Sunday, June 3, 2012

கம்ப இராமாயணம் - இராவணன் என்ற கலைஞன்


கம்ப இராமாயணம் - இராவணன் என்ற கலைஞன்


இராவணனைப் போன்ற ஒரு கலைஞனை பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.

இராமனின் அம்பு பட்டு, உடல் எல்லாம் புண்ணாகி அரண்மனை வருகிறான்.

அவன் பாட்டனிடம் இராமனின் வில்லாற்றலை விவரிக்கிறான்...எப்படி ?

"இராமனின் வில்லில் இருந்து அம்புகள் புறப்பட்டு வந்தன ... எப்படி தெரியுமா ?

நல்ல கவிஞர்களின் நாவில் இருந்து வரும் சிறப்பான சொற்களைப் போல.

அது மட்டுமா? அந்த சொற்கள் சேர்ந்து ஒரு இலக்கண ஒழுங்கோடு (தொடை) இருப்பதைப் போல அந்த அம்புகள் ஒன்றன் பின் ஒன்றாய் ஒரு ஒழுங்கோடு வந்தன.

சிறந்த சொல்லும், இலக்கணமும் இருந்து விட்டால் போதுமா ? நல்ல இசை நயம் வேண்டாமா ? இசையோடு கூடிய, இலக்கண வரைமுறையில் வந்த பொருள் செறிந்த கவிஞனின் சொற்களை போல இராமனின் அம்புகள் வந்தன என்று தன்னை துன்புறுத்திய அம்புகளை கூட கவி நயத்தோடு இரசித்த இராவணன் எப்பேர்பட்ட கலைஞன்"

அந்தப் பாடல்.....

நள வெண்பா - சூடான நிலா


நள வெண்பா - சூடான நிலா 


காதலனை காணாமல் தவிக்கும் காதலிக்கு நிலவு குளிராது, சுடும் என்று நிறைய படித்து இருக்கிறோம்.

நளவெண்பா பாடிய புகழேந்தி புலவர் ஒரு படி மேலே போகிறார்.

அந்த கொதிக்கும் நிலாவினால், வானம் கொப்புளம் கொண்டது...அந்த கொப்புளம் தான் நட்சத்திரங்கள் என்று கூறுகிறார்.

என்ன ஒரு அருமையான கற்பனை.

இலக்கியத்தில் நகைச்சுவை - நீரும் மோரும்


இலக்கியத்தில் நகைச்சுவை - நீரும் மோரும்


தமிழ் இல்லக்கியத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை. நகைச்சுவை, கிண்டல், நையாண்டி, நக்கல் என்று எல்லாம் நிறைந்து கிடக்கிறது.

நகைச்சுவையில் காளமேகம் முதல் இடம் வகிக்கிறார். சிலேடை, கிண்டல் எல்லாம் அவருக்கு கைவந்த கலை.

ஒரு முறை அவர் ஒரு ஆயர் பெண்ணிடம் மோர் கேட்டார். அந்த மோரில், மோரை விட தண்ணீர் அதிகம் இருந்தது. அந்தக் காலத்திலேயே கலப்படம் அவ்வளவு இருந்திருக்கிறது !

அந்த மோரை பார்த்து பாடுகிறார்...

"வானத்தில் இருக்கும் போது மேகம் என்று பெயர் பெற்றாய்,
மண்ணில் வந்த பின் நீர் என்று பேர் பெற்றாய்,
ஆய்ச்சியர் கையில் வந்த பின், மோர் என்று பெயர் பெற்றாய்
இப்படி மூன்று பெயர் உனக்கு"

என்று தண்ணியான அந்த மோரை பற்றிப் பாடுகிறார். 

திருவாசகம் - பொம்மலாட்டம்


திருவாசகம் - பொம்மலாட்டம்


இந்த உலகம், வான், மண், காற்று, ஒளி எல்லாவற்றையும் பார்க்கும் போது இதை எல்லாம் யாரோ படைத்து இருப்பார்களோ என்று மனதிற்கு தோன்றுகிறது.

ஆனால், அறிவை கொண்டு ஆராய்ச்சி செய்து பார்த்தால் அப்படி யாரும் இருப்பதாய் தோன்றவில்லை.

என்ன தான் செய்வது? அவன் உண்மையா? அல்லது உண்மை இல்லாதவனா? 

இரண்டும் தான் என்கிறார் மணி வாசகர்.

பொம்மலாட்டம் நடக்கிறது. அறியாத குழந்தைகளுக்கு ஏதோ அந்த பொம்மைகள் தானே எல்லாம் செய்வது போல தோன்றும்.

அறிந்த பெரியவர்களுக்குத் தெரியும் அந்த பொம்மைகளை ஆட்டுவிப்பது வேறு யாரோ என்று.

சில சமயம் பொம்மைகளே நாம் தான் எல்லாம் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்....

இது என் சொத்து, என் மனைவி, என் பிள்ளைகள் என்று மனிதர்கள் நினைப்பது அப்படிதான் என்கிறார் மணி வாசகர்...

முத்தொள்ளாயிரம் - காதலும் நாணமும்


முத்தொள்ளாயிரம் - காதலும் நாணமும்


அவன் இப்ப இந்த வழியாகத்தான் போவான்.

வாசல்ல போய் நின்னா பாக்கலாம்.

ஆனா, எவ்வளவு நேரம் நிக்கிறது. யாராவது பார்த்தா என்னை என்ன நினைப்பாங்க?

இப்ப பாக்காட்டி, அப்புறம் சாயந்தரம் அவன் திரும்பி வரும் வரை பார்க்க முடியாது.

அவனை பாக்கனும்னு ஆசையா இருக்கு, ஆனா இன்னொரு பக்கம் தயக்கம்மாவும், வெட்கமாவும் இருக்கு...

இப்ப நான் போகட்டா ? இல்ல போகாம இருக்கட்டா?

இப்படி, காதலுக்கும், நாணத்திற்கும் நடக்கும் போராட்டத்தை படம் பிடிக்கிறது, முத்தொள்ளாயிரம்.

ஒரு ஏழை. மானஸ்த்தன். வறுமை அவனை வாட்டுகிறது. யாரிடமாவது உதவி கேட்டே ஆகவேண்டும். ஆனால் கேட்க தயக்கம். கேட்காமலும் முடியாது.

அப்படி அந்த ஏழை படும் மனநிலையை, காதலுக்கும், நாணத்திற்கும் உள்ள போராட்டத்தோடு ஒப்பிடுகிறார் முத்தொளாயிரக் கவிஞர்.

Saturday, June 2, 2012

விவேக சிந்தாமணி - முன்னும் பின்னும்


விவேக சிந்தாமணி - முன்னும் பின்னும் 


விவேக சிந்தாமணி தமிழ் நீதி நூல்களில் சற்று வித்தியாசனமான நூல்.

பொதுவாகவே நீதி நூல்கள் அதை செய், இதை செய்யாதே என்று பெருசுக மாதிரி அட்வைஸ் பண்ணும். 

விவேக சிந்தாமணி அப்படி பட்ட நூல் அல்ல. ரொம்ப ப்ராக்டிகல். அதில் இருந்து ஒரு பாடல்:

பட்டினத்தார் - பிடி சாம்பாலகும் வாழ்க்கை


பட்டினத்தார் - பிடி சாம்பாலகும் வாழ்க்கை


பட்டினத்தார், இருந்த செல்வத்தையெல்லாம் ஒரே நாளில் உதறித் தள்ளி விட்டு உண்மையையை தேடி திரிந்தார்.

அவர் கண்ட உண்மைதான் என்ன?

எதுவும் நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் அவரை மிகவும் பாத்திருக்கிறது. 

நிரந்தரமான ஏதோ ஒன்றை தேடி அவர் அலைந்திருக்கிறார்.
செல்வம், பெண்கள், பிள்ளைகள், உறவுகள் ஏன் நமது உடம்பே கூட நிரந்திரம் அல்ல என்று அறிந்த அவர் சாஸ்வதமான ஒன்றை தேடி அலைந்திருக்கிறார்.

கிடைத்ததா இல்லையா என்று அவருக்குத்தான் தெரியும்.
[
அவருடைய பாடல்கள் எளிமையானா பாடல்கள்.

நிலையாமையை பற்றி அவர் போல் யாரும் அவ்வளவு ஆழமாக சொல்லி இருகிறார்களா என்று தெரியவில்லை.