கம்ப இராமாயணம் - இராவணன் என்ற கலைஞன்
இராவணனைப் போன்ற ஒரு கலைஞனை பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.
இராமனின் அம்பு பட்டு, உடல் எல்லாம் புண்ணாகி அரண்மனை வருகிறான்.
அவன் பாட்டனிடம் இராமனின் வில்லாற்றலை விவரிக்கிறான்...எப்படி ?
"இராமனின் வில்லில் இருந்து அம்புகள் புறப்பட்டு வந்தன ... எப்படி தெரியுமா ?
நல்ல கவிஞர்களின் நாவில் இருந்து வரும் சிறப்பான சொற்களைப் போல.
அது மட்டுமா? அந்த சொற்கள் சேர்ந்து ஒரு இலக்கண ஒழுங்கோடு (தொடை) இருப்பதைப் போல அந்த அம்புகள் ஒன்றன் பின் ஒன்றாய் ஒரு ஒழுங்கோடு வந்தன.
சிறந்த சொல்லும், இலக்கணமும் இருந்து விட்டால் போதுமா ? நல்ல இசை நயம் வேண்டாமா ? இசையோடு கூடிய, இலக்கண வரைமுறையில் வந்த பொருள் செறிந்த கவிஞனின் சொற்களை போல இராமனின் அம்புகள் வந்தன என்று தன்னை துன்புறுத்திய அம்புகளை கூட கவி நயத்தோடு இரசித்த இராவணன் எப்பேர்பட்ட கலைஞன்"
அந்தப் பாடல்.....