Sunday, June 3, 2012

திருவாசகம் - பொம்மலாட்டம்


திருவாசகம் - பொம்மலாட்டம்


இந்த உலகம், வான், மண், காற்று, ஒளி எல்லாவற்றையும் பார்க்கும் போது இதை எல்லாம் யாரோ படைத்து இருப்பார்களோ என்று மனதிற்கு தோன்றுகிறது.

ஆனால், அறிவை கொண்டு ஆராய்ச்சி செய்து பார்த்தால் அப்படி யாரும் இருப்பதாய் தோன்றவில்லை.

என்ன தான் செய்வது? அவன் உண்மையா? அல்லது உண்மை இல்லாதவனா? 

இரண்டும் தான் என்கிறார் மணி வாசகர்.

பொம்மலாட்டம் நடக்கிறது. அறியாத குழந்தைகளுக்கு ஏதோ அந்த பொம்மைகள் தானே எல்லாம் செய்வது போல தோன்றும்.

அறிந்த பெரியவர்களுக்குத் தெரியும் அந்த பொம்மைகளை ஆட்டுவிப்பது வேறு யாரோ என்று.

சில சமயம் பொம்மைகளே நாம் தான் எல்லாம் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்....

இது என் சொத்து, என் மனைவி, என் பிள்ளைகள் என்று மனிதர்கள் நினைப்பது அப்படிதான் என்கிறார் மணி வாசகர்...

முத்தொள்ளாயிரம் - காதலும் நாணமும்


முத்தொள்ளாயிரம் - காதலும் நாணமும்


அவன் இப்ப இந்த வழியாகத்தான் போவான்.

வாசல்ல போய் நின்னா பாக்கலாம்.

ஆனா, எவ்வளவு நேரம் நிக்கிறது. யாராவது பார்த்தா என்னை என்ன நினைப்பாங்க?

இப்ப பாக்காட்டி, அப்புறம் சாயந்தரம் அவன் திரும்பி வரும் வரை பார்க்க முடியாது.

அவனை பாக்கனும்னு ஆசையா இருக்கு, ஆனா இன்னொரு பக்கம் தயக்கம்மாவும், வெட்கமாவும் இருக்கு...

இப்ப நான் போகட்டா ? இல்ல போகாம இருக்கட்டா?

இப்படி, காதலுக்கும், நாணத்திற்கும் நடக்கும் போராட்டத்தை படம் பிடிக்கிறது, முத்தொள்ளாயிரம்.

ஒரு ஏழை. மானஸ்த்தன். வறுமை அவனை வாட்டுகிறது. யாரிடமாவது உதவி கேட்டே ஆகவேண்டும். ஆனால் கேட்க தயக்கம். கேட்காமலும் முடியாது.

அப்படி அந்த ஏழை படும் மனநிலையை, காதலுக்கும், நாணத்திற்கும் உள்ள போராட்டத்தோடு ஒப்பிடுகிறார் முத்தொளாயிரக் கவிஞர்.

Saturday, June 2, 2012

விவேக சிந்தாமணி - முன்னும் பின்னும்


விவேக சிந்தாமணி - முன்னும் பின்னும் 


விவேக சிந்தாமணி தமிழ் நீதி நூல்களில் சற்று வித்தியாசனமான நூல்.

பொதுவாகவே நீதி நூல்கள் அதை செய், இதை செய்யாதே என்று பெருசுக மாதிரி அட்வைஸ் பண்ணும். 

விவேக சிந்தாமணி அப்படி பட்ட நூல் அல்ல. ரொம்ப ப்ராக்டிகல். அதில் இருந்து ஒரு பாடல்:

பட்டினத்தார் - பிடி சாம்பாலகும் வாழ்க்கை


பட்டினத்தார் - பிடி சாம்பாலகும் வாழ்க்கை


பட்டினத்தார், இருந்த செல்வத்தையெல்லாம் ஒரே நாளில் உதறித் தள்ளி விட்டு உண்மையையை தேடி திரிந்தார்.

அவர் கண்ட உண்மைதான் என்ன?

எதுவும் நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் அவரை மிகவும் பாத்திருக்கிறது. 

நிரந்தரமான ஏதோ ஒன்றை தேடி அவர் அலைந்திருக்கிறார்.
செல்வம், பெண்கள், பிள்ளைகள், உறவுகள் ஏன் நமது உடம்பே கூட நிரந்திரம் அல்ல என்று அறிந்த அவர் சாஸ்வதமான ஒன்றை தேடி அலைந்திருக்கிறார்.

கிடைத்ததா இல்லையா என்று அவருக்குத்தான் தெரியும்.
[
அவருடைய பாடல்கள் எளிமையானா பாடல்கள்.

நிலையாமையை பற்றி அவர் போல் யாரும் அவ்வளவு ஆழமாக சொல்லி இருகிறார்களா என்று தெரியவில்லை.

கலிங்கத்துப் பரணி - முத்தமிட எத்தனித்தபோது


கலிங்கத்துப் பரணி - முத்தமிட எத்தனித்தபோது


பெண், ஆணை விட அதிகம் உணர்ச்சி வசப் படுகிறாளோ? 

ஊடலும், கூடலும், கோபமும், புன்னகையும், காதலும், கண்ணீரும் மாறி மாறி சோப்புக் குமிழியின் நிறம் போல மாயா ஜாலம் காட்டும் கலிங்கத்துப் பரணி பாடல் இங்கே.

அவள் அவனோடு ஊடல் கொண்டு இருக்கிறாள்.

அவன் அவளை சமாதனப் படுத்துகிறான்.

அவள் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கி வருகிறாள்.

அவனைப் பார்த்தால் அவளுக்குப் பாவமாய் இருக்கிறது. சரி போனால் போகிறது என்று ஊடலை விட்டு, அவனைப் பார்த்து ஒரு புன்னகை சிந்துகிறாள்.

அது போதாதா நம்ம ஆளுக்கு.

அவள் முகத்தை கையில் ஏந்தி முத்தம் தர முனைகிறான்.

அவன் தன் மேல் கொண்ட காதலை அவள் அறிகிறாள்.

அவளையும் அறியாமல் அவள் கண்ணில் நீர் சுரக்கிறது."ஏய், என்ன இது, அசடு மாதிரி அழுதுகிட்டு" என்று அவள் கண்ணீரை தன் விரலால் துடைக்கிறான்....

முத்தொள்ளாயிரம் - ஊர் அறிந்த கனவு


முத்தொள்ளாயிரம் - ஊர் அறிந்த கனவு


அவளுக்கு அவன் மேல் அப்படி ஒரு காதல்.

இரவும் பகலும் அவன் நினைவாகவே இருக்கிறாள்.

அவள் கனவில் அவன் வருகிறான். 

இருவரும் கனவில் சந்தோஷமாக பேசி, சிரித்து மகிழ்ந்து இருக்கின்றனர்.

மறு நாள் காலை. அவளுடைய தோழிகள் அவளைப் பார்க்க வருகின்றனர்.

"என்னடி, ரொம்ப சந்தோஷமா இருக்காப்ல இருக்கு? என்ன விஷயம்?  வாயெல்லாம் பல்லா இருக்கு....நேத்து உன் ஆளு கனவுல வந்தானா ? ஏதாவது சில்மிஷம் பண்ணினானா? என்ன விஷயம் சொல்லு. " என்று அவளை கிண்டல் பண்ணினர்.

"என் கனவுல அவன் வந்ததது இவளுகளுக்கு எப்படி தெரியும்" என்று அவள் யோசிக்கிறாள்...

Friday, June 1, 2012

ஐந்திணை ஐம்பது - காதல் தாகம்


ஐந்திணை ஐம்பது - காதல் தாகம்


ஐந்திணை ஐம்பது

இந்த நூல் தமிழர்களின் அக வாழ்க்கையை பற்றி கூறும் நூல்.

எழுதியவர் மாறன் பொறையனார்.

நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்.

1700 வருடம் தாண்டி விட்டது.

கால நதியில் அடித்துச் செல்லப் படாமல் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டது.

மாறன் பொறையனார் நினைத்தாவது பார்த்திருப்பாரா, அவரின் பாடல்கள் இன்டர்நெட்-இல் உலாவும் என்று !

சாதாரண மக்களின் வாழ்க்கையை பற்றி கூறும் நூல்.

அவர்களின் ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள், காதல் இவற்றை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் பாடல்கள்.

அதிலிருந்து ஒரு பாடல்....

அதுவோ பாலை நிலம்.

சுட்டெரிக்கும் வெயில்.

நா வரளும் அனல் காற்று.

தப்பி வந்த இரண்டு மான்கள் தண்ணீருக்காக அலைந்து கொண்டு இருந்தன.

கடைசியில் ஒரு சின்ன சுனை கண்ணில் பட்டது.

அதில் இருந்ததோ கொஞ்சம் போல் தண்ணீர்.

இரண்டு மானுக்கும் பத்தாது.

ஒன்றை ஒன்று பார்த்து கொண்டன.

பெண் மான் சொன்னது, "நீ முதலில் குடி, பின் நான் குடிக்கிறேன்" என்று.

ஆண் மானும் அதையே சொன்னது.

யார் முதலில் குடிப்பது என்று அவர்களுக்குள் அன்புச் சண்டை.

கடைசியில் ஆண் மான் "சரி, நானே குடிக்கிறேன்" என்று நீரில் வாய் வைத்து "சர்" என்று உறிஞ்சியது.

ஆனால் உண்மையில் குடிக்கவில்லை. சப்த்தம் மட்டும் தான் செய்தது.

ஆண் மான் நீர் பருகி விட்டதாக எண்ணி, பெண் மானும் குடித்தது.

முதலில் ஆண் மானுக்கு கொடுத்ததால், பெண் மானுக்கு ஒரு சந்தோஷம்.

தான் குடிக்காமல், பெண் மானுக்கு கொடுத்ததில், ஆண் மானுக்கு சந்தோஷம்.

அந்தப் பாடலை படிப்பதில் நமக்கு சந்தோஷம்.