பாகம் 2 ================================================

உலகில் எது வேண்டுமானாலும் நடக்கும், ஆனால் ஒரு பெண் இன்னொரு பெண்ணை அழகானவள்  என்று சொல்லுவது மட்டும் நடக்கவே நடக்காது. 

இங்கு, தோழியர்கள் "முத்தைப் போன்ற வெண்மையான புன்னகை உள்ள பெண்ணே"  என்று கூறுகிறார்கள். இது நடக்கவே நடக்க முடியாத ஒன்று. 

அதற்கு ஒரு காரணமும் பின்னால் சொல்கிறார் மணிவாசகர்....

"சித்தம் அழகியோர்" சித்தம் அழகானால் பொறாமை போகும், மற்றவர்களை மனம் நிறைய புகழ முடியும். 

உடல் மட்டும் அழகாக இருந்தால் போதாது சித்தமும் அழகாக இருக்க வேண்டும். 

உடல் அழகாக இருக்க என்னனமோ செய்கிறோம். உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி, நல்ல உடைகள், வண்ணச் சாயங்கள், முடி திருத்துதல், என்று ஆயிரம் செய்கிறோம். 

என்றாவது நம் சித்தம் அழகாக இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்த்து இருக்கிறோமா ?

அதை எப்படி அழகு படுத்துவது ?

சித்தம் கோணல் மாணலாக இருக்கிறது. அதை சரி செய்ய முயல வேண்டும்...உயர்ந்த கருத்துகளை படிக்க வேண்டும், நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும்.  கண்ணாடி முன் நின்று உடலை அழகு படுத்துவது போல  கேள்வி  கேட்டு, சிந்தனை செய்து மனதையும் அழகு படுத்த வேண்டும். 

பொறாமை, கோபம், காமம், களவு, சோம்பேறித்தனம், அறியாமை  என்று ஆயிரம் அழுக்குகள் நம் சித்தத்தின் மேல் படிந்து கிடக்கிறது.  அவற்றை எல்லாம் விலக்கி , சித்தத்தை அழகு படுத்த வேண்டும். 


அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய்,

பேச்சு தித்திக்க வேண்டும். நம் பேச்சு மற்றவர்களுக்கு இனிமை தருகிறதா என்று  சிந்திக்க வேண்டும். சிலர் பேசினால் கசக்கும், உரைக்கும், கரிக்கும்....அப்படி இருக்கக் கூடாது....பேச்சு தித்திக்க வேண்டும்.

இந்தப் பெண்ணின் பேச்சு தித்ததாம்...ஏன் ? அத்தன், ஆனந்தன், அமுதன் என்று இறைவனின்  பெருமைகளை கூறி கூறி அவள் பேச்சு தித்திப்பாக இருந்தது.

எதைப் பேசினாலும் தித்திப்பாக பேசி பழகுங்கள்.

சித்தம் அழகானால், அதில் இருந்து வெளிப்படும் பேச்சும் தித்திப்பாக இருக்கும்.


சித்தம் அழகாகும் போது சிரிப்பும் அழகாகும். முத்தைப் போன்ற சிரிப்பு பிறக்கும்.  

முத்தில் அப்படி என்ன சிறப்பு ? பட்டை தீட்டாமலேயே ஒளி விடுவது முத்து. இயற்கையாகவே  அதற்கு ஒளி உண்டு. 

சித்தம் அழகாகும் போது முகம் மலர்ந்து சிரிப்பும் அழாக மாறும். 

பேச்சு அழகாக மாறும். 

இன்று முதல் சித்தத்தை அழகு செய்யத் தொடங்குங்கள். 

மன மாசுகளை அகற்றுங்கள். 

சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை 

சித்தம் அழகானால் இறைவன் வெளிப் படுவான்...இறை உணர்வு தானே தோன்றும். 

பாடினால் ஒரு வேளை சித்தம் அழகாகுமோ ?



Wednesday, April 29, 2015

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை


அவள் ஒரு அழகான இளம் பெண். அவளுடைய தோழிகளோடு பேசிக் கொண்டிருக்கிறாள்.

"டீ , நாளைக்கு காலைல நாம எல்லாம் கோவிலுக்குப் போவோமா "

தோழிகள்: அம்மாடி, நம்மால முடியாதுடி...மார்கழி குளிரு...எலும்பு வர எட்டி பாஞ்சு கடிக்கும்...நம்மால எழுந்திருக்க முடியாதுடி ..நீ வேண்ணா போயிட்டு வா தாயி...

அவள்: சரி, உங்களுக்கு என்ன பிரச்சனை...காலைல எழுந்திருக்கிறது தான...கவலைய விடுங்கடி...நான் வந்து உங்க எல்லாரையும் எழுப்புறேன்...போதுமா

என்று சொன்னவள் தூங்கிப் போனாள் ....அவளுடைய தோழிகள் எல்லோரும் அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள் அவளை எழுப்ப.

தோழிகள்: எங்கள வந்து எழுப்புறேன்னு சொல்லிட்டு, இங்க நல்லா தூங்குறதப் பாரு....எந்திரிடி

அவள்: சரிடி...ஏதோ தூங்கிட்டேன்...ரொம்பத்தான் ரேக்குரீங்களே ...கோவிச்சுகாதடி ...இதோ இப்போ வந்துர்றேன் என்று  குளியல் அறை நோக்கி ஓடினாள் ...

தோழிகள்: ஆமண்டி...உன் பேச்ச கேட்டு வந்தோம் பாரு...எங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....


பாடல்

`முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, "என்
அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்'.
`பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?'
`எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?'
`சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?'
`இத்தனையும் வேண்டும் எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்!



பொருள்

`முத்து அன்ன = முத்தைப் போன்ற

வெள் = வெண்மையான

நகையாய்! = புன்முறுவலைக் கொண்டவளே

முன் வந்து, = எங்கள் முன்னாள் வந்து

எதிர் எழுந்து, = எங்களுக்கு முன்னால் எழுந்து

"என் அத்தன் = என் தந்தை

ஆனந்தன் = என்  ஆனந்தம் ஆனவன்

அமுதன் = எனக்கு அமுதம் போன்றவன்

என்று = என்று

அள்ளூறித் = வாயில் எச்சில் ஊறி

தித்திக்கப் பேசுவாய் = இனிக்க இனிக்கப் பேசுவாய்

வந்து உன் கடை திறவாய் = வந்து உன் வாசல் கதவை திற

`பத்து உடையீர்! = இறைவன் மேல் பற்று உடையீர்

ஈசன் பழ அடியீர்! = ஈசனுக்கு ரொம்ப நாளாகவே அடியவர்களாக இருப்பவர்களே

பாங்கு உடையீர்! = நல்ல குணம் நலம் உள்ளவர்களே

புத்து அடியோம் = நான் புதிதாக வந்த அடியவள்

புன்மை தீர்த்து = என்னுடைய குறைகளை பொறுத்து

ஆட்கொண்டால், பொல்லாதோ? = என்னையும்  உங்களோடு சேர்த்துக் கொண்டால் பொல்லாதோ

`எத்தோ நின் அன்புடைமை? = "ஆஹா !, என்ன  உன்னுடைய அன்பு"

எல்லோம் அறியோமோ?' = எங்களுக்கு எல்லாம் தெரியும்டி

`சித்தம் அழகியார் , = நல்ல சிந்தனை உள்ளவர்கள்

 பாடாரோ நம் சிவனை?' = நம் சிவனைப் பாடுவார்கள்

`இத்தனையும் வேண்டும் = இத்தனயும் வேண்டும்

எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்! = எங்களுக்கு, என் பாவையே

மிக மிக இனிய பாடல்.

இதன் ஆழ்ந்த அர்த்தங்களை மேலும் சிந்திப்போம்.



Monday, June 24, 2013

திருவெம்பாவை - எய்யாமற் காப்பாய்

திருவெம்பாவை - எய்யாமற் காப்பாய்


அழகான சின்ன கிராமம். அந்த கிராமத்தில் ஒரு கோவில். அந்த கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு திருக் குளம். அந்த குளத்தில் சில தாமரை மலர்கள் மலர்ந்து இருக்கின்றன. அந்த தாமரையில் தேன் குடிக்க வண்டுகள் வருகின்றன. வண்டுகளின் ரீங்காரம் அந்த அதி காலையில் தெளிவாகக் கேட்கிறது.

அதி காலை நேரத்தில் சில பெண்கள் அந்த குளத்தில் நீராட வருகிறார்கள்.
மார்கழி மாதம். குளிர் காற்று உயிர் உரசி போகும் நேரம்.குளத்தின் நீர் ஜில் என்று இருக்கிறது. தண்ணீரில் கால் வைத்தால் குளிர் எலும்பு வரை எட்டி பாயும்.

அந்த பெண்கள் ஆனது ஆகட்டும் என்று நீரில் "முகேர்" என்று குதித்து விட்டார்கள்.

குளிர்கிறது . சிறிது நேரத்தில் குளிர் பழகி விட்டது. தண்ணீர் சுகமாக இருக்கிறது.

தூரத்தில் கோவில் மணி அடிக்கிறது.

அந்த பெண்கள்  இறைவனின் திருவடிகளை  போற்றி பாடுகிறார்கள்.

"ஐயா, வழி வழியாய் உந்தன் அடியார்களாக வாழ்ந்து வருகிறோம்.  சிவந்த சிவந்த மேனியில் பால் போன்ற திருவெண்ணீறு அணிந்தவனே.  அந்த உமா தேவியின் மணவாளனே.  நீ அடியார்களை ஆட் கொண்டு விளையாடும் விளையாட்டில், பலன் அடைந்தவர்கள் சென்ற வழிகளை அறிந்தோம். எங்களை கை விடாமல் காப்பாற்றுவாய்"

அவர்களின் பாடலும், வண்டுகளின் ஒலியும் , கோவிலின் மணியும், அவர்கள் நீராடும் போது தோன்றும் நீரின் சல சலப்பு ஒலியும் காற்றில் கலக்கின்றது....


பாடல்

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்.


பொருள்


Tuesday, May 28, 2013

திருவெம்பாவை - ஓத உலவா ஒரு தோழன்

திருவெம்பாவை - ஓத உலவா ஒரு தோழன் 


நட்பு என்பது மிக உயர்ந்த உறவு.

நம் குற்றங்கள் எல்லாம் தெரிந்தும் நம்  அன்பு செலுத்துபவன் நண்பன் / நண்பி.

இறைவனும் அப்படித்தானே ? நம் குறைகள் எல்லாம் தெரிந்தும் நம் மேல் அன்பு செலுத்துபவன் அவன்.

இறைவனை தோழா என்று உரிமையோடு அழைக்கிறார் மாணிக்கவாசகர்.

பாடல்

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
    கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.  



பொருள்


Wednesday, December 19, 2012

திருவெம்பாவை - வணங்க கூசும் மலர் பாதம்


திருவெம்பாவை - வணங்க கூசும் மலர் பாதம்

இது மார்கழி மாதம். மாணிக்க வாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை பற்றி சிந்திக்க உகந்த மாதம்.


ஏதோ ஒரு காரியம் வேண்டி ஒருவரை பார்க்க போகிறோம். நமக்கு அவரிடம் ஒரு காரியம் ஆக வேண்டி இருப்பதால், அவரை பற்றி கொஞ்சம் புகழ்ந்து பேசுகிறோம். அப்படி பேசும் போது நமக்குள் ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்யும். ஒரு கூச்சம் இருக்கும்.

நாம் இறைவனை தொழும்போதும் ஏதோ ஒரு காரியத்திற்காகத்தான் தொழுகிறோம். அது அவனுக்கும் தெரியும். அவன் நம்மை பார்த்து புன்முறுவல் பூக்கிறான். நமக்கே ஒரு சின்ன வெட்கம் பிறக்கிறது.

விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்  பாதம் 

நிறைய பேர் இறைவனைப் பற்றி நிறைய புத்தகங்களைப் படிப்பார்கள், வேதம், புராணம், கீதை, தேவாரம், பிரபந்தம், திருவாசகம் என்று...மனதிற்குள் அன்பு , கருணை, இருக்காது. மற்ற உயிர்களை தன் உயிர் போல் நினைக்கும் நேசம் இருக்காது. உலகம் எப்படி போனால் என்ன, நமக்கு வேண்டியது உணவு, உறக்கம், சுகம் என்று இருப்பார்கள்.

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப் பகல் நாம் 
பேசும் போது 
இப்போது போதார் அமளிக்கே நேசமும் வைத்தாய்

இறைவன் இருக்கிறானா, இல்லையா ? இருந்தால் அவனை காண்பி...அவன் இருந்தால் ஏன் இதை இப்படிச் செய்யவில்லை, அதை அப்படி செய்யவில்லை என்று கால காலமாய் ஆத்திகர்களும் நாத்திகர்களும் யார் சொல்வது சரி என்று சண்டை இட்டுக் கொண்டிருகிறார்கள். இப்படி சண்டை போட நேரம் இதுவல்ல. நமக்கு நிறைய நேரம் இல்லை. வாழ்நாள் வேகமாக முடிந்து கொண்டே இருக்கிறது. அவன், தன் அருளை, நமக்குத் தர காத்திருக்கிறான். நாம் இங்கே சண்டை போட்டுக் கொண்டு விளையாடி கொண்டிருக்கிறோம். இவற்றை விட்டு விட்டு அவனிடம் நேரே போனால் அவன் அருள் கிடைக்கும்.

இவையும் சிலவோ, விளையாடி ஏசும் இடம் இதுவோ 
விண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும் மலர் பாதம் 
தந்து அருள வந்து அருளும் 

அப்படியா? அவன் எங்கே இருக்கிறான் ? எங்கு போனால் அவன் அருள் கிடைக்கும். அவன் விலாசம் என்ன ? அதை தானையா இத்தனை நாள் தேடிக் கொண்டிருக்கிறோம்.....அவன் தேசம் தேசமாக சுற்றி கொண்டிருப்பவன், எல்லா தேசத்திலும் இருப்பவன், சிவ லோகத்தில் இருப்பவன். அப்படி அவனை உங்களால் எல்லா இடத்திலும் அவனைக் காண முடியவில்லையா ? சிவ லோகம் போக முடியாதா ? பரவாயில்லை, இதோ இங்கே தில்லை சிற்றம்பலத்தில் இருக்கிறான்.

ஒரு எச்சரிக்கை, அவனிடம் போகும் முன்னால். அவனிடம் போய் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி நின்றால் நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள். நீங்கள் யார், அவன் யார், நீங்கள் அவன் மேல் வைத்த அன்பு எது என்று ஒன்றும் தெரியாது எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் மறைந்து போய் விடும்....

ஈசனார்க்கு அன்பு யார், யாம் யார் 

பாடல்